புதுக்கவிதை

எங்களால் மனிதர்களை மந்திரிகளாக்க முடிகிறது
மந்திரிகளைத்தான் மறுபடியும் மனிதர்களாக்க
முடிவதில்லை கவிஞர் வாலி


இந்த சைக்கிள்செயின் மட்டும்
அன்றே கிடைத்திருந்தால்
பதினாலே நொடிக்குள் பாரதப்போரில்
துரியோதனன் ஜெயித்திருப்பான்
கவிஞர் சண்முகம்


அந்தப் பிரபுவின் புத்திரனும்
அந்தக்கூலிப்பயலும்
எவ்வளவுகாலம் ஒரே பள்ளியில் படிப்பது
அதனால்தான்
நகராட்சிப்பள்ளிகள்
நவோதயப்பள்ளிகள்
என்று இரு பிரிவாக்கினோம்
ஓட்டைக்கல்வி சில நூறுபேருக்கு
வளரும்போதே வர்க்கசாஸ்திரம்
கவிஞர் கந்தர்வன்

''புதுக்கவிதைகளில் பன்முகப்பார்வை'' புத்தகத்திலிருந்து திரட்டியது

0 comments:

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது