பங்கு

தாத்தா செத்ததும்
ஒலக்க ஒரல்
அம்மி ஆட்டுக்கல்லுன்னு
ஒவ்வொண்ணுக்கும் போட்டி.
கறவ மாடும் கண்ணும் எனக்கு
காளையும் கிடாரியும் எனக்குன்னு
அப்பாவுக்கும் சித்தப்பாவுக்கும்
அத்தன அடிதடி.
பாயில் சுருண்டு கிடக்கும் பாட்டிய
என்க்கு எனக்குனு
யாரும் சொல்லக் காணோம்...

ரூபாய் 2000 பரிசு பெற்ற கவிதை
-விஜிலா தேரிராஜன்(ஆனந்த விகடன் 14-4-02)

0 comments:

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது