EMAAR WATER SPECTACLE


Emaar Properties said on Monday it plans to build one of the largest fountains in the world as the centrepiece of its Downtown Burj Dubai project. Arabian Business reveals what the real estate giant has in store

The fountains, which has yet to be named, will be capable of shooting water over 150 metres into the air - the height of a 50-storey building - and stretch over 275 metres - the length of two football fields

பெட்ரோல் இல்லாம ஓட்ட !!!


Kamalini Mukhejee in Tamil . . .



The film Gamyam directed by Jagarlamudi Radhakrishna (Krish) received critical acclaim and is one of the few big hits of the year. The film is now being remade in several languages.
While Dasari Narayana Rao will remake the film in Hindi, AM Rathnam is remaking the film in Tamil.
The name of Ravi Krishna, son of Rathnam is being heard prominently as the hero for the film. Kamalini Mukhejee who played the role of Janaki in the Telugu version has now been signed up to play the same role in Tamil .
Illan Kanna will direct the Tamil version while Krish himself will direct the Hindi version.
Courtesy: http://searchandhra.com/cinema/

நமீதாவின் ஓபனிங் பாடல்!



நமீதாவின் ஓபனிங் பாடல்!
ஊறுகாய் மாதிரி கவர்ச்சிக்காக மட்டுமே நமீதாவை பயன்படுத்தி வந்த நிலைமை மாறி, இப்போது அவருக்காக ஓபனிங் பாடலே வைக்கும் அளவுக்கு போய்விட்டது தமிழ் சினிமா. அதிலும் குறிப்பாக சுந்தர்.சி. போன்ற நடிகர்களின் கமர்ஷியல் அம்சமே நமீதாவின் கவர்ச்சிதான் என்கிற அளவுக்கு நிலைமை போய்விட்டது. 'தீ' படத்தில் சுந்தர்.சி.க்கு உதவும் கேரக்டரில் வருகிறார் நமீதா. இந்த படத்தில் தான் நமீதாவுக்கு ஓபனிங் பாடல் வைத்து, ஹீரோ ரேஞ்சுக்கு பில்ட் அப் செய்திருக்கிறார்கள். இதுதவிர, 'பராசக்தி'யில் வரும் 'கா... கா... கா... ஆகாரம் உண்ண...' என்ற பாடலையும் ரீ-மிக்ஸ் செய்திருக்கிறார்கள்.
(மூலம் - வெப்துனியா

குடை - டூ-இன்-ஒன் !


ஒரே குடை பிடியில் இரு குடைகள்-புதிய கண்டு பிடிப்பு !


மூன்றாவது அணி !




courtesy: Dinamani.com

நிழல் குறிப்புகள்


நிழலுக்காய்ப் போனேன்
மரநிழல் நீண்டு கிடந்தது
இலை நிழல்கள் ஆடின
கொடி நிழல் விரல்களைச் சுற்றியது
பழ நிழலைப் பாதம் சூடியது
என் கண்கள் நிழலிடையே தெறிக்கையில்
மேக நிழல்
நிழலையெல்லாம் கவ்வியது
சற்றே
சூரியன் வெயிலை அவிழ்க்கையில்
பூ நிழலைப் பற்றிச் சொல்ல
வார்த்தை ஏது. . .
--------------------------------------------------------------------------------------------------நன்றி; கவிஞர் தேன்மொழி(இசையில்லாத இலையில்லை)

நடிகை ஜெயசித்ராவுக்கு விருது !


சென்னையில் நடந்த விழாவில் பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்த், நடிகை ஜெயசித்ராவுக்கு கண்ணதாசன் விருது வழங்கப்பட்டது. இந்த விருதுகளை இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் வழங்கினார்.

கான மயில் ஆட


நாம் அறியாதது அல்ல.அவ்வை தன் மூதுரையில் கல்லாதான் கற்ற கவி பற்றிக் கூறியது
"கான மயில் ஆடக் கண்டிருந்த வான்கோழி தானும் அதுவாகப் பாவித்துத் தானும் தன்பொல்லாச் சிறகை விரித்து ஆடினால் போதுமே கல்லாதான் கற்ற கவி "

(மயில் படம் மட்டும்தான் போட முடிஞ்சுது,வான் கோழி
போட முடியலை ! )

தவிப்பு


சந்திரனில் கால் வைத்துக்
குடியேற நினைக்கின்றார்!
நான் செவ்வாயில் இதழ் வைத்து
குடியிருக்கத் தவிக்கின்றேன் !

நாயச் சகுனம்

மகனுக்கு பெண் பார்க்க கிளம்பும்போது,எதிரே லட்சுமி தேவி வர
சகுனம் சரியல்லைன்னு ,திரும்பிடலாம்னு சொன்னது ஆண் நாய்.மீண்டும் கிளம்பும்போது
சரஸ்வதி வர,அப்போதும் சகுனம் சரியில்லைன்னு சொல்லிடுச்சி.

மூதேவி எதிரே வந்தா நல்ல சகுனமாக இருக்கும்னு சொல்ல,
விளக்கம் கேட்ட மனைவி நாய்கிட்டே இப்படி சொல்லிச்சாம்;

லட்சுமி,சரஸ்வதி இதுகளெல்லாம் சரிக்கிடாயாது, இன்னைக்கு
ஒருத்தன்கிட்டே இருப்பா,நாளைக்கு ஒருத்தனைகிட்டே போயிடுவா.
நிலையா வாழத்தெரியாதவ எதுக்க வந்தா நல்ல சகுனமா?

மூதேவிமட்டும் இல்லைன்னா பயித்தியம் பிடிச்சு போகும்.
தூக்கம்தான் அருமருந்து.அதுல இந்த அம்மா வஞ்சகம் செய்ததே
கிடையாது.தாக்கம் மறு உயிர்ப்பு.ஆயுள் நீளும்,ஆரோக்யம் கிட்க்கும்!-னு
சொல்லிச்சாம்.
----------------------------------------------------------------------------------------------
(கி.ராஜநாராயணன் கதைகளில் படித்தது)

அமெரிக்காவில் தசாவதாரம்

கமல்ஹாசனின் தசாவதாரம்
படம், அமெரிக்காவில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதாகச் செய்திகள் வந்துள்ளன. திரையிடப்பட்ட அனைத்து தியேட்டர்களிலும் மாபெரும் வரவேற்பு கிடைத்துள்ளதாம்.
அமெரிக்காவில் சுமார் 50 நகரங்களில் தசாவதாரம் திரையிடப்பட்டுள்ளது. இந்தத் திரையரங்குகளில் வார இறுதி நாட்களில் அனைத்துத் தியேட்டர்களிலும் ஹவுஸ் ஃபுல் ஆகியுள்ளதாம்.
வசூலைப் பொறுத்தவரையில், வார இறுதி நாட்களில் இதுவரை எந்த தென்னிந்தியப் அமெரிக்காவில் தசாவதாரம் படங்களுக்கும் கிடைத்திராத அளவு தசாவதாரத்திற்கு வரவேற்புக் கிடைத்துள்ளதாம்.
தசாவதாரத்தின் தெலுங்குப் பதிப்புக்கும் பெருத்த வரவேற்பு கிடைத்துள்ளது. சரியாகச் சொல்வதானால் தெலுங்குத் திரையுலகின் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் படங்களுக்கு இணையான வரவேற்பு தசாவதாரத்திற்குக் கிடைத்துள்ளதாம்.
அமெரிக்கர்களும் படத்தைப் பார்க்கத் திரளுகிறார்கள். படத்தின் ஸ்பெஷல் எபக்ட்ஸ் சிறப்பாக இருப்பதாக அவர்கள் பாராட்டுகிறார்களாம். (டிஎன்எஸ்)

courtesy:www.tamil.sify.com

சின்ன சின்ன மூக்குத்தி

சின்னச்சின்ன மூக்குத்தியாம்
செகப்புக்கல்லு மூக்குத்தியாம்
கன்னிப் பொண்ணே உன் ஒய்யாரம் கண்டு
கண்ணைச் சிமிட்டுற மூக்குத்தியா...ம்
கண்ணைச் சிமிட்டுற மூக்குத்தியாம்- பொண்ணே!
கண்ணைச் சிமிட்டுற மூக்குத்தியா..ம்

கழுத்தை சுத்தியோர் அட்டியலாம்
உன் கட்டழகே ஒரு பட்டியலாம்
முத்தும் சிரிப்பில் மறஞ்சிருக்கும்- பேச்சு
ஒவ்வொண்ணும் தேனா இனிச்சிருக்கும்

சின்னச்சின்ன மூக்குத்தியாம்
செகப்புகல்லு மூக்குத்தியாம்

வெத்தில போட்டா உன் வாய் செவக்கும்- கன்னம்
வெக்கத்தினாலே செவந்திருக்கும்
உழைக்கும் மேனி கருத்திருக்கும்-உன்
முகத்தில் தாமரை பூத்திருக்கும்

சின்னச்சின்ன மூக்குத்தியாம்
செகப்புகல்லு மூக்குத்தியாம்
கன்னிப் பொண்ணே உன் ஒய்யாரம் கண்டு
கண்ணைச் சிமிட்டுற மூக்குத்தியா...ம்
கண்ணைச் சிமிட்டுற மூக்குத்தியாம்-பொண்ணே
கண்ணைச் சிமிட்டுற மூக்குத்தியா..ம்
-----------------------------------------------------------
சினிமா பாடல்களில் பிடித்த பாடல்-
படம்; பாதை தெரியுது பார்
பாடல்;பட்டுக் கோட்டை கல்யாண சுந்தரம்
பாடியவர்; டி.எம்.செளந்தரராஜன்

சிரித்தது மத்தாப்பூ

தீயிட்டவரையும்
பார்த்து சிரித்தது
மத்தாப்பூ
-------------------------------------

காட்டிக் கொடுப்பதில்
முதல் பரிசு
கண்ணாடிக்கு
-------------------------------------

விலகினால் சுடுகிறது
நெருங்கினால் குளிர்கிறது
காதல் நெருப்பு
-------------------------------------

ஓட ஓட விரட்டினார்கள்
திரும்பியதும் ஓடினார்கள்
புரிந்து கொண்டது நாய்
-------------------------------------

விட்டில் பூச்சிகளின்
நிரந்தரக் கல்லறை
விளக்குச் சுடர்
-------------------------------------

வானில் கண்ணீரைத் துடைக்கவா
மனிதனின் கரம் நீளுகிறது
மரத்தை வெட்ட
-------------------------------------

காக்கும் கடவுளின்
கோயிலில்
கொள்ளை
-------------------------------------

அறிவியல் யுகத்து
மூட நம்பிக்கை
அரசு வேலை
-------------------------------------

காற்றில் பயனித்தது
செவியைச் சேரும் விருந்தாளி
வானொலி
------------------------------------

படித்ததில பிடித்த ஹைகூ கவிதைகள்;
பாக்யா(ஜூன் 20-26-2008) இதழில் வாசகர்கள் எழுதியது

பூரணம் வைத்த பாகற்காய்

பாக‌ற்காயை எ‌ப்படி செ‌ய்தாலு‌ம் அத‌ன் கச‌ப்பு சுவை‌க்காக பல‌ர் ‌விரு‌ம்ப மா‌ட்டா‌ர்க‌ள். அவ‌ர்களையு‌ம் பாக‌ற்கா‌ய் சா‌ப்‌பிட வை‌க்க இ‌ந்த பூரண‌ம் வை‌த்த பாக‌ற்கா‌ய்தா‌ன் ஒரே வ‌ழி. இது ஆ‌ந்‌திரா‌வி‌ல் செ‌ய்யப‌ப் டு‌ம் சமைய‌ல் முறை.

எடு‌த்து வை‌த்து‌க் கொ‌ள்ள வே‌ண்டியவை

பாகற்காய் - 8
வெங்காய‌ம் - 4
கா‌ய்‌ந்த ‌மிளகா‌ய் - 4
பு‌ளி‌த்த மோ‌ர் - ஒரு கப்
எண்ணெய் - ஒன்றரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
இஞ்சி, பூண்டு விழுது - ஒரு மேசைக்கரண்டி
உப்பு - தேவைகேற்ப

செய்முறை

பாகற்கா‌யினை ந‌ன்கு கழு‌வி சு‌த்த‌ம் செ‌ய்து கொ‌ள்ளவு‌ம்.

நீளமான பாக‌‌ற்கா‌யினை குறு‌க்காக நறு‌க்‌கி இர‌ண்டு பாக‌ங்களாக ‌பி‌ரி‌த்து அதனை ‌நீளவாக்கில் ஒரு ‌கீற‌ல் போ‌ட்டு உள்ளே உள்ள விதைகளையும், சோற்றினையும் நீக்கி வைக்கவும். (ஒரு ப‌க்க‌த்தை ம‌ட்டு‌ம்தா‌ன் ‌வெ‌ட்ட வே‌ண்டு‌ம். இர‌ண்டு து‌ண்டுகளாக ‌பி‌ரி‌த்து‌விட‌க் கூடாது.)

பா‌த்‌திர‌த்‌தி‌ல் பு‌ளி‌த்த மோ‌ர், உ‌ப்பு, ம‌ஞ்ச‌ள் தூ‌ள் சே‌ர்‌த்து அதனுட‌ன் பாகற்காயை போ‌ட்டு வேக ‌விடவு‌ம்.

வெ‌ங்காய‌ம், கா‌ய்‌ந்த ‌மிளகா‌யை ‌மி‌க்‌சி‌யி‌ல் போ‌ட்டு ஒ‌ன்று‌ம் பா‌தியுமாக அரை‌த்து அதனுட‌ன் இ‌ஞ்‌சி, பூ‌ண்டு ‌விழு‌தையு‌ம் கல‌ந்து வை‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம்.

பாக‌ற்கா‌ய் வெ‌ந்தது‌ம் அ‌தனை எடு‌த்து மோ‌ர் வடியு‌ம்படி இறு‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம்.

பி‌ன்ன‌ர் கல‌ந்து வை‌த்து‌ள்ள வெ‌ங்காய‌க் கலவையை பாக‌ற்கா‌யினு‌ள் வை‌த்து, வாணலியில் ‌சி‌றிது எண்ணெய் ஊற்றி சூடானதும் பாகற்காய்களை அதில் போட்டு மிதமான தீயில் ந‌ன்றாக வறு‌த்து எடுக்கவும்.

மெதுவாக ‌எ‌ல்லா‌ப் ப‌க்கமு‌ம் ‌திரு‌ப்‌பி ‌விடவு‌ம். வேகமாக செ‌ய்தா‌ல் பாக‌ற்கா‌யி‌ன் உ‌ள்ளே உ‌ள்ள பூரண‌ம் வெ‌ளியே வ‌ந்து ‌விடு‌ம்.
--------------------------------------------------------------------------------------
courtesy:tamil.webdunia.com

One alnoe cannot make two

One alone cannot make two,
But two alone can tally three.
If some find sums enough to do,
Some find some their ecstasy.

Yet do not add unless you love,
For greater sums require more,
And though in proof might pleasant prove,
In life might prove a lifelong chore.

Valentines ought best beware
Of multiplying much too soon.
While two might err, far more must
What didn't add up one afternoon.
--------------------------------------------
courtesy: http://www.poemsforfree.com/onealo.html

ரொம்பத்தான் கொஞ்சுகிறார்கள்

குழந்தைகள் ஆண்டு என்று சொல்லி
ரொம்பத்தான் கொஞ்சுகிறார்கள்
குழந்தையை அல்ல, மனைவியை !
-----------------------------------------------

மனக்குயில்கள் ஓய்வதில்லை-என்ற கவிதைத்
தொகுதியில் படித்தது(ஆசிரியர்;குமரி அமுதன்)

ஆயிரம் பூக்கள் மலர

ஆயிரம் விளக்குகள் எரிய
ஒரு தீக்குச்சி போதும்
ஆயிரம் பூக்கள் மலர
ஒரு விதை போதும்

தியாகத்தின் முடிவில்தான்
திசைகளே தெரிகின்றன.

கடமையில். . .
தீக்குச்சியாய் தன்னை எரித்துக் கொண்டால்
விதையாய்த் தன்னைப் புதைத்துக் கொண்டால்
ஓர் ஆசிரியர் போதும் ஒவ்வொரு பள்ளியிலும்
ஆயிரம் மாணவர்கள் பிரகாசிப்பார்கள்.
----------------------------------------------

படித்ததில் பிடித்த கவிதை
கவிதையாக்கம்; ஆரூர்.சேகர்(கல்கி-27-5-90

கனவுகள் இல்லாமல்...

நான் காயங்களைத் தொகுத்து வைத்தேன்
பார்த்தவர்கள்
காவியம் என்றனர்
------------------------------------------

இராமன் ஆண்டால் என்ன்?
இராவணன் ஆண்டால் என்ன்?
அதிகாரிகள் அப்படியேதான்!
------------------------------------------

கனவுகள் இல்லாமல்
வாழ்வதைவிட
கனவுகளோடு மடிவது மதிப்பிற்கு உரியது.
------------------------------------------

யார் உடைத்தாலும்
யாழ் உடைந்து விடும்!
ஆனால் யார் மீட்டாலும் யாழ் இசை தருமா?
--------------------------------------------

நான் போராடி இருக்கிறேன்
என்பதை என் வெற்றிகளைப் போலவே
என் தோல்விகளும் சொல்லும்!
-----------------------------------------

ஒரு சிறகைத் தலையில் சூடி
அரசரானார்கள் நம் முன்னோர்கள்
நாமோ தங்கத்தை மகுடமாய்ச் சூடி
அதற்கு அடிமை ஆனோம்.
----------------------------------------
(இவை,படித்ததில் எனக்கு பிடித்த கவிதைகள்)

எஞ்சோட்டுப் பெண்

ஒரு பொஎனக்குத் தராமல்ழுதும்
ஒளித்து எடுத்து வரும்
எள்ளுருண்டையையோ
உமிழ்நீர் சுரக்க வைக்கும்
உளுந்தங் களியையோ
தனித்து உண்டதில்லை நீ

எனக்காக வெல்லக்கட்டிகள்
முடித்தே இருக்கின்ற
உன் சட்டைகள் இரண்டிலும்
நிரந்தரப் பழுப்புக்
கறை படிந்திருக்கும்

நம் பள்ளி நடு மதியத்து
இடைவெளிகளில்
நாகம்மா தோட்டத்து
நவ்வாப் பழங்களை
மண் ஊதித் தர நீ
மரநிழலில் காலாட்டிச்
சுவைத்திட நான்

உன்னிடத்தில் நான்
ஊடல் கொள்கையில்
ஊருணிக்கரையில் வழித்தெடுத்த
கரம்பையில்
உன் கண்ணீரும்
குழைத்தெடுத்து நீ
கொடுத்த மண் பொம்மைகள்
என் இளம் பருவத்துப்
பிரமிப்புப் பிரமிடுகள்
பொறிகடலை மாவில்
சர்க்கரை பிசைந்து
மை கலைந்த
தினத்தாள்களில் பொசிந்து
எனக்காய் எடுத்து வரும் உனக்கு
சர்க்கஸ் வித்தையின்
சாகசத்துடன் நான் செய்கின்ற
சாக்லேட் சுற்றின சரிகைக்
காகித உருவங்களே
சாகாவரம் பெற்ற
கனவு தேவதைகள்

புளியம்பட்டி வாத்தியாரின்
வழுக்கைத் தலை வரைந்து
நாம் பிடிபட்ட அன்று
எனக்காகச் சீட்டிப் பாவாடையில்
சுருட்டி வைத்திருந்த
சீத்தாப் பழ கருமுத்துக்கள் சிதறக்
காட்டிக் கொடுக்காமல்
பெஞ்சின் மேல் நீ

ஊமத்தஞ் சாறெடுத்து
ஒவ்வொரு திங்களும்
ஊற வைத்துக்
கரும்பலகை வகுப்பு கழுவ
என் முறை வரும் பொழுதோ
எப்பொழுதும் நீ துடைக்க
சுத்தக் கைகளுடன் சுகமாய் நான்

தொலைந்து விடுமென்கிற பயத்தில்
பயன்படுத்தாமலே நீ வைத்திருந்த
உனக்கான என் பரிசான அந்த
ஊதா நிறப் பேனாவின்
நிப்பு உடைந்த அன்று
ஊர்ப்பட்ட அழுகையுடன்
இருக்கன்குடி அம்மனிடம்
இவ்வருடம் போகாத
சாமி குறையேயெனப்
புலம்பித் தீர்த்தாய்.

வாத்தியார் வீட்டுப் பிள்ளை நான்
வயல்காட்டுத் தும்பைப்பூ நீ எனும்
வகுப்புப் பேதங்கள்
கல்லெறியா என்
மனக்குளத்தின்
கலையாப் பிம்பம் நீ

நான் மாடியிலும்
நீ ஊர்க்கோடியிலும்
வசித்தாலும் வர்க்கச் சாலைகள்
பிரவேசித்திராத
என் குழந்தைமை நிலவின்
முதல் தோழமைச் சுவடு நீ


இருவரையும் ஒரே கரிசல் மண்ணில்
கவனமுடன் பதியம் போட்டாலும்
பின் வந்த காலத் தோட்டக்காரனோ
பட்டணத்தில் படிப்பிப்பவளாய்
என்னையும்
பக்கத்தூர் மேஸ்திரி
மனைவியாய் உன்னையும்
பாகுபடுத்திப் படரவிட
ஏணிப் படிகளில்
விரைவாய் நானும்
சுரங்கத்து இருட்டில்
முழுதுமாய் நீயும்
காணாமல் போனோம்
என்றாலும்...

மாசித் தேருக்குத் தவறாமல்
இடித்த மாவிளக்கு மாவோடு
எனைப் பார்க்க
நசுங்கிய குடமாய்
வருடந்தோறும் உருமாறி வந்த
எஞ்சோட்டுப் பெண்ணே
சிலம்பாயி

இந்த முறை தேருக்கு
இரண்டாவது இரட்டைச் சடை
மொட்டு வர
ஒரு வேளை உனக்குச்
`சுகவீனமோ' என நான் வினவ

பின்னிருந்து
நாலாவது பிரசவத்தில்
நீ இறந்துவிட்டதாய்

மூன்றாவதைச் சுமந்திருந்த
உன் முதலாவது சொன்னபொழுது,
என் மனத்தேரின்
கடையாணி கழன்று
மகளின் மாவிளக்கில்
புதைந்து போனது.

--------------------------------------------------------
படித்ததில் பிடித்தது;
கவிதை; தமிழச்சி
courtesy:
http://kumudam.com/magazine/Snegiti/2008-06-01/pg15.php#

மின்னலாய் ஒரு

அவள் விழிகளோடு என் விழிகள் கலந்து
வார்த்தைகளோடு வார்த்தைகள் கலந்து
இன்னும் இன்னும் நெருங்கி
எனக்குள் அவளையும்
அவளுக்குள் என்னையும்
தேட முற்பட்டு
இருவருமே தோல்வியைத் தழுவி
விவாகரத்துக்காய் காத்திருக்கிறோம்.

இடையில்
ஏதோ மின்னலாய் ஒரு வாழ்க்கை
ஊரறிய மேளதாளம்
வீடு வீடாய் போசனம்
புதுத்தம்பதியை அயல் பார்த்து
மெலிதான புன்னகை சிந்தி
சுமைகளே இல்லாமல் வாழ்க்கையை
வாழ்ந்து பார்த்தோம்

சடங்கையும் மறந்து கொண்டு.
எல்லாம் மறந்து போகட்டும்
மீண்டும் அவளைக் காதலிக்க வேண்டும்
''கல்யாணம் என்ற வார்த்தையையும்

--------------------------------------------------------------
நன்றி; நிர்வாணி(http://paraparapu.com)

கண்ணாடிச் சிறகு

வேலியோரம் ஆற்றோரம்
செடியோரம் என
எங்கு போனாலும் என்னோடு
தொட்டு விளையாடக்
கட்டாயம் வரும் தும்பி

கண்ணாடிச் சிறகும் பளிங்குக்
கண்ணுமாய் மிருதுவாய்ப் பிடித்து
உள்ளங்கையில
ஒரு கல் வைத்து

''கல்லத் தூக்கு கருப்பட்டி தாரேன
கல்லத்தூக்கு கருப்பட்டி தாரேன்''
எனப் பாடுகையில்
என் உள்ளங்கையில்
குறு குறுவெனக் கவிதை எழுதும்

இன்றும் அந்த வேலியோரம்
ஆற்றோரம் செடியோரம்
சுற்றிக் கொண்டுதான் இருக்கும்
அதன் பரம்பரை

பதிமூன்றாம் நபராய்ப்
பந்து பொறுக்கிப் போடும்
ஏதாவது ஒரு சிறுவனின்
கண்ணில் படாதா அது
கவிதை சொல்லித் தர.
------------------------------------------------------
படித்ததில் ரஸித்த கவிதை
கவிதையாக்கம்; தேன்மொழி
(இசையில்லாத இலையில்லை-கவிதை தொதுதி)

நகைச்சுவை!


''எல்லா தொழிலாளர்களுக்கும் ,அவங்க கேட்டபடி சம்பளத்தை கூட்டிக்குடுத்தது தப்பா போச்சு' '''ஏன்?'''' கூட்டிக் குடுத்த குணசீலர் வாழ்க!னுகோஷம் போட ஆரம்பிச்சிட்டாங்க.''

-------------------------------------------------------------------------------------------
டாக்டர்! எனக்கு இந்த ஆபரேஷன்ல என் மூட்டு வலிபோயிடுமா?''''உயிரே போகும் போது மூட்டுவலி போகாதா என்ன?''

----------------------------------------------------------------------------------------
நிருபர் : திடீரென நீங்க ஏன்திருமணம் பண்ணிக்கிட்டீங்க?''


நடிகை : ''என் மகன் அப்பாவேணும். அப்பா வேணும்னு நச்சரிக்கிறான், அதான்.''
----------------------------------------------------------------------------------------
ஜட்ஜ் : ''நிறைய அழகிகளை வெச்சுபுளுஃபிலிம் எடுத்தியா?' 'கைதி : ''இல்லைங்க! ஒரே ஒரு கேமராமேனை வெச்சுத் தான்எடுத்தேன்.''

---------------------------------------------------------------------------------------------
''உன் புருஷனை எப்பவும்விளக்குமாறாலயோ,செருப்பாலயோ தான் அடிக்கிறே ஏன்?

''''தொட்டு தாலி கட்டின புருஷனை கை நீட்டி அடிக்கக் கூடாதுன்னு எங்கம்மா சொன்னாங்க.''
-------------------------------------------------------------------------------------------
''ஒரே தலைவலியா இருக்குதுங்க!''''மாத்திரையை போட்டுக்கம்மா...''''மாத்திரையை போட்டுகிட்டா,ஊர்லயிருந்து வந்திருக்கிற உங்கம்மா போயிடுவாங்களா?

---------------------------------------------------------------------------------------
courtesy:www.thangamonline.com

காதலிக்கு கல்யாணம்!

காதலன்: நம்ம கல்யாணத்துக்கு எங்க வீட்டுல சம்மதிக்கல. அதனால நாம ஓடி போயிடலமா?
காதலி: எங்கே ஓடி போலாம்னு சொல்லுங்க
காதலன்; நீ உங்க வீட்டுக்கு ஓடு,நான் எங்க
எங்க வீட்டுக்கு ஓடிப் போறேன்!
-----------------------------------------------------------
ஒருவர்;உங்களுக்கு பேய்,பிசாசு நம்பிக்கை உண்டா?
ம‌ற்றவ‌ர்; கல்யாணத்துக்கு முன்ன கிடையாது.இப்ப
நிறைய உண்டு!
---------------------------------------------------------------------
"உங்க கணவருக்கு திடீர் திடீர் நெஞ்சுவலிக்குதுன்னு
சொன்னாங்களே ,டாக்டர் கிட்டேயா கூட்டிப்போனீங்க?"

"இல்ல இ‌ன்சூர‌ன்‌ஸ் ஆபிஸுக்கு!


-----------------------------------------------------------------------
ஜோசியர்: நீங்க காதலிச்ச பெண்ணே உங்களுக்கு
மனைவியா ‌கிடை‌ப்பா‌ங்க!
காதலன்; இந்த தோஷத்துக்கு என்ன பரிகாரம் சுவாமி!
--------------------------------------------------------------------------

முன் யோசனை

அந்த டாக்டர் ரொம்ப முன் கூட்டியே யோசனை செஞ்சுதா‌ன் இ‌ந்த நர்சிங் ஹோமை கட்டியிருக்காரு!

எதை வச்சு அ‌ப்படி சொல்‌றீ‌ங்க?

நோயா‌ளியை அட்மிட் பண்ண வர்றவங்க வீடு, கார் இதையெல்லாம் விற்க கஷ்டப்படக்கூடாதேன்னு உள்ளுக்குள்ளேயே ரியல் எஸ்டேட், கார் விற்பனை நிலையம் இரண்டையும் திறந்து வச்சிருக்காரு‌ன்னா,பாரேன்!

------------------------------------------------------------------
courtesy:http://tamil.in.msn.com/humour

என்றும் உன்னுடன்

காதலே பிடிக்காத என் நெஞ்சில்
உன் உள்ளத்தால் காதலை மலரச் செய்தாய் !
ஒரு ஓலையில் உன் உள்ளத்தை அனுப்பியது
என் உள்ளத்தை எடுக்கவா !
என் மேல் வைத்திருக்கும் அன்பைச் சொல்லத் தெரியாமல்
நீ சொன்ன அந்த மூன்று வார்த்தையில்
உன் காதலின் ஆழத்தை புரிய வைத்த
உன்னுடன் என்றும் இருப்பேன் !
நான் என்றும் உனக்காக !!!!……

-------------------------------------------------------------------------------
படித்ததில் பிடித்த கவிதை-
கவிதையாக்கம்;Kalpanarmsh(kavikal.tamil.net)

முதலிடம் நோக்கி...

சினிமா!
சினிமாவில் பெண்கள்
ஆடைகளைக் குறைத்துக்
கொண்டே போகிறார்களே,இது
எங்குப் போய் முடியுமோ?

நிச்சயம் இதுவும்
'முதலிடம் நோக்கித்தான்(ஆதாம்-ஏவாள்)

நன்றி; கே.ஆர்.தாசன்(முகம்-இதழ்-ஜனவரி-05)

கொள்ளை அழகு !

கொள்ளை அழகு என
யாரும் அள்ளிக்கொள்ளவுமில்லை
நசுங்கி விடக் கூடாதென
யாரும் அப்புறப்படுத்தவுமில்லை
ஓரத்தில் உதிர்ந்து குவிந்திருந்தன
மஞ்சள் பூக்கள்,

பாதையில் இறந்துகிடந்தது
செம்மண் நிறப் பூனை
மலர்ச்சி மனதோடு
வருடல் விரலோடு.

இதையும் மீறி
எல்லோர்க்கும்
அவரவர்பாடு!
-----------------------------------------------------------
படித்து ரஸித்த கவிதைகளில் ஒன்று-
கவிதையாக்கம் ;கல்யாண்ஜி
(உறக்கமற்ற மழைத்துளி-கவிதைத் தொகுதி)

A MICE TRAP STORY

A mouse looked through the crack in the wall to see the farmer and his wife open a package. What food might this contain? The mouse wondered - he was devastated to discover it was a mousetrap.
Retreating to the farmyard, the mouse proclaimed the warning : There is a mousetrap in the house! There is a mousetrap in the house!
The chicken clucked and scratched, raised her head and said, " Mr.Mouse, I can tell this is a grave concern to you, but it is of no consequence to me." " I cannot be bothered by it."
The mouse turned to the pig and told him, "There is a mousetrap in the house! There is a mousetrap in the house!" The pig sympathized, but said, I am so very sorry, Mr. Mouse, but there is nothing I can do about it but pray. "Be assured you are in my prayers."

The mouse turned to the cow and said "There is a mousetrap in the house! There is a mousetrap in the house!" The cow said, "Wow, Mr. Mouse. I'm sorry for you, but it's no skin off my nose."

So, the mouse returned to the house, head down and dejected, to face the farmer's mousetrap alone. That very night a sound was heard throughout the house -- like the sound of a mousetrap catching its prey.

The farmer's wife rushed to see what was caught. In the darkness, she did not see it was a venomous snake whose tail the trap had caught. The snake bit the farmer's wife. The farmer rushed her to the hospital , and she returned home with a fever.
Everyone knows you treat a fever with fresh chicken soup, so the farmer took his hatchet to the farmyard for the soup's main ingredient. But his wife's sickness continued, so friends and neighbors came to sit with her around the clock.

To feed them, the farmer butchered the pig. The farmer's wife did not get well; she died. So many people came for her funeral, the farmer had the cow slaughtered to provide enough meat for all of them.

The mouse looked upon it all from his crack in the wall with great sadness. So, the next time you hear someone is facing a problem and think it doesn't concern you, remember -- when one of us is threatened, we are all at risk. We are all involved in this journey called life. We must keep an eye out for one another and make an extra effort to encourage one another. SEND THIS TO EVERYONE WHO HAS EVER HELPED YOU OUT AND LET THEM KNOW HOW IMPORTANT THEY ARE. REMEMBER,,,, EACH OF US IS A VITAL THREAD IN ANOTHER PERSON'S TAPESTRY; OUR LIVES ARE WOVEN TOGETHER FOR A REASON. One of the best things to hold onto in this world is a friend
(மின்னஞ்சலில் பெறப்பட்டது)

மேடையெங்கும் வாய்ச்சொற்கள்!

விழாமுடிந்து விட்டது
மறக்காமல் மடித்து
எடுத்துக்கொள்ளப்பட்டு விட்டன
சால்வைகள்.

கைவிடப்பட்ட பூச்செண்டுகள்
அநாதைகளாய்
அந்தந்த நாற்களிகளில்.

பளிங்கு போல்
கண்ணாடி குவளைகளில்
அசையாமல் இருந்தது
பருகப்படாத தண்ணீர்.

மிதிபட்டுக் கிடந்தன
மேடயெங்கும்
வாய்ச் சொற்கள்.

-------------------------------
நான் படித்து ரஸித்த கவீதைகளில் இதுவும் ஒன்று-
கவிதையாக்கம்; கவிஞர் கல்யாண்ஜி
(உறக்கமற்ற மழைத்துளி-கவிதை தொகுதி)

அழகி

அழகால் உன்னை,
ஏளனம் செய்தேன்.
என் அழகால் உன்னை,
எட்டி உதைத்தேன்.

அழகால் உன்னை,
அழவைத்துப்பார்த்தேன்.
ஒதுங்கி விடாமல்,
ஓடித்தான் வந்தாய்.

பெருமிதம் கொண்டு,
ஆட்டிப்படைத்தேன்.
காலடியில் இடமிட்டு,
எக்காளித்தேன்.

காலம் உன்னை
விலக்கி விட்டது.
என்னிடம் இருந்து
தனித்து விட்டது.

அழகைப்புகழ,
பல பேர் இன்று.
அஹங்காரம் கொள்ள,
ஆசை தான் இல்லை.

அழகை உந்தன்
விழியில் வாங்கி
அழுகையை எனக்கு
விட்டுப்போனாயோ?

என் அழகு அழுகிறது..
நீ ரசிக்க வில்லை என்று.
வந்து விடேன்....!

அழகை இன்று,
அகத்திலும் ஏற்றிக்,
காத்திருக்கிறேன் உனக்காக..

காலன் என்னை வென்றால்,
அடுத்த பிறவியிலாவது..
வந்து விடேன்....

...என் அழகை ரசிக்க....!

-----------------------------------
கவிதையாக்கம்; ஷக்திப்ரபா
courtesy:http://www.maraththadi.com/article.asp?id=288

குறுந்தொகை

விடிகாலை நீ தூங்க
விண்மீனில் விளக்கு வைப்பேன்
வெந்நீரில் நீ குளிக்க
விறகாகி தீக்குளிப்பேன்.

சுடிதாரில் கண்ணாடியா?
வைரம் வாங்கி பதிச்சி வைப்பேன்
சலூனுக்குப் போகணும்னா
சிங்கப்பூர் அனுப்பி வைப்பேன்

சாதா டி.வி.போரடிச்சா
சன் டிவி.கனெக்சன் வைப்பேன்
சுந்தர ராமசாமி
சுஜாதா புக்கு வாங்கி வைப்பேன்

சனிக்கிழமை சாயங்காலம்
ஸ்டார் ஓட்டல் கூட்டிப் போவேன்
சினிமாதான் வேணுமுன்னா
ஹோம் தியேட்டம் கட்டி வைப்பேன்

மெட்ரோ வாட்டர் வேணான்டி
நெய் ஊத்தி சமைக்கச் சொல்வேன்
மாசத்துல முப்பது நாள்
பட்டுப் புடவை எடுக்கச் சொல்வேன்

டவுன் பஸ்ஸில் கூட்டமடி
டாட்டாசுமோ அனுப்பி வைப்பேன்
நாய்க்குட்டி அது எதுக்கு?
மான் குட்டி வளர்க்கச் சொல்வேன்

என்றெல்லாம் வாக்கு தந்து
ஏமாற்ற மாட்டேன்டி
என சம்பளம் ஆயிரம்தான்
அதுக்குள்ளே வாழலாம் வா!
------------------------------------------------------------
இது நான் படித்து ரஸித்த கவிதைகளில் ஒன்று.வானை வில்லாக
வளைப்பேன் என்றெல்லாம் கதையளக்காமல் உண்மை நிலை கூறி,
கூடி வாழ காதலியை அழைக்கிறான்....
கவிதையாக்கம்; நா.முத்துக்குமார்(குமுதம்-12-7-04 )

வடிவங்கள்!

அன்புக்கு வடிவம் அம்மா !

அறிவுக்கு வடிவம் அப்பா !

பாசத்துக்கு வடிவம் குழந்தை !

கருணைக்கு வடிவம் கடவுள் !

கற்பனைக்கு வடிவம் நினைவுகள் !

காதலுக்கு வடிவம் உணர்வுகள் !

அழகுக்கு வடிவம் கண்கள் !

என் ஆசைக்கு வடிவம் நீ !!!!

courtesy:kalpanaramesh(http://kavikal.tamil.net)

நானாகவே...

வாழ்க்கை கடலுக்குள்
உயிர்த்துளியாய் விழுந்தோம்

அழகு மீன்களை
முத்துக்களை
காலைச் சூரியனை
நினைத்துக் கொண்டே..

ஆனால்
கால ஓட்டத்தில்
சாக்கடையாய்ப்
போனோம்

> கவீஞர் இரா.சிந்தன் (நானாகவே...எனைற புத்தகத்திலிருந்து)
courtesy: tamil.webdunia.com

ஒருவன் ஒருவன் முதலாளி. . .

ஒருவன் ஒருவன் முதலாளி உலகில் மற்றவன் தொழிலாளி
விதியை நினைப்பவன் ஏமாளி அதை வென்று முடிப்பவன் அறிவாளி

ஒருவன் ஒருவன் முதலாளி உலகில் மற்றவன் தொழிலாளி
விதியை நினைப்பவன் ஏமாளி அதை வென்று முடிப்பவன் அறிவாளி

பூமியை வெல்ல ஆயுதம் எதற்கு பூப்பறிக்க கோடரி எதற்கு
பொன்னோ பொருளோ போர்க்களம் எதற்கு ஆசை துறந்தால் அகிலம் உனக்கு

சைய்ய சைய்யார சைய்யார சைய்ய
சைய்ய சைய்யார சைய்யார சைய்ய

மண்ணின் மீது மனிதனுக்காசை மனிதன் மீது மண்ணுக்காசை (2)
மண்தான் கடைசியில் ஜெயிக்கிறது இதை மனம்தான் உணர மறுக்கிறது

கையில் கொஞ்சம் காசு இருதால் நீதான் அதற்கு எஜமானன்
கழுத்து வரைக்கும் காசு இருந்தால் அதுதான் உனக்கு எஜமானன்
வாழ்வின் அர்த்தம் புரிந்துவிடு வாழ்க்கையை வாரிக் குடித்துவிடு

(ஒருவன்)

வானம் உனக்கு பூமியும் உனக்கு வறப்புகளோடு சண்டைகள் எதற்கு (2)
வாழச் சொல்லுது இயற்கையடா வாழ்வில் துன்பம் செயற்கையடா

பறவைகள் என்னைப் பார்க்கும்போது நலமா நலமா என்கிறது
மொட்டுக்கள் மெல்லத் திறக்கும்போது முத்து முத்து என்கிறதே
இனிமை இனிமேல் போகாது முதுமை எனக்கு வாராது

(ஒருவன்)

courtesy: www.tamilnation.org(கவிப் பேரரசு வைரமுத்து)
(selected lyrics)

குற்ற மனசு

ஆறாயிரத்துக்கு
விற்று விட்ட பிறகும்

ராவோடு ராவாக
புதிய எஜமானனின்

தொழுவத்துக் கயிற்றை
அறுத்துக் கொண்டு

பத்து கிலோ மீட்டர்
பயணம் செய்து

மூச்சிரைத்தபடி
வீட்டு வாசலில்

வந்து நிற்கிற
வெள்ளைப் பசுவைப்

பார்க்கும் போது
உறுத்தத்தான் செய்கிறது
தனிக்குடித்தனம்
வந்தவனுக்கு

நன்றி ஆனந்த விகடன் 14-4-02(கவிஞர் ஜெ.முருகன்)

புத்தரைப்போல. . .

புத்தரைப்போல
நின்று பார்த்தேன்
கூடவில்லை

புத்தரைப்போல
அமர்ந்து பார்த்தேன்
இயலவில்லை

சுலபம்தான் என்று
புத்தரைப்போலச்
சிரிக்க முயன்றேன்

புத்தர்தான் சிரித்துக்
கொண்டிருந்தார்
என்னைப் பார்த்து
இப்போதும்!

நன்றி; கவிஞர் கல்யாண்ஜி (உறக்கமற்ற இரவுகள்)

ஆண்டவன் ஆற்றல்

அன்றெரு நாள்-நம்
தமிழன்னையின் ஓர் தவப்புதல்வன்
''அவனின்றி ஓர் அணுவும் அசையாது'' என்றான்

வருடங்கள் பல உருண்டோடி சென்றன
பின்னாளில் ஒருவன்
''புறவிசையின்றி எதுவும் அசையாது''
என்றான்.ஆனால் பின்னவன் பெற்றதோ
'பேரறிஞன்' பட்டம்,

நம் முன்னவன் பெற்றதோ
'பேதை' என்ற பட்டம்
ஆம் நண்பா!
விதைகள் ஒன்றுதான்,அவை
விதைக்கப்படும் இடங்களில்தான்
எவ்வளவு வித்தியாசம்

courtesy: ANJAC-Annual Vol XXVII 1986

ஐயனார்

ஐயனார்;

முறுக்கு மீசை,அறுவாளோடு
மிரட்டும் தோரணையில்
அமர்ந்திருக்கும்
ஐயனார் மட்டும்
உள்ளுக்குள் உடைந்தழுவார்
குழந்தைகள் தனைக்கண்டு
பயமுறும்போது!
(பெ.பாண்டியன்)
----------------------------------

கடிதம்;

கடிதம் எழுதுவதே
மறந்து விட்ட
இந்தக் காலத்திலும்
வந்துகொண்டுதானிருக்கிறது
வாங்கிய கடனை
திருப்பிக் கட்டச்சொல்லி
வங்கியிடமிருந்து!

(எஸ்.சங்கர்)
----------------------------------

சில்லறைச் சத்தம்;

பசிக்காக
பார்வையற்ற ஒருவன்
பாடும் பாடலின்
சுருதி,லயம் இரண்டையுமே
அவ்வப்போது
சரிசெய்து கொண்டிருக்கிறது
இடையிடையே தட்டில் விழும்
சில்லறைச் சத்தங்கள்.

(மோகன்)
----------------------------------

டி.வி.பாட்டி;

தொலைக் காட்சியே
கதியெனக் கிடக்கிறாள்
கதை சொன்ன
பாட்டி!

(கிருஷ்ண கிறிஸ்து முகமது)
-----------------------------------

நிழல்;

நல்லதொரு
கவிதை எழுதலாம்
என்று
வெற்றுக் காகிதத்தை
மேசைமீது வைத்தேன்
எழுதுகோலையும்
நிமிர்த்திவிட்டேன்
பூர்த்தி செய்து விட்டது
உன் நிழல்!

(சா.பாலமுருகன்)
----------------------------------
மழை;

எல்லாத் தவளைகளும்
தவறாமல் பாடுகின்றன
மழையைப் பாராட்டி
தத்தமது பாடல்களை!

(திருமயம் பெ.பாண்டியன்)

நன்றி; வாசகர் கவிதை(குமுதம் 18-6-06)

How to Add Vitamin C Into Your Diet Without Supplements

How to Add Vitamin C Into Your Diet Without Supplements
1Eat a breakfast made up of grapefruit and fresh orange juice. This is a filling breakfast that is full of vitamin C
.
Step2Have some mango as a snack between breakfast and lunch. This is healthier than a normal snack as mango is an excellent source of vitamin C.

Step3At lunchtime, have some cantaloupe as a dessert instead of a sweet. Cantaloupe is a very good source of vitamin C and can be a great treat as well.

Step4If you eat a salad during lunch or dinner, place plenty of tomatoes on the salad. You may be surprised with the amount of vitamin C found in tomatoes. They are a great way to add vitamin C to what could be a regular part of your meal.

Step5Eat raspberries as a snack in between your dinner and bedtime. Not only are raspberries full of vitamin C, they are also a healthier alternative to other snacks that you may normally have before going to sleep.

Step6Drink a glass of orange juice before going to sleep. An 8-ounce glass of fresh orange juice can actually give you the daily recommended intake of vitamin C. Finishing your day with a glass of orange juice will keep your body full of vitamin C until you eat another meal.

courtesy:www.ehow.com

நானில்லாத உலகம்

சமீப காலமாய்
எங்களுக்குள் இல்லை
ஒரு நெருக்கமும்
நானே முயன்றும்கூட
நெருங்க முடிவதில்லை
அவனை...

இழுத்தணைத்து
முகர எத்தனிக்கையில்
என் மார்பகங்களின் ஸ்பரிசத்தில்
கூசி விலகி நகர்கிறான்.
அது உதிரம் பிரித்து
உணவூட்டியதென்பதை மறந்து

நதியோரக் கோரையாய்க்
குத்திட்டு நிற்கும் முடி நீவ
நீளும் என் கைவிலக்கிச் செல்கிறான்
சங்கடமின்றி...

தனது குழந்தைப் பருவத்தைத்
துடித்துக் கடக்க அவனும்,
கைப்பற்ற நானும்
போராட்டத்தினூடே
கரைகிறது பழைய நெருக்கம்

நிலவு ஓய்ந்திருந்த நாளொன்றில்
சூரியனும் ஒரு நாள்
தீர்ந்துபோகுமா என
ஒருமுறை கேட்டவனுக்கு
என்னிடம் அறிந்துகொள்ள
இன்றொரு பதிலுமில்லை
எனதறை அண்டிவாழும் இருள்
இன்றும்
உள்நுழையக் கேட்கையில்
தாய்மையுற்ற முதல் பொழுதில்
இனி இங்கு ஒளி அலம்பிப்
பின் தேங்கும்
எனக்கண்ட கனவொன்றைத்
திருப்பி அனுப்பிக் கொண்டிருந்தேன்.

`பச்சை தேவதை' தொகுப்பிலிருந்து... காலடிச்சுவடுபதிப்பகம்
courtesy:kumudam.com/magazine/snegiti

நானொரு சிந்து காவடிச்சிந்து!

நானொரு சிந்து காவடிச்சிந்து
ராகம் புரியவில்ல உள்ள சோகம் தெரியவில்ல
தந்தையிருந்தும் தாயுமிருந்தும்
சொந்தமெதுவுமில்ல அட சொல்லத்தெரியவில்ல

(நானொரு சிந்து)

இல்லாத உறவுக்கு என்னென்ன பேரோ
நாடொடிப் பாட்டுக்குத் தாய்தந்தை யாரோ
விதியோட நான் இன்னும் வெளையாடப் போறேன்
வெளையாத பாட்டுக்கு வெதபோட்டதாறேன்
தலையெழுத்தென்ன என் மொதலெழுத்தென்ன
சொல்லுங்களேன்

(நானொரு சிந்து)

பசு கன்றுப் பால் தேடிப் போகின்ற வேளை
அம்மான்னு சொல்லவும் அதிகாரமில்லை
என் விதி அப்போதே முடிஞ்சிருந்தாலே
கர்ப்பத்தில் நானே கலைந்திருப்பேனே
தலையெழுத்தென்ன என் மொதலெழுத்தென்ன
கண்டுபிடி

கவிப்பேரரசு வைரமுத்து
courtesy:www.tamilnation.org

பழங்களின் மருத்துவ குணங்கள்

பழங்களின் மருத்துவ குணங்கள்
1.செவ்வாழைப்பழம்
கல்லீரல் வீக்கம், மூத்திர வியாதியை குணமாக்கும்

2.பச்சை வாழைப்பழம்
குளிர்ச்சியை கொடுக்கும்

3.ரஸ்தாளி வாழைப்பழம்
கண்ணீற்கும், உடல் வலுவுக்கும் நல்லது.

4.பேயன் வாழைப்பழம்
வெப்பத்தைக் குறைக்கும்

5.கற்பூர வாழைப்பழம்
கண்ணிற்குக் குளிர்ச்சி

6.நேந்திர வாழைப்பழம்
இரும்பு சத்தினை உடலுக்கு கொடுக்கும்

7.ஆப்பிள் பழம்
வயிற்றுப் போக்கு, குன்மம், சீதபேதி, சிறுநீரகக் கோளாறுகள், இதய நோய்கள், இரத்த
அழுத்தம் ஆகியவைகளுக்கு நல்லது

8.நாவல் பழம்
நீரழிவை நீக்கும், வாய்ப்புண், வயிற்றுப் புண்ணை நீக்கும், விந்துவை கட்டும்

9.திரட்சை
1 வயது குழந்தைகளின் மலக்கட்டு, சளி, காய்ச்சல் குணமாக திராட்சை பழங்களைப் பிழிந்து
சாறெடுத்து ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து தினம் 2 வேளை கொடுத்தால் இக்குறைபாடுகள்
நீங்கும்

10.மஞ்சள் வழைப்பழம்
மலச்சிக்கலைப் போக்கும்

11.மாம்பழம்
மாம்பழம் சாப்பிடுவதனால் ரத்த அழுத்தம் சீராகும். குழந்தைகளும் சாப்பிடலாம்

12.கொய்யாப்பழம்
உடல் வளர்ச்சியும் எலும்புகள் பலமும் பெறுகின்றன. வயிற்றில் புண் இருந்தால்
குணப்படுத்தும்.

13.பப்பாளி
மூல நோய், சர்க்கரை நோய், குடல் அழற்சி போன்றவைகளுக்கு சிறந்தது.

14.செர்ரி திராட்சை
கர்ப்பப்பை வியாதிகளுக்கு நல்லது.

நன்றி; சிவகுமார்

ஒரு முல்லா கதை

முல்லா மிகவும் புத்திசாலி " என்று அரசசபையில் இருந்த பலரும் புகழ்வதைக் கேட்ட மன்னர், முல்லாவின் அறிவைச் சோதிக்க எண்ணினார்.

ஒரு நாள் அரச சபை கூடியபோது, அரச சபையில் இருந்த முல்லாவை மன்னர் அழைத்து, முல்லா, " உங்கள் அறிவைச் சோதனை செய்து பார்க்க எண்ணுகிறேன். நீங்கள் ஏதேனும் ஒன்று கூறுங்கள். நீங்கள் கூறுவது உண்மையாயின் உங்கள் தலை வெட்டப்படும்; பொய்யாயின், உங்களைத் தூக்கிலிடுவேன் , எங்கே ஏதாவது ஒன்று கூறுங்கள் " என்றார்.

"முல்லா உண்மையைக் கூறினாலும் இறந்து விடுவார்; பொய்யைக் கூறினாலும் இறந்துவிடுவார். ஆதலால்; முல்லா இன்று தொலைந்தார்" என்று சபையோர் வருந்தினர்.

முல்லா மன்னரைப் பார்த்து அமைதியுடன், " மன்னரே , நீங்கள் என்னைத் தூக்கில் போடுவீர்கள் " என்று சொன்னார்.

முல்லா கூறியதைக் கேட்ட மன்னர் திகைத்தார்.

முல்லா சொன்னது உண்மையாயின், அவருடைய தலை வெட்டப்படவேண்டும் , அவ்வாறு வெட்டப்பட்டால், அவர் கூறியது பொய்யாகிவிடும். பொய் கூறினால் தலையை வெட்டாமல், தூக்கில் போட வேண்டும்.

முல்லா கூறியது பொய்யாயின் முல்லாவைத்தூக்கில் போடவேண்டும்.
அவ்வாறு தூக்கில் போட்டால் அவர் கூறியது உண்மையாகிவிடும் , உண்மையை கூறினால் அவரைத் தூக்கில் போடாமல் தலையை வெட்டவேண்டும்.

எனவே, புத்திசாலித்தனமாக பதில் சொன்ன முல்லாவை மன்னர் பாராட்டினார், சபையோர் மகிழ்ந்தனர்.

மகிழ்ச்சியின் நிறம்

தேவாலயம் ஒன்றில் திருமண விழா நடைபெற்றுக் கொண்டு இருந்தது. அந்த விழாவுக்கு பெண்மணி, தனது கணவரோடு 5 வயது மகனை அழைத்துக்கொண்டு வருகை தந்திருந்தார்.
அந்த சிறுவன், திருமண விழாவில் ஒவ்வொரு விஷயத்தையும் காண்பித்து அதற்கு என்ன அர்த்தம் என்று கேட்டுக் கொண்டிருந்தான்.
.
அப்போது சிறுவன், மணமக்கள் வெள்ளைநிற ஆடை அணிந்து இருப்பதை பார்த்து ஏன் வெள்ளை நிற ஆடை என்று கேள்வி கேட்டார். பெண்மணி உடனே வெள்ளை நிறம் மகிழ்ச்சியின் அடையாளம் என்று கூறினார்.

சிறுவன் அடுத்ததாக அப்படி யென்றால் மணமகன் மட்டும் ஏன் கருப்பு நிற கோட் அணிந்திருக்கிறார் என்று கேட்டான். உடனே அந்த பெண்மணியின் கணவர், கருப்பு துக்கத்தின் அடையாளம் என்பதால் என்று கூறிவிட்டு, திருமணமானதுமே எல்லா ஆண்களின் நிலையும் இப்படித்தான் என்றார்.

எப்படி? எப்போது ? எங்கே ?

ஒரு ஆங்கிலக் கவிதையின் தமிழாக்கம்;

தப்பிலாது எனக்குத் தொண்டர்
சால்புடன இயற்றுவோர்கள்
ஒப்பிலார் அறுவர் உள்ளார்
உவந்து எனது உள்ளத்து என்றும்
இப்பெரு ஞானம் எல்லாம்
இவர் தந்தார்,

இவர்கள் நற்பேர்
எப்படி? எப்போது? எங்கே?
யார்? ஏன்? என் ? என்பதாகும்.

I keep six honest serving men,
They taught me all I know,
Their names are what and why and when
And How and where and Who?
By Rudyard Kipling.

நன்றி; பேராசிரியர் டாக்டர.ந.சுப்புரெட்டியார்
(தமிழ் பயிற்றுவிக்கும் முறை)

துணையாகிப் போவோம் வா!

கவிஞர் வைரமுத்துவின் தண்ணீர் தேசத்திலிருந்து
கண்டெடுத்தவை!!


> உனக்கு நானோ
எனக்கு நீயோ
சுமையாகிப் போகாமல்
துணையாகிப் போவோம்
வா!


> தேவைதானா என்று
கேட்டிருந்தால்
தீயை அறிந்திருக்க முடியுமா?
குரங்கிலிருந்து மனிதன்
குதித்திருக்க முடியுமா?
தூரத்தை
நெருங்கியிருக்க முடியுமா?
நேரத்தை
சுருக்கியிருக்க முடியுமா?
தேவைதான்
முட்டைக்குள் இருக்கும்
உயிரை மூச்சு விட
வைக்கிறது


> அனுபவங்களின்
பொகுப்புதான் வாழ்க்கை
நம் வாழ்க்கை முறை
தீர்மானிக்கப்பட்ட
அனுபவங்களையே
நம்மீது திணித்தது

யாருக்கோ நேர்ந்த
அனுபவங்களை
ஒப்புக் கொள்ளுமாறு
நம்மீது
துப்பியது
ஆகவே
தாத்தாக்களின்
நகல்களாகவே தமிழன்
தயாரிக்கப்பட்டான்
சாதிக்கும் மூளையிருந்தும்
சோதிக்கும் முயற்சியில்லை

courtesy:rasiththavai.blogspot.com

என் குட்டித் தேவதைக்கு....

என் குட்டித் தேவதைக்கு....

நீ கண்டுபிடிக்க வேண்டுமென்பதற்காகவே
இலகுவான இடத்தில் ஒளிந்து
"எப்படியடி தெரிந்தது?" நான் பிரமிக்கையில்,
பெருமிதத்தில் நீ சிரிக்கும் பத்துப்பல் சிரிப்பு...

வேண்டுமென்றே கை விரல்களைத் தவறுதலாய் எண்ணி,
"ஐயோ! தெரியலியே" தவிக்கையில்,
குழந்தை மொழியில் நீ கூட்டிக் கழித்துச் சொல்லி
ஜெயித்து விட்டதாய் கையுயர்த்தும் அழகு...

பஞ்சுப் பொம்மையைத்
தூக்க முடியாமல் கீழே போட்டு
கைவலிப்பதாய் நடிக்கையில்,
தூக்கிக்கொண்டு ஓடும் உன் துறுதுறு குறும்பு...

இப்படி ஒன்றும் தெரியாதவளாய்
நான் நடிப்பதெல்லாம்
உன்னை எல்லாம் தெரிந்தவளாய்
ஆக்கத்தான் என் குட்டி தேவதையே!

நன்றி: லதா பிரபாகர், அவள் விகடன்
courtesy:rsiththavai.blogspot.com

வெண்டக்காய் தலையில் மகுடம்!

சாப்பிட்டுக கொண்டிருந்த அரசர் வெண்டக்காய்
பிரமாதமாக இருக்கிறதே என சொன்னார்.உடனே
முல்லா,''அரசே,அதனால்தான் இறைவன் அதன்
தலையில் மகுடம் வைத்து அனுப்பியிருக்கிறார்''
என்றார்.

சமையற்காரன் தினசரி வெண்டக்காயை சமைக்க,
அரசர்,அந்த மோசமான காயை விட்டால் வேறு காயே
இல்லையா என எரிந்து விழுந்தார்.முல்லாவும்
ஒத்துப் பாடினார்.

முன்னுக்குப் பின் முரணாக ஏன் பேசுகிறீர் என கேட்க
முல்லா சொன்னார்''அரசே,எனக்கு வெண்டக்காயா
சம்பளம் தருகிறது? நீங்கள்தானே தருகிறீர்கள்?!

மகாத்மாவின் மகத்தான புதல்வி

பிரசித்தி பெற்ற பிரிட்டிஷ் பிரபுகளின் குடும்பத்தில் -
கடற்படைத் தளபதியின் மகளாகப் பிறந்தார்.
மனித உருவில் வாழும் கடவுளைத் தேடி அலைந்து
மகாத்மாவை சரணடைந்தார்.அவருடைய புதல்வி
என்ற ஸ்தானத்தை அடைந்தார்.


அவர்தான் 90 வயது வரை பிரம்மசரியத்தைக்
கடைப்பிடித்த ஒரு இங்கிலீஷ் மாதரசி மீராபென்!

24 ஆண்டுகளில் மகாத்மா அவருக்கு 650 கடிதங்கள்
எழுதியிருக்கிறார் என்றால் மீராபென் பெற்றுள்ள
முக்கியத்துவத்தை விளக்க வேறு என்ன சான்று
வேண்டும்.

(சக்தி-ஜூலை 90 இதழில் படித்தது)

கலியுகத்தில் ஒரு கண்ணகி

கண்ணகியிடம் நெருப்புக் கேட்கப் போகிறேன்
அவளுக்கு மாற்றாய் கற்பு நிறைந்திருக்கறது
என்னிடம்-ஆனால்

காற்கொலுசு இல்லை-இருந்த ஒன்றும்
மணவாளனின் பாக்கியத்தால்
மார்வாடிக்கடைக்குச் சென்றிருக்கிறது

மாமியாரின் மண்ணெண்ணை சொற்களுக்கு மத்தியில்
மணவிலங்காய்
மங்கல நாணும் பூட்டியிருக்கிறேன்
சீதனம் தேடி தந்தை வீட்டிற்கும்
வாழ்வைத்தேடி வந்தவன் வீட்டிற்கும்
அலைந்தாகி விட்டது

கண்ணகியிடம் நெருப்புக் கேட்கப் போகிறேன்
கணவன் வீட்டுக்கு தீ வைக்க!

நன்றி; ந.ப.சந்திரன்,ஆம்பல்(சாவி-3-10-90)

எது அழகு ?

பூமி,வானம்,நிலாவைப் பார்க்கும் நட்சத்திரங்கள்
கிழக்கின் பிரசவ முயற்சி,
சாலைகளில் இருந்தும் பயனிக்காத மரங்கள்
மாதக்கடைசியில் மனைவியின் புன்னகை

சித்திரை மாதத்து மாமரங்களில் தளிர்களில் வழியும்
தாவரத்தங்கம்
சிற்பத்து மங்கையின் செறிந்த மார்பு
நன்றி சொல்லும் ஏழையின் கண்கள்
ராத்திரியில் தூரத்து வெளிச்சம்

வண்டு புணர்ந்தற்காய்ப் பனியில் குளிக்கும் மலர்கள்
உழைப்போர் குடிசையில் உலை கட்டும் நுரை
பெண்ணின் உதடுகள்-முத்தமிடுமுன்
பெண்களின் கண்கள்-முத்தமிட்ட பின்

அதிகாலை நதிநீரில் சூரியத் தகடுகள்
நிலம் நீர் தீவளி வெளி-இவற்றில் எதுவுமே அழகில்லை.
மனம மட்டும் மயானமயிருந்தால். . .

மனம் சுடுகாடாயிருக்கிறதா?
நிலாவில் கூட நெருப்பெரியும்
மனம் நந்தவனமாயிருக்கிறதா
நெருப்பில கூட நிலவொழுகும்.
மனமே அழகு!

நன்றி; கவிஞர் வைரமுத்து (ஆனந்தவிகடன் 8-7-90)

உடலும் உள்ளமும்

உடலும் உள்ளமும் ஒன்றை ஒன்று சார்ந்தவை. பசி என்பது உடலுக்கு ஏற்படும் தேவை. பசி ஏற்பட்டு வெகுநேரம் உணவு உட்கொள்ளாமல் இருந்தால் உள்ளமும் தளர்கிறது. நாம் உண்ணும் உணவின் தன்மைக்கு ஏற்ப உள்ளத்திலும் மாற்றம் ஏற்படுவதைத் தற்கால மருத்துவம் சொல்கிறது. அதனால் திருமூலரும்

உடம்பார் அழியின் உயிரார் அழிவார்.
திறம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்ப்போம் உயிர் வளர்ப்போமே

என்று கூறினார். மெய்ஞ்ஞானம் வேண்டும் தவசிகளுக்கே உடல்நலத்தைப் பேணுவது அவசியமென்றால் நம் போன்றோருக்குச் சொல்லவா வேண்டும்!

உடலின் மூலம் மனதின் நலம்

'சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்' என்பது பழமொழி. அதாவது நலமான உடல் என்னும் சுவர் இருந்தால் தான் அதன்மீது நல்வாழ்க்கை என்ற சித்திரத்தை வரைய முடியும். வழக்கமாக சரிவிகித உணவைப் பற்றிக் கூறுகையில் எவ்வாறு தானியங்கள், பழங்கள், கீரைகள், பச்சைக் காய்கறிகள், பருப்பு வகைகள், கடலைகள், பால் ஆகியவற்றைப் போதிய அளவு உண்பதனால் மாவுப்பொருள், புரதம், கொழுப்பு, நார்ப்பொருள் ஆகியவற்றைப் பெறமுடியும் என்பதை விளக்குவது வழக்கம். தவிர உடலில் அதிக காலம் தங்கியிராத வைட்டமின்களும் அவசியமாக இருக்கின்றன.

ஓட்ஸ், வாழைப்பழம், மீன் ஆகியவற்றில் மனதின் சோர்வை அகற்றி உற்சாகத்தைத் தரும் குறிப்பிட்ட ரசாயனப் பொருள் உள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். இதை அறிந்துகொள்வதை விட முக்கியமானது என்னவென்றால் நாம் காரணமின்றி அலுப்பாக உணரும்போது இவற்றில் ஏதாவதொன்றை உட்கொண்டு உற்சாகம் பெறுவதுதான். ஆனால் காபி, புகையிலைப் பொருள்கள் போன்ற தாற்காலிகமான உந்துதல் தரும் பொருள்கள் நம்மை அடிமையாக்குவதோடு நம்மை கா·பீன் என்ற நச்சுப் பொருளுக்கு அடிமையாக்கி நாளாவட்டத்தில் உடல் நலத்தைச் சிதைக்கிறது. சிகரெட் நம்மைச் சுற்றியிருப்பவருக்கும் தீங்கு விளைக்கிறது என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.


அமைதி, ஆனந்தம், கருணை, அன்பு போன்றவற்றால் நிரம்பியது சத்வகுணம். ரஜோகுணம் கோபம், வேகம், பொறாமை, துடிதுடிப்பு, பேராசை போன்றவற்றின் ஒட்டுமொத்தம். சத்வகுணம் சோம்பேறித்தனம், தாமதம், அறியாமை, தூக்கம் போன்ற இருட் குணங்களால் ஆனது

உடலில் ஒரு துள்ளல் வரவேண்டுமானால் தவறாமல் தேகப்பயிற்சி செய்ய வேண்டும். அது ரத்த ஓட்டத்தைச் சீராக்கி, உடல் தசைகளையும் எலும்புகளையும் வலுப்படுத்தி அதிகப்படிக் கொழுப்பு ஒரே குறிப்பிட்ட இடத்தில் சேராமல் பார்த்துக்கொள்கிறது. சரியான வழிகாட்டியின் துணையோடு யோகப் பயிற்சி மற்றும் பிராணாயாமம் எனப்படும் ஆழ்ந்த சுவாசப் பயிற்சியைப் பழகித் தொடர்ந்து செய்வது உடலுக்கு, மனதுக்கு, அறிவுக்கு, ஆன்மிகத்துக்கு என்று எல்லாவற்றுக்குமே பெருந்துணை செய்யும். யோகம் மற்றும் பிராணாயாமத்தில் பல வகைகள் உள்ளன. உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் சிலவற்றைச் செய்யக்கூடாது, இதய நோய் உள்ளவர்கள் சிலவற்றைச் செய்யக்கூடாது என்று கட்டுப்பாடுகள் உள்ளன. ஆகவே ஒவ்வொருவரும் தமக்கு ஏற்ற யோக, பிராணாயமப் பயிற்சிகளை செய்வதன் மூலம் மிகுந்த நன்மை அடையலாம்.

எல்லாவற்றையும் விட எளிய, யாவரும் செய்யக்கூடிய பயிற்சி நடத்தல்தான். காலை அல்லது மாலையில் ஓரிரண்டு மைல் நடக்கலாம். அதை 4 மைல்வரை அதிகரிக்கலாம். சர்க்கரை நோய் உள்ளவர்கள் இதைச் செய்தே ஆகவேண்டும். ஆனால் திடீரென்று ரத்தத்தில் குளூகோஸ் குறைந்தால் அதற்கேற்ப நடக்கும் தூரத்தைக் குறைக்க வேண்டும். இரண்டு உணவுக்கு இடைப்பட்ட வேளையில் கணக்கில்லாம நொறுக்குத் தீனி தின்பதைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக சிப்ஸ், பாப்கார்ன், ஐஸ்கிரீம் ஆகியவற்றால் வயிற்றை அடைக் கக்கூடாது. உணவில் காரம், மசாலா ஆகியவற்றைக் குறைத்துக் கொண்டால் பலக் குடல்நோய்களைத் தவிர்க்கலாம்.

நமது முன்னோர்கள் நமக்கு தமோகுணம், ரஜோகுணம், சத்வகுணம் என்று மூன்று இருப்பதாகக் கூறுகிறார்கள். அமைதி, ஆனந்தம், கருணை, அன்பு போன்றவற்றால் நிரம்பியது சத்வகுணம். ரஜோகுணம் கோபம், வேகம், பொறாமை, துடிதுடிப்பு, பேராசை போன்றவற்றின் ஒட்டுமொத்தம். சத்வகுணம் சோம்பேறித்தனம், தாமதம், அறியாமை, தூக்கம் போன்ற இருட் குணங்களால் ஆனது. நம் இந்த குணங் களின் கலவையாக இருக்கிறோம். ஆனால், ஒவ்வொருவரிடமும் இவற்றில் ஒரு குணம் தூக்கலாக் இருக்கிறது. அதனால்தான் முன்கோபி, சோம்பேறி, சாது என்றெல்லாம் மனிதர்களைப் பிரித்துப் பார்க்க முடிகிறது. போதைப் பொருட்களும், எருமைத் தயிரும், அளவுக்கு அதிகமாக உண்ணுதலும் நம்மைத் தமோகுண இருளில் தள்ளி விடுகின்றன. காரம், மசாலா போன்றவை ரஜோகுணத்தை மிகச் செய்கின்றன.

பசுந்தயிர், மிதமான காரம், உப்பு, புளிப்பு கொண்ட உணவு நம்மில் சாத்விகத்தை வளர்க்கிறது. மனிதரனைவரும் சத்வ குணத்தை நகர்வதன் மூலம் தம்மில் இருக்கும் இறைத்தன்மையையும் வெளிக் கொணர முடியும். அது இல்லாதவரையில் நாம் சமத்துவம் என்றெல்லாம் வார்த்தகளால் சொல்லிக்கொண்டு, அதன் பெயரால் வெறுப்பையும் பகைமையையும்தான் வளர்ப்போம். கோபத்தின் தீமை நாம் அறியாததல்ல. அது 'தன்னையே கொல்லும்' என்பார் வள்ளுவர். காரணம் பிறரை அன்னியமாக்குவதோடு, நமது உடல்நலத் தையும் அது கெடுக்கும். கோபம் குறைந்தால் தான் சத்வகுணம் வளரும். இதில் நாம் உண்ணும் உணவு பெரும்பங்கு வகிக்கிறது.

பொதுவாக இவற்றை நாம் படிக்கும்போது 'இதுதான் எனக்குத் தெரியுமே' என்று மனம் சொல்லிக்கொண்டே வரும். ஆனால், பெரிய சிப்ஸ் பாக்கெட்டைப் பிரிக்கும்போதும் மிகச் சவுகரியமாக மறந்துபோய்விடும். எனவே நீங்கள் என்ன செய்யவேண்டும் என்பதை எழுதி வைத்துக் கொண்டு கடைப் பிடியுங்கள். பெரிய எழுத்தில் எழுதிச் சுவரில் ஒட்டி வைத்துக்கொள்ளுங்கள். உடல்நலம் பேணுங்கள், உற்சாகமாக இருங்கள்.

மதுரபாரதி
courtesy:http://www.tamilonline.com/thendral/

இனி சில சுவாரஸ்யங்கள்

பெரும்பாலான கடிகார விளம்பரங்களில் கடிகாரங்கள் 10:10-ஐ தான் காட்டி நிற்கும்.காலை பொழுதை AM என்கின்றோம் இது Ante meridiem என்னும் லத்தீன் வார்த்தையிலிருந்து வந்தது. மாலை பொழுதை PM என்கின்றோம் இது Post meridiem என்னும் லத்தீன் வார்த்தையிலிருந்து வந்தது.

United States அரசை Uncle Sam எனவும் கிண்டலாய் கூறுவர். அதன் பச்சை வண்ண டாலரை Greenback என்பர்.

Buck எனும் வார்த்தை டாலரை மட்டும் குறிப்பதற்கல்ல. அவரவர் நாணயத்தையும் பக் எனலாம்.

சாலைகளில் நேர்வழியாய் இல்லாமல் மாற்று வழியாய் செல்வதை Detour என்பர்.

அபார்ட்மென்ட் தேடும்போது பயன்படுத்தப்படும் BHK-யின் அர்த்தம் B-Bed Room-ஐயும் H-Hall( living room)-ஐயும் K-Kitchen-ஐயும் குறிக்கும்.

இந்துக்களின் பகவத்கீதை அதாவது பகவானின் கீதம் அல்லது "இறைவனின் பாடல்கள்" என பொருள்படும்.

இஸ்லாமியர்கள் பயன்படுத்தும் அசலாம் அலைக்கும் "சமாதானம் உங்களோடிருக்கட்டும்" என பொருள்படும்.

கிறிஸ்தவர்கள் பயன்படுத்தும் ஆமென் "அப்படியே ஆகட்டும்" என பொருள்படும்.

ஆங்கிலத்தில் ‘-dous’ என முடிவது இந்த நான்கு வார்த்தைகள் மட்டும் தான் tremendous, horrendous, stupendous, and hazardous.

No word in the English language rhymes with month, orange, silver, and purple.

"The quick brown fox jumps over the lazy dog." என்ற வாக்கியம் ஆங்கிலத்தின் அனைத்து எழுத்துக்களையும் கொண்டுள்ளது.

Abcdef என்ற ஆறு எழுத்துக்களும் கொண்ட ஒரே குறுகிய வார்த்தை Feedback.

ஆங்கில தட்டச்சுபலகையின் ஒரே ஒரு வரிசையை மட்டும் பயன்படுத்தி நம்மால் தட்டமுடியும் மிக நீளமான வார்த்தை Typewriter.

"Stewardesses" is the longest word that is typed with only the left hand.

The only 15 letter word that can be spelled without repeating a letter is "uncopyrightable".

The longest word in the English language, according to the Oxford English Dictionary, is "pneumonoultramicroscopicsilicovolcanoconiosis". The only other word with the same amount of letters is "pneumonoultramicroscopicsilicovolcanoconioses", its plural.

லாஸ் ஏஞ்சலஸ் நகரின் ஆரம்பகாலப்பெயர் "El Pueblo de Nuestra Señora la Reina de los Ángeles de Porciuncula."

உலகிலேயே நீளமான பெயரைக் கொண்ட இடம் நியூசிலாந்திலுள்ளது. (படம்) Taumata­whakatangihanga­koauau­o­tamatea­turipukaka ­pikimaunga ­horo­nuku­pokaiwhenua­kitana­tahu (85 letters).


Question: A word in which first 2letters means male,first 3letters means female,first 4letters means male & the whole word means female? Answer: Heroine

Courtesy:http://pkp.blogspot.com

Smile Jokes

Three guys are about to be executed and they are asked what they wish to have for their last meal.

The Italian responds, Pepperoni Pizza, which he is served and then executed.



The Frenchmen requests a Fillet Mignon, which he is served and then executed.

The Newf requests a plate of strawberries.

"STRAWBERRIES ????"

"Yes, Strawberries."



He is told "But they are out of season!"



"So, I'll wait."

Courtesy:smilejokes.blogspot.com
--~--~---------~--~----~------------~-------~--~----~

மலை ஏறப் போனவன் !

இமயமலை ஏற சென்றவன் அடிவாரத்தில் இரவு தங்க
அனுமதி வேண்டினான். வீட்டுப் பெண்மணி சொன்னாள்,
''ஒரு கட்டில்தான் இருக்ககிறது, இடையில் தலையணை
வைத்துக் கொள்வோம்,அதனை நீங்கள் தாண்டக்கூடாது.''
சரி என ஒப்புக் கொண்டான்.

பொழுது விடிந்ததும், மலை ஏறப் போவதாகச் சொன்னான்.
பதிலுக்கு அந்தப் பெண்மணி ''சாதாரண தலையணை
மேலே கூட ஏற முடியலை...பிறகு எப்படிய்யா இமயமலை
மேலே ஏற முடியும் ? பேசாம திரும்பிப் போங்கள்'' என்றாள்.

தபூசங்கர் கவிதைகள்

உன் பிறந்த நாளைப் பார்த்து
மற்ற நாட்கள்
புலம்பிக் கொண்டிருக்கின்றன...
பிறந்திருந்தால்
உன் பிறந்த நாளாய்
பிறந்திருக்க வேண்டும் என்று.


ஊரிலேயே
நான்தான் நன்றாக
பம்பரம் விடுபவன்
ஆனால் நீயோ
என்னையே பம்பரமாக்கி விடுகிறாய்.


நீ இல்லாத நேரத்திலும்
உன் இருக்கையில் அமர்ந்திருக்கிறது
உன் அழகு.


கோடை விடுமுறை வந்தால்
குளிர்ப் பிரதேசம் தேடி
ஓடுவதில்லை நான்.
ஆனால்
ஒவ்வொரு கோடை
விடுமுறையிலும்
என்னையே தேடி ஓடி வருகிறது
ஒரு குளிர்ப் பிரதேசம்.
அதற்குப் பெயர்
அத்தை மகள்.

நன்றி; தபூசங்கர் (ஆனந்த விகடன் 2-1-05)

மேடை

படிக்கிறேன் நான்
என் பாடத்தை
படிக்கிறாய் நீ
உன் பாடத்தை
படிக்கிறோம் நாம்
நம் பாடத்தை-மறவாதே!

திரைஎழும்வரை ஒப்பனைகள்
திரை எழும் வரை ஒத்திகைகள்
திரை எழும் வரை சிந்தனைகள்-சிதறாதே!

நடிக்கிறேன் நான் என் வேடத்தை
நடிக்கிறாய் நீ உன் வேடத்தை
நடிக்கிறோம் நாம் நம் வேடத்தை-பதறாதே!

திரைவிழும் வரை நான் நானில்லை
திரைவிழும் வரை நீ நீயில்லை
திரைவிழும் வரை நாம் நாமில்லை-குழம்பாதே!

நன்றி ; லெமன் (கலைமகள்-இதழ் ஜூன் 2008)

My Special Friend

Your cheerful smile
Your caressing hand
Its the really simple things
That make your life look so grand

Youre a special woman
Its in your eyes
I see the truth
There is no disguise

Its your spirit
Maybe your soul
But my life without you
Would feel painfully old

Youve been a true friend
I hope you stay
I would be so very empty
If you ever went away

courtesy:http://www.poems.md/funny-friendship-poems/my-special-friend-698.html

The Lion and the Jackal

One day, a brave jackal came to the river to drink some water. He saw the lion, looking weak and tired and asked, "What is the matter, O King of the Jungle?"

The lion told the jackal his story. The jackal felt sorry for the lion. He pulled and pulled at the lion's tail until the lion became free. The lion was very, very happy and he said, "Thank you so much for helping me. I thought I would die! You are my friend for life! I would like you to come and live with me and my family. From now on, I will hunt and share the food with you."

The jackal moved in with the lion's family and had a wonderful time because he did not have to hunt any more. The lion did as he had promised. He hunted for food and shared the food with the jackal.

Soon, the lion had children of his own and so did the jackal. But the two continued to be friends. However, the lioness was not happy about the friendship. She complained to her children. Her children complained to the jackal's children; the jackal's children complained to their mother and their mother complained to the jackal.

The jackal was upset and told the lion, "You told me to live with you. I thought you were a good friend and so I started living with you. If you don't like it any more, you should have said so yourself."The lion was shocked and said, "This is not true. I never complained about you. I still want you to continue staying with me."

The clever jackal said, "We understand each other. But our families don't. Perhaps it is better for us to live apart but continue meeting each other when we are free. We can even hunt together!"

The two families parted, but the lion and the jackal met often and remained friends for the rest of their lives.

The moral of the story is that your family may not respond in the same positive way to your friends as you do. But if your friend has helped you, remember to maintain that friendship, but don't give up on your family also.

courtesy:www.sitagita.com

Awesome story

Awesome story....

A junior engineer, a senior engineer and their Project Manager are on their way to a meeting. On their way through a park, they come across a wonder lamp. They rub the lamp and a ghost appears. The ghost says, "Normally, one is granted three wishes but as you are three, I will allow one wish each".

So the eager junior engineer shouted I want the first wish. I want to be in the Bahamas, on a fast boat and have no worries. "Pfufffff" and he was gone.
Now the senior engineer could not keep quiet and shouted I want to be in Florida with beautiful girls, plenty of food and cocktails."Pfufffff" and he was also gone.
The Project Manager calmly said," I want these two idiots back in the office after lunch at 1.30pm"

Moral of the story is:
Always allow the boss to speak first..!

இலவசம்

இலவசம்;

எழுதப்போவதில்லை
என்றாலும் இளித்தான்
இலவச டைரி கேட்டு!


சந்தோஷம்;

திருட்டு விசிடி ஒழிப்பு
தியேட்டரில் கூட்டம்
சந்தோஷப்பட்டன
மூட்டைப் பூச்சிகள்!

(குமுதம் 6-12-04 இதழில் படித்தது)

இளைஞன் கேட்ட வரம் !

இளைஞன் கேட்ட வரம்

இளைஞன் ஒருவன் கடவுளை சந்தித்து வரம் ஒன்றை கேட்க தவமிருந்தான். கடவுளும் அவன் முன் தோன்றி என்ன வரம் வேண்டும் கேள் என்றார். பேராசை பிடித்த அந்த இளைஞன், எனக்கு ஒரு வேலை வேண்டும். எப்போதும் என் கையில் இருக்கும் பையில் நிறைய பணம் இருக்க வேண்டும் என்று இழுத்தான்.
.
உடனே கடவுள் இதுபோதுமா என்று கேட்டார். உடனே அவன் இல்லை இல்லை இன்னும் ஒரு வரம் வேண்டும் என்றான். என்ன அது என்று கடவுள் கேட்டார். அதற்கு அவன் என் வண்டியில் எப்போதும் பெண்கள் இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்றான்.
நீ கேட்ட அனைத்தும் தந்தேன் என்றார் கடவுள். இளைஞனும் மகிழ்ச்சி அடைந்தான். மறுநாள் அவனுக்கு போக்குவரத்து கழகத்தில் இருந்து மகளிர் பேருந்தின் கண்டக்டர் வேலை கிடைத்தது.

Airplane-Jokes

An airplane full of a shipment of Pepsi flying over Africa had a
Malfunction, and went down. A few weeks later, the Pepsi Company sent
a  rescue plane. They searched the area and found a tribe of
cannibals.  They walked up to the Chief of the tribe and asked
Him if he knew anything about the crash.

The Chief said, "Yeah."

When asked where  the crew was, the Chief replied, "We ate the
Crew, and we drank the  Pepsi."

The Rescue crews were shocked. One man asked, "Did you eat  their legs?"

The chief replied, "We ate their legs, and we drank the  Pepsi"

Another rescuer asked, "Did you eat their arms?"

The Chief said, "We ate their arms, and we drank the Pepsi."

After looking totally perplexed for a minute, a third asked, "Did you,
you know,   eat their 'things'?"

The chief says," No."

"No?" asked the rescuer. 

"No," replied the Chief, "Things go better with Coke."


--~--~---------~--~----~------------~-------~--~----~
courtesy:www.smilejokes.blogspot.com

பழநிபாரதி கவிதைகள்

( 1)பூஜையறை;

பிளாஸ்டிக் மாவிலைத் தோரணங்கள்
ஸ்டிக்கர் கோலங்கள்

'டப்பர் வேர்' டப்பாவிலிருந்து
ஊற்றுகிறார்கள்
விளக்குக்கு எண்ணெய்!

கடவுள் ஏன் கல்லானான்?
கேட்டான் கண்ணதாசன்...
கடவுளை ஏன் பிளாஸ்டிக்கானான்?
பார்த்துக்கொண்டிருக்கிறான் பழநிபாரதி.

(2) குளியலறை;

கைம்பெண் ஒருத்தியின்
குளியலறையில்
சுவரில் உள்ளது
ஸ்டிக்கர் பொட்டு.

(3) சமையலறை;

தீ
சமைக்கிறதா
எரிக்கிறதா?

தெரியாமலேயா...
தாளிக்கிறாள் அவள் காற்றில் கலந்து வெளியேறுகிறது
அவளது
பெருங்காய வாசம்.

சர்தார்ஜி ஜோக்ஸ்

சோகமே உருவாக உட்கார்ந்திருந்த பந்தா சிங்கிடம் அவருடைய நண்பர் அருகில் வந்தமர்ந்து, ஏன் சோகமாக இருக்கிறாய் என கேட்டார். அதற்கு பந்தா சிங், தான் பந்தயத்தில் ரூ.800 தோற்று விட்டதாக சொன்னார். நண்பர் எப்படி 800 ரூபாயை தொலைத்தாய் என்றதற்கு சர்தார் பந்தா சிங் சொன்னார்,

"நேற்று நடந்த இந்திய-இலங்கை கிரிக்கெட் மேட்சில் இந்தியா ஜெயிக்கும் என ரூபாய் 400 பந்தயம் கட்டினேன், ஆனால் இந்தியா தோற்று போய் விட்டது.." என்றார்.

நண்பர், "சரி மீதி ரூ.400 எப்படி தொலைந்தது?" என்றதற்கு பந்தா சிங் சொன்னார், "அன்றிரவு பார்த்த ஹை-லைட்டிலும் பந்தயம் கட்டினேனே.." என்றார்.

திறந்த வெளிப் பல்கலைக் கழகம் !

கார்மேகம்;
1) கருப்பாய் இருப்பதால்
அழுகின்றனர்
கன்னிப்பெண்களும், கார்மேகமும்!

(குவளை.ம.பாலசுப்ரமணியன்)

2) கார்மேகம்;

சூரியனை மோகித்து
சூல் கொண்ட 'கரு' மேக குந்தி
கார்மேகம்!

(வெ.பரமசிவம்,கோவை.2)

3) கார்மேகம்;

பூமிச்சேயின் பசி தீர்க்க
ஞானப்பாலை ஏந்தியிருக்கும்
வானத்தாய்!

4)கார்மேகம்;

பூமியில் பிறந்தவர்க்கெல்லாம்
பொதுநலம் கற்றுத்தரும்
திறந்த வெளி பல்கலைக்கழகம்!

(பாக்யா 22-12-2000 இதழில் படித்து ரசித்தது)

சுவடுகள்

போன வருஷ சாரலுக்கு
குற்றாலம் போய்
கை(ப்)பேனா மறந்து

கால் செருப்புத் தொலைத்து
வரும் வழியில் கண்டெடுத்த
கல் வெள்ளிக் கொலுசு ஒண்ணு

கற்பனையில் வரைந்த
பொற்பாத சித்திரத்தை
கலைக்க முடியவில்லை இன்னும்!

நன்றி; கவிஞர் விக்ரமாதித்யன் (கவிமூலம்)

உன்னால் மட்டும்தான் முடியும் !

இராமர்,தனக்கு நிகரான ஒரு இடத்தினை அனுமனுக்கு
கொடுக்க நினைத்து,உணவு உண்ணும் போது, அனுமனை
அழைத்து,'' இலையில் ஒரு பக்கத்தில் நீ உண்ண மறு
பக்கத்தில் நான் உண்ணுகிறேன்!'' என்று கூறினாராம்.

இராமர் அனுமனுக்கு சம அந்தஸ்து அளித்ததை
உணர்த்தத்தான் வாழை இலைக்கு நடுவில் நரம்பு
உண்டானதாம்.

சம அந்தஸ்து என்பது எவ்வளவு பெரிய பரிசு!அதையே
இவ்வளவு சர்வசாதாரணமாக இராமர் கொடுத்துவிட்டாரே
இதைப்பார்த்த பிறகாவது, நாம் நம் ஊழியர்களுக்கு,
சாதனை செய்யும் ஊழியர்களுக்கு வஞ்சனை இல்லாமல்
பரிசுகள் கொடுக்க வேண்டாமா?

''உன்னால் மட்டும்தான் முடியும்''கட்டுரை(குமுதம்-
1-4-99 இதழில் படித்தது)

Make Me Laugh!

When I get down and feeling sad
and my day is looking bad,
there's one thing that's good to have
something that will make me laugh.

Disappointments are frequent in this life.
Many people living in anger and strife.
What our world needs so much now
is to make us laugh, if you know how?

Times are tough and there's so much pain.
Comedy has a way to break the strain;
To excite a life from being too plain,
make me laugh so I don't complain.

To the people who use their funny style
to make me laugh and make us smile,
thanks for helping me forget my grief.
Your art gives my heart great relief.

Do you know a story with an amusing blend?
By all means tell it, just don't offend.
I can use a tickle before the day's end.
Make me laugh and I'll be your friend!

courtesy: Thomas F Crumpler
http://geocities.com/tescru/Cheerful.html

அழகு என்றால் என்ன ?

அழகு என்பது பார்ப்பவர் கண்களில் உள்ளது என்பது எவ்வளவு உண்மையோ அதே போல் நம் மனதிலும் உள்ளது. நம்மை நாம் அழகானவராக எண்ணுவது தான் அழகாக தோன்றுவதின் முதல் படி. அதிக எடை இதற்கு முக்கியமான எதிரியாகும் எங்கு பார்த்தாலும் எடை குறைப்பு பற்றிய பேச்சு, விளம்பரங்கள், டீ.வியும், திரைப்படங்களும் தினமும் உயரமான, எடை குறைவுள்ள மாடல்களையும், நடிகர்களையும் பார்த்துப் பார்த்து, ஒல்லியாக இருப்பதே அழகு என்ற எண்ணம் நம் மனதில் வேறூன்றி விட்டது.

முதலில் உங்கள் உடலை நேசிக்க கற்றுக் கொள்ளுங்கள். ஆரோக்கியமான உணவு, ஓய்வு, தூக்கம், உடல் பயிற்சி இவைகளால் உங்கள் உடல் நலன் கூடும். அத்தோடு உங்கள் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.

கீழே உள்ள குறிப்புகளை பின்பற்றி ஆரோக்கியமான, அழகாக உள்ள உணர்வை, பெறலாம்.

உடலின் பராமரிப்பு:- நமது உடல் கூறு அதிசயமான உள்ளங்களை உள்ளடக்கியது இதை நல்ல முறையில், பேணி காப்பது நம் கடமையாகும்.

உடலுக்கு சலுகைகள்:- உடலுக்கு அவ்வப்போது சலுகைகள் அவசியம். மஸ்ஸாஜ் செய்து கொள்வது, புதிய உடை வாங்குவது, மேனிக்யூர் மற்றும் பெடிக்யூர் செய்வது. இது போன்ற சலுகைகளில் உங்களுக்கு தன்னம்பிக்கையும், உங்கள் உடலைப் பற்றிய நல்ல உணர்வும் ஏற்படும்.

உங்கள் தேவை:- உங்களுக்கு வாழ்வில் எது தேவை என்று முடிவெடுத்துக் கொள்ளுங்கள் மேற்கத்திய நாடுகளில் பெண்கள் தங்கள் அழகையும், உடலையும் பாதுகாப்பதில் தான் அதிகமான நேரத்தை செலவிடுகின்றனர்.

உங்கள் பழக்கங்கள்:- கண்ணாடி முன் நின்று 100 முறை உங்கள் மூக்கை பார்ப்பதற்கு பதிலாக வேறு வேலைகளில் கவனத்தை செலுத்தவும். உங்கள் மூக்கு மட்டுமே நீங்கள் என்ற எண்ணத்தை முதலில் விடவும்.

உண்மையை ஒத்துக் கொள்ளவும்:- ஐஷ்வர்யாராய் போல் தோன்ற வேண்டும் என்று எண்ணம் இருந்தால் அதை விட்டு விடுவது நல்லது. அவர் அவர் தான், நீங்கள் நீங்கள் தான். அவர் அழகு தான் ஆனால் அவர் மட்டுமே அழகு என்று நினைப்பது சரியல்ல.

சரியான பார்வை:- பட்டினி கிடந்து உடல் ஆரோக்கியத்தை கெடுத்து கொள்வது தான் அழகாக தோன்ற வழி என்று நினைப்பது தவறு. எது உங்களுக்கு சரி என்று முதலில் தீர்மானிக்கவும். தேவையான உடல் பயிற்சி, சரியான உணவு இவையெல்லாம் தான் அழகை மேம்படுத்தும்.

நீங்கள் தனி மனிதர் இல்லை:- இதே பிரச்சனை அதிகப்பட்சமான பெண்களுக்கு உண்டு என்பதை புரிந்துக் கொள்ளவும். இந்த பிரச்சனையில் முழ்காமல் இருப்பது உங்களை கையில் உள்ளது.

எது அழகு, யார் சிறந்தவர் என்று மற்றவர் சொல்வதை நம்பாதீர்கள். 'அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்பதை மறந்து விடாதீர்கள்.

courtesy:www.tamil.webdunia.com

Tax structure - Funny but very true!

1)Q. : What are you doing?
Ans. : Business.
Tax : PAY PROFESSIONAL TAX!

2) Q. : What are you doing in Business?
Ans. : Selling the Goods.
Tax : PAY SALES TAX!!

3) Q. : From where are you getting Goods?
Ans. : From other State/Abroad
Tax : PAY CENTRAL SALES TAX, CUSTOM DUTY & OCTROI!

4) Q. : What are you getting in Selling Goods?
Ans. : Profit.
Tax : PAY INCOME TAX!

Q. : How do you distribute profit ?
Ans : By way of dividend
Tax : Pay dividend distribution Tax

5) Q. : Where you Manufacturing the Goods?
Ans. : Factory.
Tax : PAY EXCISE DUTY!

6) Q. : Do you have Office / Warehouse/ Factory?
Ans. : Yes
Tax : PAY MUNICIPAL & FIRE TAX!

7) Q. : Do you have Staff?
Ans. : Yes
Tax : PAY STAFF PROFESSIONAL TAX!

8) Q. : Doing business in Millions?

Ans. : Yes
Tax : PAY TURNOVER TAX!

Ans : No
Tax : Then pay Minimum Alternate Tax

9) Q. : Are you taking out over 25,000 Cash from Bank?
Ans. : Yes, for Salary.
Tax : PAY CASH HANDLING TAX!

10) Q.: Where are you taking your client for Lunch & Dinner?
Ans. : Hotel
Tax : PAY FOOD & ENTERTAINMENT TAX!

11) Q.: Are you going Out of Station for Business?
Ans. : Yes
Tax : PAY FRINGE BENEFIT TAX!

12) Q.: Have you taken or given any Service/s?
Ans. : Yes
Tax : PAY SERVICE TAX!

13) Q.: How come you got such a Big Amount?
Ans. : Gift on birthday.
Tax : PAY GIFT TAX!

14) Q.: Do you have any Wealth?
Ans. : Yes
Tax : PAY WEALTH TAX!

15) Q.: To reduce Tension, for entertainment, where are you going?
Ans. : Cinema or Resort.
Tax : PAY ENTERTAINMENT TAX!

16) Q.: Have you purchased House?
Ans. : Yes
Tax : PAY STAMP DUTY & REGISTRATION FEE !

17) Q.: How you Travel?
Ans. : Bus
Tax : PAY SURCHARGE!

18) Qus.: Any Additional Tax?
Ans. : Yes
Tax : PAY EDUCATIONAL, ADDITIONAL EDUCATIONAL & SURCHARGE ON ALL THE CENTRAL GOVT.'s TAX !!!

19) Q.: Delayed any time Paying Any Tax?
Ans. : Yes
Tax : PAY INTEREST & PENALTY!

20) INDIAN :: Can i die now??
Ans :: Wait we are about to launch the funeral tax!!! :(


courtesy:.http://thagavalnilayam.blogspot.com

பயப்படாம சிரிங்க !

1)மனைவி; சொர்க்கம் எது, நரகம் எது ?

கணவன்; நீ சமைப்பது சொர்க்கம்.. நான்
சாப்பிடணும்னு கஷ்டப்படுத்தறியே
அது நரகம் !

2)பட்டி மன்றத் தலைப்பு;'தைரியசாலிகள்-
ஆண்களா,பெண்களா?
நடுவரின் சமயோசிதமான தீர்ப்பு;
...மனைவி ஊரில் இல்லாத போது ஆண்களே
தைரியசாலிகள்!'

3)கெட்ட நேரத்தலயும் ஒரு நல்ல நேரம்னு எதை
வச்சு சொல்றீங்க ?

மற்றவர்; திருட வந்தவன் டி.வி.யையும் சேர்த்து
எடுத்துட்டுப் போயிட்டானே !

4)இந்த ஏரியாவுக்கு என்ன பெயர் ?

மற்றவர்; இன்னும் வைக்கலை! கொசு நிறைய
இருக்கிறதால், மலேரியா என்று
வைக்கலாம்னு இருக்கோம் !

(கல்கண்டு 21-4-03 இதழில் படித்து சுவைத்தது)

கால மாற்றம் !

எழுத்தாளர் சிவசங்கரி ,இலக்கியவாதிகளைப்
பேட்டி கண்டும் ,அவர்களது கவிதைகளைத்
தொகுத்தும் 'இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு'
என்ற நால்களை வெளியிட்டுள்ளார்.அதன் முதல்
பாகம் படித்தேன்.

அதில் முனிசிபல் கமிஷனராக இருந்து ஓய்வு
பெற்ற சேஷேந்திர வர்மா என்பவர் பேட்டியின்போது
சொன்னது;

''கங்கை-முன்னொரு காலத்தில் கடவுள்,
பின்னர்,

கங்கை-படகுகள் சென்று வந்த ஒரு பாதை,
பின்னர்,

கங்கை-நமது வயல்களுக்கு நீர் கொடுக்கும் ஓடை

பாருங்கள்-கடவுள் கூடக் காலகட்டத்தில்
மாற்றம் பெற்று விடுகிறாரே!

இரு பாலருக்கும் நல்லது

கறக்காத பால்!
தண்ணீர் கலக்காத பால்!
ஏழேழு ஜென்மத்துக்கும் ஏற்றது!

ஏழேழு சீர்களில் யாத்தது!
பாபேர் உரை கண்டது!
சில பேர் கரை கண்டது!

இரு பாலருக்கும் நல்லது
முப்பால்!


நன்றி; குருவிக்கரை சண்முகம்
(வாசிக்க ஒரு புல்லாங்குழல் )

கல்கி அவதாரம்

கல்கி அவதாரம் குறித்து 'மேற்கின் அழிவிலிருந்து'
என்ற நூலில் கீழ்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது ;

''கையில் வாளை ஏந்திக்கொண்டு இறக்கைகளையுடைய
ஒரு வெள்ளைக் குதிரையில் சவாரி வரும் கடைசி
அவதாரம். எரியும் வால் நட்சத்திரத்தைப் போல் கல்வி
அவதாரம் தோற்றமளிக்கம்.''

கடல் அழகாய்த் தெரிகிறது !

அழகு;

பார்க்கப் போனதோ ...
கடலின் அழகை!

கண்டதென்னவோ...
உடலின் அழகை!

காதலி சொல்கிறாள்...
இருட்டி விட்டது என்று!

காதலன் சொல்கிறான் இரு...
இப்போதுதான் கடல்
அழகாய்த் தெரிகிறது!

நன்றி; கவிஞர் அ. ஜெயசுதன் (ஆயுதப் பூக்கள்)

பேச்சாளன் ஊமையானான்!

1) மனைவிக்குப் பயந்தவன்
வெற்றிவாகை சூடினான்
மல்யுத்தப் போட்டியில்!

2) பல்லில்லாத பாட்டி
வியாபாரம் செய்தாள்
முறுக்கு!

3) இணை பிரியா ஜோடி
ஊருக்குள் பேச்சு
மாமியார் மருமகள் !

4) செத்தும் கொடுத்தான்
செலவாளி அப்பன்
கடன் சுமை !

5) சைவமும் வேண்டாம்
அசைவமும் வேண்டாம்
அஜீரத்தில் அவன்!

6) சுமை தாங்கவில்லை
ஊரெங்கும் கடன்
பளு தூக்கும் வீரன் !

7) அமைச்சர் நட்டார்
அலுவலக வளாகத்தில்
தூங்குமூஞ்சி மரம்!

8) பேச்சாளன் ஊமையானன்
அவன் மனைவி
பேசிய போது!

இசையின் இனிமையை அனுபவியுங்கள்!

அவசர வாழ்க்கை முறையில் எத்தனை இழக்கிறோம்
என்பதை சொல்லும் கவிதை;

TIME IS SHORT (Poem)

Have you ever watched kids on a merry-go-round
Or listened to the rain slapping on the ground?
Ever followed a butterfly's erratic flight
Or gazed at the sun into the fading night?
You better slow down
Don't dance so fast
Time is short
The music won't last

Do you run through each day on the fly
When you ask "How are you?" do you hear the reply?
When the day is done, do you lie in your bed
With the next hundred chores running through your head?
You'd better slow down
Don't dance so fast
Time is short
The music won't last

Ever told your child, we'll do it tomorrow
And in your haste, not see his sorrow?
Ever lost touch, and let a good friendship die
'Cause you never had time to call and say "Hi"?
You'd better slow down
Don't dance so fast
Time is short
The music won't last

When you run so fast to get somewhere
You miss half the fun of getting there.
When you worry and hurry through your day,
It is like an unopened gift....
Thrown away...
Life is not a race.
Do take it slower
Hear the music
Before the song is over.

- Unknown

courtesy;http://enganeshan.blogspot.com

இசை பிறந்தது எங்கே ?

காற்றினிலேதான் இசை பிறந்தது.கல்கி கிருஷ்ணமூர்த்தி
இயற்றிய பாடல்.எத்தனை முறை கேட்டாலும் நம்மை
மெய்மறக்கச் செய்யும் பாடலின் வரிகள்;(எம்.எஸ்.
சுப்புலட்சுமி பாடியது)

காற்றினிலே வரும் கீதம் !
கண்கள் பனித்திட பொங்கும் கீதம்
கல்லும் கனியும் கீதம் !

பட்ட மரங்கள் தளிர்க்கும் கீதம்
பண்ணொளி பொங்கிடும் கீதம்
காட்டு விலங்குகள் கேட்டு மயங்கும்
மதுர மோகன கீதம் !

நெஞ்சினிலே இன்பக் கனலை எழுப்பி
நினைவளிக்கம் கீதம்!

True friend

True friend:

Some like Sunday
Some like Monday
I like one Day
That is Friendship Day !

Courtesy: Indian Express-VIBES-22.1.02

கலப்படம்

ஓட்டல் ஒன்றில் முயல் கறியைக் கொண்டு விதவித மான உணவு வகைகள் தயாரித்து விற்கப்பட்டது. ருசியான அந்த உணவை சாப்பிடுவதற்காக பலரும் அந்த ஓட்டலுக்கு வரத் தொடங்கினார்கள்.
.
சேர்த்தேன்செய்து வந்தார்.கலப்படம் செய்தது கண்டு பிடிக்கப்பட்டதால் அதிகாரிகள் அவரை கைது செய்தனர். முயல் கறியுடன் என்ன கலந்தீர்கள்? என்று அவரிடவாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியதால், தேவையான அளவு முயல் கறி கிடைக்காமல் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால் ஓட்டல் முதலாளி, முயல் கறியில் கலப்படம் செய்து விற்பனை ம் கேட்டனர். ஒன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் குதிரைக்கறி என்றார் அவர்.

Deadly scrabble

This has to be one of the most clever E-mails I've received. Someone out there either has too much spare time or is deadly at Scrabble.

When you rearrange the letters:
Dormitory ... Dirty room
Astronomer ... Moon starer
Desperation ... A rope ends it
The eyes .... The s
Mother-in-law .. Women Hitler
Eleven plus two .. Twelve plus one !
Courtesy: thagavalnilayam.blogspot.com

Gossip

A woman repeated a bit of gossip about a neighbor. Within a few days the whole community knew the story. The person it concerned was deeply hurt and offended. Later the woman responsible for spreading the rumor learned that it was completely untrue.
She was very sorry and went to a wise old sage to find out what she could do to repair the damage. "Go to the marketplace," he said, "and purchase a chicken, and have it killed. Then on your way home, pluck its feathers and drop them one by one along the road." Although surprised by this advice, the woman did what she was told. The next day the wise man said, "Now go and collect all those feathers you dropped yesterday and bring them back to me." The woman followed the same road, but to her dismay, the wind had blown the feathers all away. After searching for hours, she returned with only three in her hand. "You see," said the old sage, "it's easy to drop them, but it's impossible to get them back. So it is with gossip. It doesn't take much to spread a rumor, but once you do, you can never completely undo the wrong." ***********

courtesy:www.fropki.com(author: sonam_kool )

Ultimate Joke

A Gujrati, a Madrasi and a sardaar were doing construction work on scaffolding on the 20th floor of a building.They were having lunch and Gujju said, "Dhokla! If I get dhokla one more time for lunch, I'm going to jump off this building."The Madrasi opened his lunch box and exclaimed, "Idli Sambhar again! If I get idli sambhar one more time I'm going to jump off too."The sardaar opened his lunch and said, "Parontha again! If I get a parontha one more time, I'm jumping
too"

The next day, the Gujju opened his lunch box, saw dhokla, and jumped to his death.The Madrasi opened his lunch, saw idli sambhar, and jumped, too.The sardaar opened his lunch, saw the parontha and jumped to his death as well.
At the funeral, Gujju's wife was weeping. She said, "If I'd known how really tired he was of dhokla, I never would have given it to him again!"The Madrasi's wife also wept and said, "I could have given him dossa! I didn't realize he hated idli sambhar so much."Everyone turned and stared at the sardaar's wife. Scroll down for her answer ..................The sardaar's wife said,"Don't look at me.
He makes his own lunch!
Courtesy:www. englishcolumn.blogspot.com

ஆதிசங்கரர் அருளியது

ஆதிசங்கரர் கேள்வி-பதில் பாணியில் அருளியவை
சில இங்கே . . .
எது இதமாதனது ? - தர்மம்

நஞ்சு எது ? -பெரியவர்களின் அறிவுரைகளை
அவமதிப்பது
மதுவைப்போல் மயக்கத்தை உண்டு பண்ணுவது
எது ? -பற்றுதல்.
எதிரி யார் ?- சோம்பல்.
எல்லோரும் பயப்படுவது எதற்கு?
இறப்புக்கு.
குருடனை விட குருடன் யார் ?
ஆசைகள் உள்ளவன்.
எது துக்கம் ?
மன நிறைவு இல்லாமல் இருப்பது.
எது இன்பம் தரும் ?
நல்ல மனதுடையவர்களின் சிநேகிதம்.
இறக்கும் வரை உறுத்துவது எது ?
ரகசியத்தில் செய்த பாவம்.
யாரை விபத்துகள் அணுகாது ?
மூத்தோர் சொல் கேட்டு நடப்பவனையும்
அடக்கமடையவனையும்.

courtesy: dinamani.com

மர்லின் மன்றோ

1926 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 1 ஆம் தேதி அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் பிறந்தவர் மர்லின் மன்றோ.

மர்லின் மன்றோவை தெரியாதவர்கள் இருக்க முடியாது. The most Beautiful lady என்று வர்ணிக்கப்பட்டவர். வெற்றிகரமான நடிகை என்று அழைக்கப்பட்ட போதிலும் இவரது வாழ்க்கை பல ஆச்சரியங்கள் நிறைந்தது. மிகவும் சாதாரண குடும்பத்தில் இருந்து வந்து மேற்கத்திய படவுலகின் முடிசூடா ராணியாக திகழ்ந்தவர் மர்லின் என்ற நோர்மா.

தனது 36 வது வயதில் மிகவும் மர்மமான முறையில் இவர் இறந்தார். இவரது வீட்டின் பணிப்பெண்ணால் இவரது உடல் படுக்கை அறையில் கண்டுபிடிக்கப்பட்டது. அளவுக்கு அதிகமான தூக்கமாத்திரையால் இவர் இறந்தாக காரணங்கள் சொல்லப்பட்டாலும்,இவரது மரணம் இன்னும் மர்மம் நிறைந்தாகவே கருதப்படுகிறது.

அப்படியும் இப்படியும்

ஆங்கிலத்தில் LIVE என்று கூறப்படும் சொல்,
வாழ்வையும் புத்துணர்ச்சியையும் குறிக்கிறது.
அதே வார்த்தையை பின்னோக்கி EVIL என்று
எழுதினால்,மரணத்தையும், துக்கத்தையும்
குறிக்கின்றது.
சி.ரகுபதி.போரூர்.

2) சூடான விவாதம்
சிலர் வெற்றிலைப் பாக்கு கடையோரம்
சுற்றுச்சூழல் கேடு பற்றி
சூடாக விவாதித்தனர்
பாக்கினை மென்று துப்பிக் கொண்டும்
சிகரெட்டை ஊதித் தள்ளிக் கொண்டும். . .!
வாணி ராஜன்,சென்னை-17

3) அ முதல் ஒள வரை. . .!
அழகாகத் தமிழ் பேசு
ஆனந்தமாய் உழைத்து வாழு
இனிமையாய்ப் பேசிப் பழகு
ஈவதில் இன்பம் தேடு
உற்சாகம் செயலில் காட்டு
ஊராரிடம் அன்பைக் கொட்டு
எளிமையாய் வாழ்ந்து காட்டு
ஏழையை மதித்து முன்னேற்று
ஐயமதை விலக்கித் தள்ளு
ஒற்றுமையை உயிராய்க் கொள்
ஓர் முறைதான் மரணம் என்றென்னு
ஒளவ்வை மொழியை உயிராய் என்னு. . .!
வ.வெற்றிசெல்வி,வேதாரண்யம்

நன்றி; தினத்தந்தி இளைஞர் மலர் 31-5-08

உன் வீட்டு நாள் காட்டியில். . .

நாமிருவரும் ஒன்றாகவே
பள்ளியில் படித்தோம்
நீயென்னவோ புத்திசாலியாய் இருக்கிறாய்
அதே போல்
காதலையும் ஒன்றாகவே படித்தோம்
நீயென்னவோ
முட்டாளிலும் முட்டாளாய் இருக்கிறாய்

ஒரிரு நாளில்
வருகிறேனென சென்ற நீ
இரு வாரம் கழித்து வருகிறாய்
உன் வீட்டு நாள் காட்டியில்
ஒரு நாள் என்றால் ஒரு வாரமா ?

நன்றி; கவிஞர் மு.குணசேகரன் ( ப்ளாஸ்டிக் இரவுகள் )

நெளியும் நாணல்

1) நீர்க் குடத்துடன்
நடையில் அவள்
நெளியும் நாணல்!

2) யானைக்கும்
அடி சறுக்கும்
சூரியனுக்கு கிரகணம்.

3) காக்கை கூடு
குயிலுக்கு
அரசுத் தொட்டில்!

4)அரசியல் கட்சிகள் எடுத்தது
மக்கள் தொகை கணக்கு ;
வகுப்பு!

5)பிள்ளைகளுக்கு இனி
சூட்ட முடியாத பெயர்
காவிரி, காவேரி.

6)பயங்கரமான முன்னேற்றம்
கடவுள் படைக்க மனிதன்
கோவிலுக்குள் துப்பாக்கியுடன்.

7)வலது கால் வைத்து வா
மண முறிவில் திரும்ப
எந்தக் கால்.

8)அவளோடு
நெருங்கி அமர
பனிப்புல் சுகம்.

9) ஒரு நெல் மணி
ஜோசியக் கிளிக்கு
உழைப்பிற்கேற்ற கூலி.

10) தாவுகிறது
மரத்திற்கு மரம்
பாலம் கட்டிய குரங்கு.

நன்றி ; கவிஞர் டி.ராஜேந்திரன் (சிவந்த ரேகை )

இந்தியா

இயற்கை வளங்களில்
ஜப்பான் ஊனம்

மனித வளத்தில்
வளைகுடா ஊனம்

சமுதாயக் கடமைகளில்
இந்தியா ஊனம்

இந்தியக் குடியரசு சட்டங்களை
அதன் ஓட்டைகள் வழியே
அழித்து வரும்
இந்தியர்களே !

இந்தியாவில் பிரச்சனை
அறியாமையால் அல்ல
ஆக்கமும்
செயலும்
அறியாமையில்தான்.

நன்றி; என்.சுரேஷ் ( எண்ணங்களின் ஊர்வலம் )

மீறல்

அழுத்தி அழுத்தி சீவினாலும் படியாமல்
நெற்றியில் விழுகிறது கற்றை முடி.
பார்த்துப் பார்த்து போட்டாலும்
டீச்சரின் கோட்டை விட்டு
விலகிப் போகிறது பையனின் 'ஆனா'.

தேடித் தேடி நடந்தாலும் பாதச்சுவட்டை விட்டு
தவறிப் போகிறது நடை.
எப்படித்தான் அலசினாலும் எங்காவது ஓரிடத்தில்
அதிகமாய் போய்விடுகிறது சட்டையில் நீலம்
அறைக்குள் வைத்தே வளர்த்தாலும்
ஜன்னலுக்கு வெளியே தலை சீட்டிச்
சிரிக்கிறது பூ !

ஒரே மாதிரி டிக் டிக் கேட்டு
வாழ்க்கை நகரவேண்டுமென
ஏன் நினைக்கிறாய் ?

நன்றி ; கவிஞர் ஜீவி (நைலான் ஊஞ்சல்)
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது