ஆஸ்தானக் கவி ஆங்கிலம் படித்தார் !

துளிப்பா ! ;-

ஆஸ்தானக் கவி ஒருவர்
ஆங்கிலம் படித்தார்
தமிழ்ப் படத்தில் பாட்டெழுத !

புதிய நீதி ;-

இனி கண்ணகிகள் நீதி கேட்டு
நெடுந்தொலைவு போகவேண்டியதில்லை...
மதுரையில் வந்து விட்டது
உயர்நீதிமன்றக் கிளை !

மூக்கு கண்ணாடி ;-

வெளியூர் பயண முடிவில்
மனைவிக்கு மல்லிகைப் பூ
மகளுக்கு ஃபேர் அன் லவ்லி
மகனுக்கு ஜீன்ஸ்பேண்ட்
வாங்கும் குடும்பத்தலைவருக்கு
மறந்து போகிறது
அம்மா கேட்கும் மூக்குக் கணைணாடி !

நன்றி; தினகரன் -வசந்தம் (5.9.04)

0 comments:

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது