உதிரும் இலை

எப்போதும் ஆவதில்லை
அம்மாவுக்கும் அண்ணிக்கும்

நெல்குத்தி...
முள்சுமந்து...
குமைந்த கதை சொல்லி
பொருமுகிறார் அம்மா
காஸ் அடுப்பும் கிரைண்டரும் வாய்த்த
அண்ணியை நினைத்து

சோற்றில் கல்
குழம்பில் உப்பு
தண்ணியில் முடி
ஏதெனுமொன்று கிடைத்து விடுகிறது
அண்ணியோடு சண்டை பிடிக்க

அப்பாவின் நேற்றைய நிலை
இன்று அண்ணனுக்கு

பாட்டியை 'கொடுமைக்காரி' என்ற அம்மா
உணரவில்லை
தானும் அவளாகவே
மாறி விட்டிருப்பதை !

நன்றி ' யாழினி முனுசாமி (உதிரும் இலை )

0 comments:

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது