இறைப்பற்று!

முனிவர் ஒருவருடைய சீடனுக்கு பலத்த சந்தேகம் ஒன்று ஏற்பட்டது. அதனை முனிவரிடமே கேட்டான், “சுவாமி, கடவுள்மீது பற்று வைத்தால் மற்ற பற்றுகள் எல்லாம் தளர்ந்துவிடும் என்று சொல்கிறீர்களே.. அது எப்படி?”அதனைக்கேட்டு புன்னகைத்த முனிவர், விறகுக்கட்டு ஒன்றை எடுத்து வருமாறு அந்த சீடனிடமே பணித்தார். அந்த சீடனை அழைத்து, “இந்த விறகுக் கட்டின்மீது இன்னும் இறுக்கமாக வேறொரு கயிறால் கட்டு!” என்றார். அப்படியே செய்தான் அந்த சீடன்.
“இப்போது முதலில் கட்டியிருந்த கயிற்றினைப் பார்!” என்று சொன்னார் முனிவர். சீடன் பார்க்க முதலில் கட்டி இருந்த கயிறு தளர்ந்து இருப்பது தெரிந்தது.“இப்படித்தான்.. கடவுள் மீதான பற்று எனும் கயிற்றினால் இறுகக் கட்டும்போது முதலில் பற்றி இருந்த குடும்பம், பந்தம் என்ற கட்டுகள் தாமாகவே தளர்ந்துவிடும்!” என்றார் முனிவர்.முனிவரின் விளக்கத்தால் பொருள் புரிந்து சந்தோஷம் கொண்டான் சீடன்.

0 comments:

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது