சாமர்த்தியம்

சாமர்த்தியங்களுடன் வாழ்கின்றோம்
நம்மில் நாம்
வெளிப்பட்டு விடாதபடி

எல்லா வார்த்தைகளையும் பேசிவிடுகிறோம்
எதுவும்
புரிந்து விடாதபடி

தொலைபேசிகளின் முன்னால்
பேசிக்கொள்கிறோம்
மொழிகள் தீர்ந்து விடாதபடி

சிறிய நிராகரிப்பிலும்
தளர்வுற்றுப் போகிறோம்
பிரியம் நஷ்டப்படாதபடி

வைராக்கியமாய்
விழித்துக்கொண்டே இருக்கிறோம்
அந்தக் கனவை எதிர்பார்த்து

ஒரு போதும் நிகழப்போவதில்லை
ஒரு பிரியம்.

நன்றி ; தமிழ்தாசன் (பட்டாம் பூச்சிகளின் சாபம்)

0 comments:

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது