கிராமத்துக் காற்று

''எண்ண விரிவுகளை எழுத்துச் சுருக்கத்தில் கொண்டு
வருவது கவிதை.கவிதை ஓர் சுருக்க வாகனம்.அதிலும்
ஹைக்கூ வாமனம்'' என்கிறார் ஓவியக் கவிஞர் மலர்மன்னன் தனது அணிந்துரையில் (சஞ்சீவி
மோகனின் ' கிராமத்துக் காற்று).
இந்த ஹைக்கூ தொகுப்பிலிருந்து சில ஹைக்கூ
கவிதைகள் ;

கடவுளிடம் கூட நிறைய ஆயுதங்கள்
மனிதன் மட்டும்
எப்படி அமைதியாய் ?

இறந்த பின்னும்
உழைக்கிறது செருப்பாய்
மாடு.

அதிக பலம் ஆபத்து
சூறாவளியில் சாய்ந்த மரம்
அசையாமல் புல்.

காப்புரிமை பற்றிக் கவலையில்லை
கிளி தின்னனும்
வேப்பம் பழம்.

நன்றி ஊர்வலம் நடத்தும்
எறும்புகள்
அம்மா போட்ட மாக்கோலம்.


0 comments:

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது