காணி நிலம் வேண்டும். . .

காணி நிலம் வேண்டும் - பராசக்தி
காணி நிலம் வேண்டும், - அங்கு
தூணில் அழகியதாய் - நன்மாடங்கள்
துய்ய நிறத்தினதாய் - அந்தக்
காணி நிலத்தினிடையே - ஓர்மாளிகை
கட்டித் தரவேண்டும் - அங்கு
கேணியருகினிலே - தென்னைமரம்
கீற்று மிளநீரும்.
பத்துப் பன்னிரண்டு - தென்னைமரம்
பக்கத்திலே வேணும் - நல்ல
முத்துச் சுடர்போலே - நிலாவொளி
முன்பு வரவேணும்,
அங்கு கத்துங் குயிலோசை - சற்றே
வந்து காதிற் படவேணும், - என்றன்
சித்தம் மகிழ்ந்திடவே - நன்றாயிளந்
தென்றல் வரவேணும்.
பாட்டுக் கலந்திடவே - அங்கேயொரு
பத்தினிப் பெண்வேணும் - எங்கள்
கூட்டுக் களியினிலே - கவிதைகள்
கொண்டுதர வேணும் - அந்தக் காட்டு
வெளியினிலே - அம்மா!
நின்றன் காவலுற வேணும், - என்றன்
பாட்டுத் திறத்தாலே - இவ்வையத்தைப்
பாலித்திட வேணும்.

************
பாரதியார்

ஹைகூ -பொன்.சுதா

ஓய்வெடுக்க வந்தாலும்
மறக்கவில்லை
நகரத்து வேகநடை.
************

நானும் ஆதாம் தான்
துரத்திய சொர்க்கம்
தாய் வயிறு..
**************

மின்சாரம் போனதும்
கூடுகிறது ஒளி
நடசத்திரங்களுக்கு.
************

கூட்டத்தில் எது
நேற்று முகம் மோதிய
வண்ணத்துப் பூச்சி…
****************

பெரும் மழை
இரவெல்லாம் நனைந்தேன்
பழைய மழையில்.
***************

தொலைந்து போனது
நிறைந்த கம்மாயில்
விளையாட்டு மைதானம்
*************

வயிறு கிள்ளும் பசி
கூட்டமாய் இருக்கிறது
குழாயடி.
************

துயிலெழுப்பிக் கொடுக்கிறான்
பால்காரன் தினமும்
உதயக் காட்சி
***********************************************************************************************************************
ஆக்கம்; பொன்.சுதா,
நன்றி;ponsudhaa.wordpress.com

ஓம்காரம்

ஓம்கார நாதத்தின் உச்சரிப்பு பற்றி பதஞ்சலி தன் யோக சூத்திரத்தில் என்ன சொல்கிறார் என்று பார்க்கலாமா?

ஓ+ம் = ஓம்

’ஓ’ வின் உச்சரிப்பு குறைவாகவும், ‘ம்’ இன் உச்சரிப்பு நீண்டாதகவும் இருக்க வேண்டும்.

ஓம், ஓம், ஓம்,… என்று தொடர்ந்து உச்சரிக்க வேண்டும். சப்தமாக உச்சரிப்பதைக் காட்டிலும், மனதிலேயே உச்சரித்தல் நலம்.

ஓ என்று தொடங்கும்போது மனதில் தங்களுக்கு ஒரு இஷ்ட தேவதையோ அல்லது வேறு எந்த ஒரு பொருளையோ நினைக்க துவங்கிக் கொண்டால், ’ம்’ இல், அந்த நினைவினை தொடர வேண்டும்.

இதோடு சேர்ந்து நாசிப்பயிற்சியும் செய்தால் மேலும் பயனுண்டு.

மூச்சை உள்ளிழுக்கும் போது, மனதில் ‘ஓ’ வைத் துவக்கிக்கொண்டவாறு, தாங்கள் தேர்வு செய்த பொருளை மனத்தில் இருத்திக்கொள்ள வேண்டும்.

அடுத்து மூச்சை வெளி விட்டவாறு ‘ம்’ மைத் தொடரவேண்டும். எண்ணத்திலும் நிலைநிறுத்திய பொருளை தொடர்ந்தவாறு.

இவ்வாறு தொடர்ந்து பயிற்சி செய்தால், வெகு சீக்கிரமாக தாங்கள் எண்ணத்தில் நிறுத்திய பொருள் அல்லது இஷ்ட தேவதையினை மனதில் ஒருமுகப்படுத்தும் சித்தி கிடைக்கும். வேறு மாற்று சிந்தனைகள் ஏற்பட்டு மனதை அலைக்கழிக்கவிடாமல் நெருங்கிய பொருள் கைக்கிடைக்கும். அந்த நெருங்கிய பொருள் நீங்கள் யாரென்ற தன்னறிவானால், மீளாத் துயர்களில் இருந்து விடுதலை பெறும் பாதை உங்கள் கையில்!

****************
நன்றி;http://arull.wordpress.com/

மூத்தோர் சொல் அமிர்தம்

கண்டனத்தைக் தாங்கிக் கொள்ளும் திடமனம் இல்லையென்றால் கடமையை
நிறைவேற்ற முடியாது. - காண்டேகர்

உயர்வு என்பது ஊக்கத்தின் அளவைப் பொறுத்ததே - மாத்யூஸ்

பொய்த் தோற்றங்களால் கவரப்படும் மனம் நல்ல விஷயங்களில் சுவை
காணாது- ஹொரேஸ்

எதற்கெடுத்தாலும்,’கடவுளே,கடவுளே!’ என்றழைப்பதைவிட உங்கள்
பணியை ஒழுங்காகச் செய்து முடியுங்கள்- ப்ராங்ளின்

திருப்தி இயற்கையான செல்வம், சொகுசான வாழ்வு செயற்கையான
வறுமை - சாக்ரடீஸ்

சந்தேகம் என்றொரு கோட்டையின் அதிருப்தியே அவநம்பிக்கை –
ஜான் பன்யன்

உண்மை,வீரம் எங்கு இருக்கிறதோ, அங்கு அடக்கமும் மிகுந்திருக்கும—
வில்லியம்.

சர்தார்ஜி ஜோக்ஸ்

வேகமாக காரோட்டியதற்காக சர்தார் தடுத்து நிறுத்தப்பட்டார்.

" அதிக வேகம் 50 கி.மீ ன்னு போட்டிருக்கே பார்க்கலியா..?"


" இல்லையே... 70 ன்னு தானே எல்லா எடத்திலேயும் போட்டிருக்கு.."


" யோவ்... அது Nh 70. இந்த நெடுஞ்சாலையோட பேரு.. சரி பொழைச்சு போ..
சிங்குங்கறதாலே சும்மா விடறேன்.. சரி ஏன் உங்க வீட்டுக்காரம்மா இப்படி
பேயறைஞ்சது மாதிரி வியர்த்துப் போய் உக்காந்து இருக்கு..?"


" கொஞ்சம் முன்னாலே Nh 140 லே வந்தேன்... அதான்

****************

ஒரு சர்தார் வீடு கட்டிக் கொண்டிருந்தார்.. அவரே தச்சு வேலையும்
செய்தார்.. ஒரு சன்னலைப் பொறுத்துவதற்காக ஆணி அடித்துக் கொண்டிருந்தார்.
அவ்வாறு செய்யும்போது... சில ஆணிகளை அடிப்பார்..சிலவற்றை தூக்கிப்
போட்டுவிடுவார்.. இதைக் கவனித்துக் கொண்டிருந்த நண்பர் கேட்டார்..

" இந்த ஆணியெல்லாம் நல்லாதானே இருக்கு.. ஏன் தூக்கிப் போட்டுட்டே..?


" முட்டாள்.. நல்லா பாரு.. கூர் முனை என் பக்கம் இருக்கற ஆணியா இருந்தா
எப்படி அடிக்க முடியும்..? கொண்டைப் பக்கம் என்னை நோக்கி இருந்தால் தானே
அடிக்க முடியும்..?


" ஹா... ஹா... இதுக்குதாண்டா நாமன்னா எல்லாரும் ஏளனம் பண்றாங்க.. அறிவு
கெட்டவனே.. கூர் முனை நம்ம பக்கம் இருந்தா அதெல்லாம் சுவற்றுக்கு அந்தப்
பக்கம் அடிக்கிற ஆணி..அதை வீட்டுக்கு உள்பக்கம் அடிக்க வேண்டியது தானே..
ஏன் தூக்கி போடறே..??!!!

*****************

உண்மைக்குப் பரிசு-புஷ்பவனம் குப்புசாமி

புஷ்பவனம் குப்புசாமியின் சிறுவர் பாடல்கள்

உண்மைக்குப் பரிசு

*************************

உண்மை பேசினால் நன்மைகளுண்டு
விறகு வெட்டி கதை கேளுங்கள் !
விறகு வெட்டியின் நேர்மைக்காகக்
கிடைத்த பரிசினைப் பாருங்கள் !

காட்டுக்குள்ளே ஆற்று ஓரமாய்
பட்ட மரமொன்று இருந்தது !
பட்ட மரத்தை வெட்டும்போது
கோடரி ஆற்றுக்குள் விழுந்தது !
கோடரி இன்றித் தவித்த ஏழையிடம்
தேவதை ஒன்று வந்துது !
தங்கக் கோடரி ஒன்றை எடுத்து
விறகு வெட்டியிடம் தந்தது !

தங்க கோடரி,வெள்ளிக் கோடரி
எதையும் மரம் வெட்டித் தொடவில்லை !
இரும்புக் கோடரி தன்னது என்று
எடுத்துக் கொண்டான் பொய்யில்லை !
விறகு வெட்டியின் நேர்மை கண்டு
தேவதை உள்ளம் மகிழ்ந்தது !
வெள்ளிக் கோடரி தங்கக் கோடரி
எல்லாம் பரிசாய்த் தந்தது.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

ஆக்கம்; புஷ்பவனம் குப்புசாமி
புஷ்பவனம் குப்புசாமியின் சிறுவர் பாடல்கள்
(மணிமேகலைப் பிரசுரம்)

மனிதன்

பத்துப் பசுக்களை எடுத்து ஆராய்ந்து பார்த்தால் பத்துப் பசுக்களிடமும் பசுவின் குணத்தையே காணலாம்...

பத்துப் புலிகளை எடுத்து ஆராய்ந்து பார்த்தால் பத்துப் புலிகளிடமும் புலியின்; குணத்தையே காணலாம்...

பத்துப் சிங்கங்களை எடுத்து ஆராய்ந்து பார்த்தால் பத்துப் சிங்கங்களிடமும்; சிங்கத்தின் குணத்தையே காணலாம்...

ஆனால் பத்து மனிதர்களை எடுத்து ஆராய்ந்து பார்த்தால் பத்து மனிதரிலும் மனிதனின் குணத்தை காணமுடியாது. பசுவைப் புலியாக்க முடியாது. புலியை பசுவாக்க முடியாது. சிங்கத்தை மனிதனாக்க முடியாது. ஆனால் மனிதன் புலியாகலாம், சிங்கமாகலாம், பசுவாகலாம், விரும்பினால் மனிதனாகவோ அல்லது தேவனாகவோ வாழலாம்..

*************
(படித்ததில் பிடித்தது)

கோகுலின் நகைச்சுவை

ஆசிரியர் : உலகத்திலே சிறந்த, அழகான மொழி எது?

மாணவன் : உங்க பொண்ணு தேன்மொழி தான் சார்

******

ஆசிரியர் : உனக்கு பக்கத்துல ஒருத்தன் தூங்குறானே அவன எழுப்பி விடு

மாணவன் : தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பிவிடுறது நானா சார் ?

******

ஆசிரியர் : சுபன் 10 சாக்லெட் இருக்கு அதை உமாவுக்கு 3 ராதாவுக்கு 3 சுதாவுக்கு 3 கொடுக்கிற இப்ப உனக்கு என்ன கிடைச்சிருக்கும் ?

மாணவன் : எனக்கு புதுசா 3 கேர்ள் பிரண்ட் கிடைச்சிருக்கும்

******

மாணவன் : டீச்சர் பண்ணாத தப்புக்கெல்லாம் அடிக்க மாட்டீங்களே?

டீச்சர் : ச்சே அப்படில்லாம் அடிக்க மாட்டேன். அது என்ன பண்ணாத தப்பு

மாணவன் : நேத்து கொடுத்த ஹோம் ஒர்க் நான் "பண்ணல"

******

ஆசிரியர் : ஏண்டா நேத்து பள்ளிக்கூடம் வரலை ?

மாணவன் : 'மதியாதார் தலைவாசல் மிதியாதே' ன்னு நீங்கதானே சொல்லிக் கொடுத்தீங்க.

******

சுரேஷ்: அண்ணே, எங்க கணக்கு ஆசிரியருக்குக் கணக்கே தெரியல.

ரமேஷ்: தம்பி, எப்படி சொல்ற?

சுரேஷ்: அவரோட நாலாவது பொண்ணுக்கு 'அஞ்சு'ன்னு பேரு வச்சுருக்காரு..?

******

ஹெச்.எம். : டேய்! எவன்டா தமிழ் ஆசிரியர் காலை வாரிவிட்டது?


மாணவன் : இல்லை சார்! நேத்து அவர்தான் 'நாளை காலை வாருங்கள்'னு சொன்னார்.

******

''நம்ம டீச்சருக்கு என்ன ஆச்சு?''

''ஏன்?''

''கண்ணு முன்னால அவங்கதான் இப்ப போர்டுல திருக்குறள் எழுதிப் போட்டாங்க, திரும்ப நம்மகிட்டேயே
'திருக்குறளை எழுதினது யாரு?'னு கேக்குறாங்களே!''

******


--
ப்ரியத்துடன்,
கோகுல்

--~--~---------~--~----~------------~-------~--~----~
நன்றி;
"தமிழ் பிரவாகம்"
"தமிழ் எங்கள் உயிருக்கு நேர்"

Piravakam@googlegroups.com
-~----------~----~----~----~------~----~------~--~---

தேவதை [க.கோபி கிருஷ்ணா.]

ஓர் நொடியை பல யுகங்களாலும்
பல ஆண்டுகளை சில சொடிகளாலும்
மாற்றும் அபூர்வ தேவதை நீயே...

என் அருகில் நீ இருக்கும்
யுகங்கள் எல்லாம் நொடியாய் கரைவதென்னடி...
நீ அருகில் இல்லாத நொடிகள் கூட
யுகமாய் வலிப்பதென்னடி???

உன் கண்கள் பேசும் ஒவ்வோர் வார்த்தையும்
ஒவ்வோர் காவியமடி...
காவியத்தை கற்க விரும்பும்
இலக்கிய மாணவனடி நான்...



--~--~---------~--~----~------------~-------~--~----~
நன்றி;
"தமிழ் பிரவாகம்"
"தமிழ் எங்கள் உயிருக்கு நேர்"

Piravakam@googlegroups.com

வாழ்கிறாள் அம்மா

எங்கேயும் போய்விடவில்லை
அம்மா
வைகைறைப்பனியில் நடக்க
‘ஷூஸ்’ அணியும்போது
கழுத்தில் கம்பளித் துண்டைச்
சுற்றிவிடுகிறாள்

தவளையும் பாம்புமாய்த்
தொண்டையில் கபம்
கட்டுகையில்
மணக்க மணக்கத்
தழை ரசம் வைத்துக் கொடுக்கிறாள்

வழ்க்கம் போலத்
தோப்பும் துரவும் கணக்கும் வழக்கும்
எனக்குத் தொல்லை வராமல்
கண்ணுக்குள் வைத்துக்
காப்பாற்றி வருகிறாள்

பண்டிகை வந்தால்
பளிங்குக் கிண்ணமாய்
வீடு புதுக்கிறாள்

மருமகள் மீது
கொள்ளைப் பிரியம்
மடியில் வைக்காத குறையாய்
கண்களாலேயே ஆசீர்வதிக்கிறாள்

வெளியூர் சென்று
தாமதாய் வந்தால்
கதவாய் மாறிக் காத்திருக்கிறாள்

காலைக் காபி
மேசைமேல் வைக்கும் ஓசை கேட்டு
அம்மா என்று
அழைக்கத் திரும்பினேன்
மனைவி !

பூச்சரம் எடுத்து
அம்மா படத்துக்கு
மாலை இட்டாள் அவள்

எங்கேயும் போய்விவில்லை
அம்மா.
ஆக்கம்; கவிஞர் சிற்பி
( ‘’மூடு பனி’’- கவிதை தொகுப்பு

Baby Camel

Baby Camel


The little camel went to his mother and asked, "Mother, why do we camels have such big eyes?"

She looked on him lovingly and replied, "You see, my son, when we are walking in the dessert and the wind starts to blowing and there's sand everywhere, we need these big eyes to keep an eye on one another so that we don't get lost."

"Oh!" he said. "And why do we have such huge feet?

"Well," she said, "they allow us to walk easily in the dessert sands and help us avoid sinking into the dunes."

"Wow," he said, "great equipment. What the heck is this stuff on our backs for?"

"You see," his mother informed, "we can walk for days, even weeks without food or water, so we use it to store fat during those times. But why do you ask me all these obvious questions?"

"Well, mother," said the young camel, "I was just wondering, if we've got all of this great stuff, what are we doing in the zoo?"

Tenali raman and the difficult task

Tenali raman and the difficult task

Tenali Raman was a very wise and witty man in the court of King Krishnadeva Raya.
Krishnadeva Raya was the ruler of the Vijayanagar kingdom. Tenali Raman was the court
jester, and many stories are told about him.
One day, King Krishnadeva Raya asked his courtiers, “You are wise and learned men. Tell
me, which is the most difficult job in the world?”
The courtiers had a ready answer. They said, “Your Majesty, everyone knows that
the job of ruling the country is by far the most difficult job in the world.’
The king was pleased with their answer. But he noticed that Tenali Raman was smiling
to himself, as if he found this answer funny.
The king asked him why he was smiling. “Perhaps you don’t agree with your friends
that my job is the most difficult job in the world. Is that why you are smiling?”
Tenali Raman said, “Your Majesty, I agree that it is difficult to rule a country well.
But I don’t think that it is the most difficult job in the world. There is another job
which is much more difficult.’
“Tell us what that job is, Raman,” said the king.
“A mother’s job,” said Raman, “It is much more difficult to keep a child happy than
to look after a kingdom.”
The whole court broke into loud laughter, and of course Raman was asked to prove
the truth of his words.
So Raman brought a woman and her young son to the king.
“Now ask the kind Raja for anything that you want,” he told the little boy.
“An elephant,” said the little boy at once.
An elephant was immediately brought for him.
“Put him into my basket,” the boy said, “I want to take him home.”
“But he won’t fit into your basket, son. He’ll come walking behind you when you go
home.”
The little boy was stubborn. “I want him in my basket,” he said, “My friends won’t
know that he is my elephant if I don’t take him home in my basket.”
He started crying, and nothing that anyone said would make him change his mind.
The king and his courtiers tried everything they could. But the boy just did not listen.
He cried and cried and cried. Then the mother said something to Raman, and he
immediately sent for a toy elephant. She turned to her son and said, “Look, my son.
Here’s a small elephant which is much more beautiful than the big elephant. It is
wearing a gold chain, and there is a golden umbrella on top of its head. It has wheels
so that you can pull it behind you wherever you go. It will fit easily into your basket.
Tell the man to take away the big elephant - your basket will break if you put him in
it, and you can’t take him to your friend’s house because he is so big.”
The boy stopped crying. The mahout led away the elephant, and the little boy and his
mother went away happily.
Then the king wiping the sweat from his brow, said, “Raman, I agree that a mother’s
job is the most difficult job in the world.”
*********
source:
http://www.indusladies.com/forums/blogs/anandchitra/tenali-rama-512/

வா‌ழ்‌க்கை‌க்கான ம‌ந்‌திர‌ம்..

வா‌ழ்‌க்கை‌க்கான ம‌ந்‌திர‌ம்..
இ‌ன்று ஒரு தகவ‌லி‌ல் கே‌ட்டது
ஒரு மன்னர் தன் நாட்டிற்கு வந்த துறவியை நன்கு உபசரித்து அவருக்குத் தேவையான பணிவிடைகளை எல்லாம் கொடுத்து அவரை மனம் குளிர வைத்தார்.

துறவி கிளம்பும்போது... மன்னரின் கையில் ஒரு சீட்டைக் கொடுத்து, இதில் ஒரு மந்திரம் எழுதியுள்ளேன். இதனை உனக்கு கடுமையான துன்பம் வரும் நேரத்திலோ அல்லது இன்பமான நேரத்திலோ மட்டும் எடுத்துப் பார்.

மற்ற நேரங்களில் எடுத்துப் பார்த்துவிட்டால் இந்த மந்திரம் பலனளிக்காது என்று கூறிவிட்டுச் சென்றுவிட்டார்.

பல காலங்கள் கழிந்தன. அப்போது,

ஆ ஈன, மழை பொழிய, இல்லம் வீழ
அகத்தடியாள் மெய் நோக, அடிமை சாக
மா ஈரம் போகுதென்று விதை கொண்டோட
வழியிலே கடன்காரன் மறித்துக் கொள்ளச்
சாவோலை கொண்டொருவன் எதிரே செல்லத்
தள்ளவொண்ணா விருந்து வரச், சர்ப்பம் தீண்டக்
கோவேந்தர் உழுதுண்ட கடமை கேட்டுக்
குருக்கள் வந்து தட்சணை கொடு என்றாரே!

இ‌ந்த பாட‌லி‌ன் பொரு‌ள்... ''பசுவானது கன்று போட, பெரும் மழை பொழிய, வீடு இடிந்து விழ, வீட்டுக்காரி உடல் நலமின்றி வருந்த, வேலைக்காரன் இறந்து போக, நிலத்தில் ஈரம் காய்ந்து விடுமே என்று விதை நெல்லைச் சுமந்தொருவன் விரைவாகச் செல்லும் வேளை; கடன்காரன் வழி மறிக்க, சாவு சேதி கொண்டு ஒருவன் எதிரே வர, காலில் பாம்பு கடிக்க, தவிர்க்க முடியாத முக்கியமான விருந்தினர் வந்து சேர, வரி செலுத்தக்கோரி மணியக்காரர் நிர்ப்பந்திக்க, என்ன செய்வது? எப்படி சமாளிப்பது? என்று தவித்துக் கொண்டி‌ரு‌ந்த வேலை‌யி‌ல் - புரோகிதர், தனக்குச் சேர வேண்டிய தட்சணையைக் கேட்டாராம்!''

இ‌ப்படியான ஒரு வேதனை‌த் தா‌‌ன் அ‌ந்த ம‌ன்னனு‌க்கு‌ம் ஏ‌ற்ப‌ட்டது. அ‌ப்போது, துறவி கொடுத்த சீட்டு அவரது நினைவுக்கு வந்தது. அதனை எடுத்துப் படிப்பது என்று முடிவு செய்தான் மன்னன்.

அந்த சீட்டினை எடுத்து படித்த போது, அதில் "இதுவும் கடந்து போகும்" என்று 3 வார்த்தைகள் இருந்தன....

எந்த பிரச்சினையாக இருந்தாலும் சரி, மகிழ்ச்சியாக இருந்தாலும் சரி... அது ஒரு சில மணி நேரங்களிலோ அல்லது நாட்களிலோ கடந்து போய்விடும். எனவே எந்த கஷ்டமாக இருந்தாலும் அது நம்முடனே இருந்துவிடப்போவதில்லை.

ஆகவே மனதில் கவலை கொள்ளாமல் பிரச்சினையை எதிர்நோக்கும் அளவிற்கு மனதை பக்குவப்படுத்தி வைத்துக் கொள்வதுதான் சிறந்தது.
*********


Thanks:http://vanisri.mywebdunia.com/2008/05/19/1211184840000.html

All names are yours

All names are yours

Allah is mine, Rama is mine,

Krishna is mine, Vishnu is mine,

Brahma is mine, Jesus is mine,

You are in every name, every name is yours.



You are in water, you are in fire

You are in the earth, you are in the sky

I am in you and you are in me

posted by:Navingulia

source:http://www.navingulia.com/Poetry.htm

----

Life is not meant to be lived. It is meant to be savoured.

நவக்கிரகங்களுக்கு உகந்த மலர்கள்.

நவக்கிரகங்களுக்கு உகந்த மலர்கள்.
------------------------------------------------------------

ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு பிராத்தணைகள் உண்டு இதில் நவக்கிரகத்தை
வழிபடும்போது அதற்கு ஏற்ற பூக்களை நாம் பயன் படுத்தி பலன் பெறுவோம்.


நவக்கிரகங்களை பூஜிக்கும்போது பயன்படுத்தப்பட வேண்டிய மலர்கள்.


சனி - கருங்குவளை
புதன் - வெண் காந்தள்
சந்திரன் - வெண் அலரி
சூரியன் - செந்தாமரை
செவ்வாய் - செண்பகம்
குரு - முல்லை
சுக்கிரன் - வெள்ளைத் தாமரை
ராகு - மந்தாரை
கேது - சிவப்பு அல்லி
இதை கடைபிடித்து இன்பமாய் வாழ்க.

கண்ணம்மாவின் காதல்

கண்ணம்மாவின் காதல்

*************

காற்று வெளியிடைக் கண்ணம்மா - நின்றன்
காதலை யெண்ணிக் களிக்கின்றேன் - அமு
தூற்றினை யொத்த இதழ்களும் -நில
வூறித் ததும்பும் விழிகளும் - பத்து
மாற்றுப் பொன் னொத்தநின் மேனிய
வையத்தில் யானுள்ள மட்டிலும் - எனை
வேற்று நினைவின்றித் தேற்றியே - இங்கொர்
விண்ணவ னாகப் புரியுமே - இந்தக் (காற்று)

நீயென தின்னுயிர் கண்ணம்மா - எந்த
நேரமும் நின்றனைப் போற்றுவேன் -துயர்
போயின, போயின துன்பங்கள் - நினைப்
பொன்னெனக் கொண்ட பொழுதிலே -என்றன்
வாயினி லேயமு தூறுதே - கண்ணம்
மாவென்ற பேர்சொல்லும் போழ்திலே - உயிர்த்
தீயினி லேவளர் சோதியே - என்றன்
சிந்தனையே, என்றன் சித்தமே - இந்தக் (காற்று) 2

***********
சுப்ரமணிய பாரதியார் (1882 - 1921) பாடல்கள்
source:http://tamilelibrary.org/teli/barathiun.html

கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா?

கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா?

*************

ஏதாவது பேசிக்கொண்டே இருக்க வேண்டும் என்பது என்னதான் உணர்வோ தெரியவில்லை. கண் திறந்ததும் வாயைத் திறக்க ஆரம்பித்தால் கண்ணயரும் வரை பேசிக்கொணடே இருப்பவர்கள் இவர்கள்.

பேசுவதற்கு எவரும் கிடைக்காவிட்டால், தெருவில் வருகிறவர்கள் போகிறவர்களிடமும் வாழைப்பழக்காரர்களிடமும், கீரைக்காரம்மாக்களிடமும் பேச்சுக்கொடுத்து வார்த்தைகளை வளர்ப்பார்கள்.

அதிகம் பேசும் சாதனையாளர்களை நான் வாழ்நாளில் பார்த்ததே இல்லை. வேறு வகையில் சொல்வது என்றால் தொணத்தொண மனிதர்கள் வெற்றியாளர்களாகப் பரிணமிப்பதே இல்லை. இன்னும் ஒரு படி மேலே போய்ச் சொல்வது என்றால் செயல் இயலாமைகளே வார்த்தைகளின் வம்பளப்புகளாக வெளிப்படுகின்றன.

இவர்களை இரண்டு இரகத்திற்குள் அடக்கலாம். முதல் பிரிவினர், ஊர் அக்கப்போர்களைப் பேசுவார்களே தவிர, வம்பு இல்லாதவர்கள்.

அடுத்த இரகத்தினரோ, விவகாரமான மனிதர்கள். புறம் பேசுவது; அவதூறு வளர்ப்பது; வதந்திகளைப் பரப்புவது இவர்களது வாய் எனும் வானொலியின் வேலை. ஒரு பயணி, தான் பயணித்த பேருந்தின் ஓட்டுநருடன் பேச்சுக் கொடுக்க, அவரும் தூக்கம் வராமலிருக்க இவரது உரையாடலை ஊக்கப்படுத்த, வம்பளப்பு வெகுநேரம் நீண்டது.

இந்த வம்பளப்பின் ஒரு பகுதியில் அந்தப் பயணி தாம் வேலை பார்க்கும் நிறுவனத்தின் உரிமையாளர் பற்றிக் கன்னாபின்னாவென்று விமரிசிக்க, ஓட்டுநரின் மைத்துனரோ, அந்நிறுவன முதலாளிக்கு மிக வேண்டியவராகப் போக, பயணியின் வேலை பறிபோயேவிட்டது.

இவரிடம் பேசுவது எங்கே முதலாளியின் காதை எட்டப்போகிறது என்கிற அலட்சியம் இப்பயணிக்கு.

உரியவர்களிடமா பேசினேன் என்பது அறியாமையின் வாதம். உரியவர்களிடம் பேசினால்கூடப் பாதிப்புக் குறைவுதான்!

ஒரு பத்திரப் பதிவு முடியும் தறுவாயில் விற்பவரைப் பற்றி வாங்குபவர் மனக்குறை ஒன்றை வெளியிட, அது உரியவர் காதை எட்ட, பதிவே பறிபோய்விட்டது. பதிவு முடிந்தபின் பேசியிருக்கலாமே!

வாய் அசைந்துகொண்டே இருக்கப் பிரியப்படுகிறவர்கள் இனி, பொட்டுக்கடலை தின்னட்டும். உடலுக்காவது நல்லது.

*********

லேனாவின் ஒரு பக்கக் கட்டுரைகள்
http://www.tamilvanan.com/content/2008/11/28/talking-rubbish/
source:

நான்

நான்

****************************

நான் நானே.

நான் உருவமற்றவன்.
பிறப்பு இறப்பு அறியாதவன்.

என்னை -
நிலங்களால் புதைக்க இயலாது.
கடல்களால் விழுங்க இயலாது.
நெருப்புகளால் அண்ட முடியாது.
புயல்களால் அசைக்க முடியாது.
வானங்களால் அடைக்க முடியாது.

என்றும் எங்கும் இருப்பேன்.

நான் நானே.

**************

ஆத்மன்
Thanks:http://aathman.blogspot.com/

இனியவளின் பொன் மொழிகள்

ஒரு பெண்ணின் இதயம்,
முதுமை அடைவதே இல்லை.
அன்பு செலுத்துவதை அது நிறுத்தி விட்டால்,அது
வாழ்க்கையையும் முடித்துக் கொள்கிறது.

---------



--------உன் அருகில் இருப்பவர்கள் எல்லோரும் உன்னை நேசிப்பது இல்லை..
உன்னை நேசிப்பவர்கள் எல்லோரும் உன் அருகில் இருப்பது இல்லை-------


source:http://www.yarl.com/forum3/index.php?showtopic=25692

இயற்கையின் மடியில்" -சுந்தரா

மழையே...மழையே...
*****************************

உரக்க அழுகிறது வானம்
கண்ணின் நீர் துடைக்கக்
கரங்கள் அதற்கு இல்லை பாவம்...

நடுக்கமெடுக்கிறது தேகம்
பற்கள் கிடுகிடுக்க
உடலுக்குள் ஓடும் மின்சாரம்...

மோதி முழக்கமிடும் மேகம்
விழிகள் இமைமூட
மின்னல் ஒளிக்கதிரும் பாயும்...

நீரின் திவலைகளின் வேகம்
நெடுங்குளிர் சுமந்து
நெட்டிக் கதவுதள்ளி ஏறும்...

காலைக் கதிரவனோ பாவம்
செங்கதிர் சுருட்டி
மேகப்பொதிகளுக்குள் தூங்கும்.

********
சுந்தரா எழுதியது:

source:http://www.muthamilmantram.com/
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது