காற்று சொன்ன ஹைக்கூ

1)தாமரைக் குளத்தில்
மல்லிகை வாசனை
அவள் குளித்துச் சென்றிருப்பாள் !
2) என்ன அழகான
பேச்சு மொழி
மெளனம் !
3) பெரிய மாளிகையைக்
காப்பாற்றுகிறது
சிறிய பூட்டு !
4)காகம் கரைந்துண்ணும்
மனிதம்
மறைந்துண்ணும் !
5) மூன்று பக்கமும் கடல்
நான்கு பக்கமும் கடன்
இந்தியா !
நன்றி ; காற்று சொன்ன ஹைக்கூ ( கவிஞர் சுவாதி)




0 comments:

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது