மூன்று இதழ்களும் கொஞ்சம் தூரிகையும்

1) தொலைக் காட்சி இணைப்பை
துண்டித்தது
எலிக்கு நன்றி !

2) அறுசுவை
உணவுடன் படையல்
பசியால் இறந்தவனுக்கு!

3)எங்கே கூடு கட்டுவது
புரியாமல் விழிக்கும்
அடுத்த நூற்றாண்டுப் பறவை.

4)'குழப்பம், -தினப்பலன் கூறியது
எதனால் குழப்பம் நேரும் ?
குழம்பியது மனசு.

5) இல்லை கடிகாரம்
ஆனாலும் தெரிகிறது நேரம்
பசி.

6)யானைக்கும், மனிதனுக்கும்
பிடிக்கிறது மதம்
அழிவின் தொடக்கம்.

7) ஏமாந்து விட்டதோ...
முதுகில் நாமம்
அணில் !

மூன்று இதழ்களும் கொஞ்சம் தூரிகையும்-ஹைகூ
கவிதைகள் தொகுப்பு நாலிலிருந்து

0 comments:

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது