உதிரும் இலை

1) இழந்து விட்டதன் மீதுதான்
ஆசை அதிகரிக்கிறது
எப்போதும்
நேற்று அப்பா
இன்று நீ.

2) அழுது விடுங்கள்
அவமதித்தர்களை
துரோகமிழைத்தவர்களை
ரணப்படுத்தியவர்களை
பிறகு எப்போதும் போல
உங்கள் குழந்தை மனதுடன்
உலா வாருங்கள்.

3) கத்துதல்
முட்டுதல்
உழுதல்
இனப்பெருக்கம் செய்தல்
இப்படி அனைத்தம்சமும் உண்டு
ஆனாலும்
ஏனோ
கறுப்பு மாடுகள்
எளிதில் விலை போவதில்லை.

நன்றி; யாழினி முனுசாமி ( உதிரும் இலை )

0 comments:

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது