சின்ன உளிகள்

1) கூரையைப் பிய்த்துக்
கொட்டியது நிலா
மரத்தடி வீடு.

2) ஐந்து முறை இறந்தாள்
பாட்டி எனது
பள்ளி விடுப்புக்காக.

3) கோபமாய்
இருக்கிறாள் என் மனைவி
உறைக்கும் குழம்பு.

4)பாலை வனத்தில் பரிசோதனை
பக்கத்து நாடுகளில் பதற்றம்
அணுவின்றி !

5) என் தோலை உரித்து விட்டு அவள் அழுது கொண்டிருந்தாள்
வெங்காயம்.

6) வாகனத்தில் இருவர்
வழியில் பூசணி
முடிந்தது எமன் பணி !

7) ஊரில் இவர்தான்
பிரபல சோதிடர்
வாழா வெட்டியாய் மகள் !

8)உடைக் குறைப்பு
ஓ இது
இலையுதிர்காலம் !

9)சேரிக்கு பூணூல் போட்ட
புதுச்சேரிக் கவிஞன்
புரட்சி பாரதி !

10) மரணத்தை தழுவிய மீன்
மறுபடியும் நீந்தியது
கொதிக்கும் குழம்பு.

நன்றி; கவிஞர் கவிமுகில் ( சின்ன உளிகள் )

0 comments:

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது