லீலை

மண்ணில் பிறந்தால் வானேற ஆசை
காலோடிருந்தால் பறப்பதற்காசை
வானாயிருந்தால் பூமிக்கு வேட்கை
கொண்டலாயிருந்தால் மழையாகும் ஆசை

மின்னலாயிருந்தால் எருக்குழிக்காசை
எருக்குழியாயிருந்தால் மலராகும் பித்து
இரும்பாயிருந்தால் காந்தத்திற்கு ஆசை
துரும்பாயிருந்தால் நெறுப்புக்காசை

தனியாயிருந்தால் வீட்டுக்கு ஆசை
வீட்டோடிருந்தால் கைவல்யத்திற்காசை
நானாயிருந்தால் நீயாகும் ஆசை
உனக்கோ !
உலகாளும் ஆசை.

ந.பிச்சமூர்த்தி (கவிதைத் தொகுப்பிலிருந்து)
.

0 comments:

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது