Sculptor

A German once visited a temple under construction where he saw a sculptor
making an idol of God. Suddenly he noticed a similar idol lying near by.Surprised, he asked the sculptor,"Do you need two
statues of the same idol?" "No,"said the sculptor without looking
up,"weneed only one,but the first one got damaged at the last stage." The gentle man examined the sculptor and found no damage.
"Where is the damage?"he asked."There is a scratch on the nose of the
idol." said the sculptor, still busy with his work . "Where are you going to install the idol?".


The sculptor replied that it would be installed on a pillar twenty feet
high. "If the idol is that far, who is going to know that there is a
scratch on the nose? " the gentleman asked.The sculptor stopped his work ,looked up at the gentleman,smiled and said,"I will know it ."


Excellence is not for someone else to notice but for your own satisfaction
and efficiency.


ஜோக்ஸ்

என்னங்க ஏன் அடிக்கடி சமையல் ரூம் பக்கம் போகிறீங்க?
டாக்டர் சுகர் இருக்கான்னு அடிக்கடி செக் பண்ணிக்க சொன்னார் அதான்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------
நீங்க உடனடியா மீன், ஆடு, கோழி சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்.
அதுக சாப்பிடுவதை நான் எப்படி நிறுத்த முடியும் டாக்டர்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------
வக்கீல்: உனக்கு திருமணமாகிவிட்டதா?
சர்தார்: ஆகிவிட்டது.
வக்கீல்: யாரைத் திருமணம் செய்து கொண்டிருக்கிறாய்?
சர்தார்: ஒர் பெண்ணை.
வக்கீல்: பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளாமல் ஆணையா திருமணம் செய்து
கொள்வார்கள்?
சர்தார்: ஆம் என் தங்கை செய்து கொண்டிருக்கிறாளே!!!..
-------------------------------------------------------------------------------------------------------------------------------

சார், டீ மாஸ்டர்
டீ போடறாரு,
பரோட்டா மாஸ்டர்
பரோட்டா போடறாரு,
மேக்ஸ் மாஸ்டர்
மேக்ஸ் போடறாரு,
நீங்க ஹெட்மாஸ்டர் தானே
ஏன் மண்டய போட மாட்டேங்கிறீங்க?...

---------------------------------------------------------------------------------------------------------------------------

என்னதான் கிளி கீ..கீ.. என்று கத்தினாலும்,
அதால ஒரு லாக்கை கூட ஒப்பன் பண்ண முடியாது.

-------------------------------------------------------------------------------------------------------------------------------
டாக்டர் இந்த பக்கெட் ஓட்டை ஆயிடுச்சு.. என்ன பண்ணலாம்.
யோவ். எங்கிட்ட வந்து ஏன் இதை கேட்கிறாய்?
பிளாஸ்டிக் சர்ஜரில நீங்கதான் பேமஸ்ன்னு சொன்னாங்க..
-----------------------------------------------------------------



''நம்ம பையன் எங்க பணம் வைத்தாலும் எடுத்திட்டு போயிடறாங்க''
''அவனுடைய காலேஜ் புத்தகத்தில் வை.... பத்திரமா இருக்கும்''
------------------------------------------------------------------------------------------------------------------------------


ஒரு காப்பி எவ்வளவு சார் ?
5 ரூபாய்.
எதிர்த்த கடையில 50 காசுன்னு எழுதியிருக்கே ?
டேய். சாவுகிராக்கி அது XEROX காப்பிடா
-----------------------------------------------------------------




உங்க கிட்னி பெயில் ஆகிடுச்சு.
நான் என் கிட்னிய படிக்க வைக்கவே இல்லயே டாக்டர் அது எப்படி பெயில் ஆகும்.
-------------------------------------------------------------


என்னதான் நீங்க புத்திசாலியாக இருந்தாலும் பல்லு விளக்கும் போது இளிச்சவாய தான்.

--------------------------------------------------------------



செல்போனுக்கும் மனிதனுக்கும் என்ன வித்தியாசம்?
மனிதனுக்கு கால் இல்லன்னா பேலன்ஸ் பண்ண முடியாது.
செல்போனில் பேலன்ஸ் இல்லன்னா கால் பண்ண முடியாது.


--------------------------------------------------------------------------------------

கிச்சன் மருந்து

படத்தின்மீது கிளிக் செய்து பெரிதாக்கிப் பார்க்கவும்.
நன்றி; குங்குமம்

நானும் வர்றேன்!

மரப் பொந்தில் எலி ஒன்று வசித்து வந்தது. அந்த எலியானது தினமும் இரவு நேரத்தில் இரைத் தேடச் செல்லும். இரவெல்லாம் கிராமத்தில் இருக்கும் ஒவ்வொரு வீடாகச் சென்று கிடைக்கும் இரையை உண்டு விட்டு பின்னர் மறுநாள் அதிகாலை நேரத்தில் தன்னுடைய இருப்பிடத்தை வந்தடைந்துவிடும்.


ஒரு நாள் அதிகாலை நேரத்தில் அந்தப் பக்கமாக நரி ஒன்று வந்தது. அது மரப் பொந்தின் உள்ளே செல்கின்ற எலியைப் பார்த்துவிட்டது.


"எலியே! எலியே!'' என்று பொந்தில் வெளியே நின்றபடி அழைத்த

"நரியே! நரியே! என்னை எதற்காக அழைத்தாய்?'' என்று கேட்டது எலி.


"எலியே! உன்னைப் பார்க்கையில் நீ இரவெல்லாம் கிராமத்து பக்கம் சென்று இரைத்தேடி விட்டு அதிகாலை நேரத்தில் உனது இருப்பிடத்திற்கு வருவாய் என்று தோன்றுகிறது. இனிமேல் நீ கிராமத்துப் பக்கம் செல்லும் நேரம் என்னையும் உன்னோடு அழைத்துச் செல். நீ கிராமத்து வீடுகளில் உள்ளே சென்று இரைத் தேடிக் கொள். நான் வெளியே இருக்கின்ற இரையைத் தேடிக் கொள்கிறேன்,'' என்றது நரி.


"நரியே! உனக்கும், எனக்கும் எந்தப் பொறுத்தமும் இல்லை. நானோ சிறு விலங்கு. சந்து, பொந்து எதுவாக இருந்தாலும் அதில் நுழைந்து சென்று விடுவேன். எனக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் ஏதாவது சிறிய இடத்தினுள் புகுந்து உயிர் பிழைத்துக் கொள்வேன். ஆனால், நீ அப்படியில்லை. நீ கிராமத்து மனிதர்கள் யார் வசமாவது சிக்கிக் கொண்டால் அவர்கள் உன்னை நையப் புடைத்து விடுவர். அதனால் உனக்கு எந்த நேரத்திலும் ஆபத்து வரலாம். அதனால் நீ என்னோடு வரலாம் என்கிற எண்ணத்தை மாற்றிக் கொள்,'' என்றது எலி.


"எலியே! நீ தயவு செய்து எனது விருப்பத்தை ஏற்றுக் கொள்! எனக்கு கிராமத்தில் சென்று இரைத் தேடவேண்டுமென்று ஆசையாக இருக்கிறது. கிராமங்களில் வசிக்கும் ஆடுகளையும், கோழிகளையும் அடித்து சாப்பிட வேண்டுமென்று மிகவும் ஆசைப்படுகிறேன். எனவே, என்னுடைய விருப்பத்தை நிறைவேற்ற நீ எனக்கொரு சந்தர்ப்பத்தைக் கொடுத்தால் அதனை நான் என்றுமே மறக்கமாட்டேன்,'' என்றது நரி.


"சரி நரியே! நீ என்னோடு வரவேண்டுமென பிடிவாதமாக இருக்கிறாய்! உன்னுடைய பிடிவாதத்தை நானும் ஏற்றுக் கொள்கிறேன். எனவே, இன்று இரவு நீ இங்கே வந்துவிடு. நான் முன்னே செல்ல நீ என்னைப் பின் தொடர்ந்து வா!'' என்றது எலி.


"ஆஹா! எலியே! இதைக் கேட்கிற போது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது. எனவே, நான் இரவு கண்டிப்பாக வந்துவிடுவேன். நீ என்னை மறக்காமல் மறுக்காமல் உன்னோடு அழைத்துச் செல்,'' என்றது நரி. அன்றைய இரவு சரியான நேரத்தில் நரி வந்தது. எலியும் வெளியே புறப்படுவதற்கு தயாராக இருந்தது.


"நரியே! நீ தெரிவித்தபடியே சரியான நேரத்திற்கு வந்துவிட்டாய். இப்போதே நாம் இருவரும் புறப்படலாம்,'' என்றது எலி.
எலி ஓர் கிராமத்தை வந்தடைந்தது. ""நரியே நான் வீட்டின் உள்ளே புகுந்து எனக்கு கிடைக்கும் இரையை சாப்பிடுகிறேன். நீ வீட்டின் வெளியே என்னென்ன இரை கிடைக்கின்றதோ அதனையெல்லாம் சாப்பிடு,'' என்று கூறியபடி வீட்டின் உள்ளேப் புகுந்து கொண்டது எலி.


நரியோ மகிழ்ச்சியோடு வீட்டுக் காம்பவுண்டின் உள்ளே சென்றது. அங்கே ஒரு கோழிக் கூண்டு காணப்பட்டது. நரி அந்தக் கோழிக் கூண்டின் உள்ளே புகுந்து கோழிகளைப் பிடித்தது. அதனைக் கண்டதும் கோழிகள் எல்லாம் கொக்... கொக்... என்று கூக்குரல் எழுப்பின. அந்த நேரம் வீட்டுக் காவலுக்குப் படுத்திருந்த நாயானது கண் விழித்துக் கொண்டது. உடனே அது சப்தமாக லொள்... லொள்... லொள்... என்று குரைக்கத் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து எல்லா நாய்களுமே லொள்... லொள்... என்று குரைக்கத் தொடங்கின.


நாய்களின் குரைப்பு சப்தம் கேட்டதும் கிராமத்தினர் அனைவரும் விழித்துக் கொண்டனர். கிராமத்திற்குள் திருடன் யாராவது நுழைந்திருக்க வேண்டும். அதனால்தான் நாய்கள் எல்லாம் ஒன்று சேர்ந்தார் போல் குரைக்கின்றன என்று நினைத்தனர். உடனே அவர்கள் கையில் தடியுடன் வீட்டை விட்டு வெளியேறினர்.


திபுதிபுவென்று மக்கள் எல்லாரும் வீட்டை விட்டு வெளியே வருவதைக் கண்டதும் நரி திடுக்கிட்டது. அதனால் அந்த இடத்தில் நிற்க முடியவில்லை. "இவர்களிடம் நாம் மாட்டிக் கொண்டால் நம்மை அடித்தே கொன்று விடுவர்' என்று மனதுள் எண்ணிய நரியானது தாமதிக்காமல் கூட்டத்தின் உள்ளே புகுந்தபடி ஓட்டமெடுத்தது.


கிராம மக்கள் நரியைக் கண்டு திடுக்கிட்டனர். "இந்த நரியைப் பார்த்து தான் நாய்கள் எல்லாம் குரைத்திருக்க வேண்டும். கிராமத்திற்குள் நுழைந்து திருட வந்த இந்த நரியினை நாம் சும்மா விடக்கூடாது' என்று முடிவு செய்தனர்.
மின்னல் வேகத்தில் தங்கள் கைகளில் தடியினை ஏந்தி நரியைத் துரத்தினர். ஓடியபடியே பின்னால் திரும்பிப் பார்த்த நரியோ மேலும் திடுக்கிட்டது.


"தம்' பிடித்துக் கொண்டு இன்னும் வேகமாக ஓட முயற்சித்தது. மின்னல் வேகத்தில் அந்த கிராமத்தை விட்டு ஓடி மறைந்தது நரி.
எலியோ எதைப் பற்றியும் கவலைப்படாமல் தனக்கு கிடைத்த இரையை எல்லாம் சாப்பிட்டு முடித்துவிட்டு அதிகாலை நேரத்தில் தன் பொந்தை வந்தடைந்தது.


அங்கே எலியின் வருகைக்காக நரி காத்துக் கொண்டிருந்தது. ""எலியே! நீ சொன்னது உண்மைதான். நான் ஆபத்தை சந்தித்து விட்டேன். நான் உயிர் பிழைத்ததைப் பெரிதாக நினைக்கிறேன். இனிமேல் ஒருபோதும் இப்படி முட்டாள்தனமான செயல்களில் ஈடுபடமாட்டேன்,'' என்றது நரி.


"நரியே! நான் கிராமத்திற்குச் சென்று இரைத்தேடி உண்பதுபோல் நீயும் உண்ண வேண்டுமென்று ஆசைப் பட்டாய்! அதன் விளைவை நீயே உணர்ந்து கொண்டாய்! எப்போதுமே பிறர் வாழ்க்கையைப் பார்த்து ஆசைப்பட்டால் இந்த மாதிரி துன்பங்களைத் தான் நாம் அனுபவிக்க வேண்டும்,'' என்றது எலி.


நரியும் எலியின் கருத்தினை ஏற்றுக் கொண்டது.


நீதி: குட்டீஸ்... அவங்க அவ்ளோ வசதியா இருக்காங்க. இவங்க இவ்ளோ வசதியா இருக்காங்க என்று சொல்லி மற்றவர் வாழ்க்கையை பார்த்து ஆசைப்படாதீர்கள். உங்களுக்கு கிடைத்ததைக் கொண்டு திருப்தியடையுங்கள் !.

http://www.dinamalar.com/siruvarmalar/smrmay_1605/sirukathai.asp






மிருகங்களிடமிருந்து பயில வேண்டிய பாடம்

மிருகங்களிடம் குணம் உண்டு. ஒன்று எதிர்த்துத் தாக்கும் அல்லது ஓடிவிடும். இரண்டுக்கும் இடைப்பட்ட நிலையில் இருந்து கொண்டு அஞ்சி விழிக்காது. தாக்குதலில் இறங்குவது என்று முடிவு செய்துவிட்டால் தன் உயிர் போகும் வரையில் தன் துணிவைக் கைவிடாது.

உதாரணமாகப் பூனையை எடுத்துக் கொள்வோம்.

பூனை, திறந்த வெளியில் நம்மைக் கண்டால் ஓடிவிடும். சாதாரணச் சைகையாலேயே அதை ஓட்டிவிடலாம். இதை வைத்துப் பலர் பூனையைப் பற்றித் தவறான எண்ணம் கொண்டிருக்கிறார்கள். அதாவது பூனை ஒரு சாதுவான பிராணி என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அது உண்மையல்ல.

தோற்றத்தால் அது எளிமை வாய்ந்த பிராணியாக இருக்கலாம்.

ஆனால், அதன் மனம் மிக உறுதி வாய்ந்தது.

‘பார்த்தால் பூனை பாய்ந்தால் புலி’ என்ற பழமொழியைப் பலர் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள்.

போலித்தனமான குணங்களைத் தன்னகத்தே அடக்கிக்கொண்டு லஞ்சம் தீர்க்கும் மனிதர்களை இந்தப் பழமொழியால் குறிப்பிடுவதுண்டு.

ஆனால், இந்தப் பழமொழி முக்கியமாகப் பூனையின் இயல்பையும் குறிக்கின்றது என்று அறியமாட்டார்கள்.

பூனை, பார்ப்பதற்குத்தான் பூனை. ஆனால், அது பாயத் தொடங்கிவிட்டால் செயலில் புலியைப்போல் இயங்கும்.

அதாவது, ஒரு பூனையைத் தனி அறையில் அடைத்துவிட்டு, ஒரு மனிதன் அந்த அறையில் தடி ஒன்றுடன் நுழைந்துவிட்டான் என்றால், அப்போதுதான் அவனால் பூனையின் இயல்பை உணர முடியும்.

பூனை அந்த அறையினுள் கொடிய விலங்காகிவிடும். அடிபட்டுச் செத்துப் போவது உறுதி என்றாலும் நமக்கிருக்கும் ஒரே வழி துணிந்து இந்த மனிதனுடன் போராடுவதுதான் என்ற முடிவுக்கு அது வந்துவிடும்.

மனிதன் வெல்வானா பூனை வெல்லுமா என்பதல்ல பிரச்னை. ஆனால், இந்தப் பூனையின் இயல்பிலே மனிதன் அறிந்துகொள்ள வேண்டிய ஒர் உண்மை இருக்கிறது. எந்தச் செயலிலும் வேறு வழியே இல்லையென்றால் துணிந்துவிட வேண்டியதுதான். துணிவு ஒன்றுதான் நம்மைக் காப்பாற்றும். ஆனால் அந்தத் துணிவு முன்னர் குறிப்பிட்டதுபோல் அறிவு

நன்றி; http://www.tamilvanan.com/

ஸ்ரேயா- கட்டுடல் ரகஸியம் !


ஸ்ரேயாவின் இளமையான உடற்கட்டு ரகசியம் என்ன தெரியுமா? சூட்டிங்கிற்கு கிளம்புவதற்கு ன் தியானம், யோகா என ஒரு மணி நேரம் உடலையும், உள்ளத்தையும் அதிகாலை நேரத்திலேயே வறுத்தி எடுப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார் ஸ்ரேயா. இதுதான் தனது இளமை மற்றும் உடற்கட்டு ரகசியம் என்று கூறவும் தயங்குவதில்லை அம்மணி.
நன்றி; தினமலர்

மகிழ்ச்சியில் தமன்னா !

சூர்யா ஜோடியாக அயன் மற்றும்

ஆனந்த தாண்டவனம் என இரு படங்கள்

ரிலீசான மகிழ்ச்சியில் இருக்கிறார் தமன்னா.

சிரிப்பின் பயன்கள்


ஒரு மனிதன் சிரிக்கும்போது அவனுடைய உடலில் பல இரசாயன மாற்றங்கள் ஏற்படுகின்றன.

· உடலின் இரத்த ஓட்டம் சீராகும். இதனால் இருதயத் துடிப்பு சீராகும். இரத்த அழுத்த நோய்கள் உள்ளவர்களுக்கு சிரிப்பு ஒரு சிறந்த மருந்து.

· சிரிக்கும்போது நாம் சுவாசிக்கும் காற்றில் உள்ள பிராண வாய்வு நன்கு உட்சென்று உடலுக்கு புத்துணர்வைத் தரும்.

· சிரிப்பதால் மன அழுத்தம், மன இறுக்கம், மன உளைச்சல் குறையும்.

· ஜீரண உறுப்புகள் சீராக செயல்பட்டு மலச்சிக்கல் தீரும்.

· சிந்தனை, செயல் அதிகரிக்க சிரிப்பே சிறந்தது.

ரத்த அழுத்தத்துக்கு மொச்சை கொட்டை சிறந்த மருந்து!

உயர் ரத்த அழுத்தம் வந்து விட்டதே என்று கவலைப்படாதீர்கள். தினமும் ஒரு சில மொச்சைக் கொட்டைகளை சாப்பிட்டால் போதும். ரத்த அழுத்தம் இருந்த இடம் தெரியாமல் போய் விடும். அமெரிக்காவில் பாஸ்டன் நகரில் உள்ள இஸ்ரேல் டியோகோன்ஸ் மருத்துவ மையத்தில் நடந்த ஆய்வில் இது தெரிய வந்துள்ளது.


நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு உயர் ரத்த அழுத்த பிரச்னை அதிகமாக உள்ளது. குறிப்பாக, மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு ரத்த அழுத்தம் அதிகமாகிறது. சிலருக்கு, "ஹைப்பர் டென்ஷன்' எனப்படும் உயர் ரத்த அழுத்தம் உள்ளது. இது மிக ஆபத்தானது.

இப்படிப்பட்டவர்களில் 48 பேரை தேர்வு செய்து, அவர் களின் உணவு பழக்க வழக் கங்கள் மாற்றப்பட்டன. தினமும் அவர்களுக்கு மொச்சைக் கொட்டை வழங்கப் பட்டது. ஆச்சர்யப்படத்தக்க வகையில் அவர்களில் 40 பேருக்கு ரத்த அழுத்தம் சகஜ நிலைக்கு வந்தது. வேர்க்கடலை, சிப்ஸ் போன்று சிறிய பாக்கெட்களில் மொச்சை கொட்டையும் விற்கப் படுகிறது. தினமும் அரை கப் மொச்சை கொட்டையை சாப் பிட்டு வந்தால் போதும். உயர் ரத்த அழுத்தம் குறைந்து விடும் என்று இந்த மருத்துவ மைய டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

-----------------

நன்றி; தினமலர்

நோய் தீர்க்கும் பூண்டு !

மருத்துவ குணமுடைய பூண்டு
நம்மில் பலர் பூண்டு என்றால் உணவில் இருந்து எடுத்து ஓரங்கட்டி வைத்து விடுகிறோம். மருத்துவ குணங்கள் கொண்ட பூண்டு சாப்பிடுவது உடலுக்கு நல்லது.

இயற்கை நமக்கு கொடுத்துள்ள பல்வேறு மருத்துவப் பயன்கள் கொண்ட தாவரங்களில் பூண்டு மிகவும் குறிப்பிடத்தக்கது. பூண்டு சாப்பிட்டால் நாற்றம் வீசும் என்பதற்காக சிலர் அதை ஒதுக்கித் தள்ளுகின்றனர். இது முற்றிலும் தவறானது.

பூண்டின் மருத்துவ சக்தி அபரீதமானது. சளி, ஜலதோஷம், இருமல், தலை பாரம் போன்றவற்றுக்கு சிறந்த மருந்தாக அது திகழ்கிறது. நாக்கில் சுவையின்மை, பசி எடுக்காமை, வயிற்று உப்புசம், மலச் சிக்கல் போன்றவற்றுக்கும் இது சிறந்த நிவாரணி ஆகும்.

பூண்டு தினசரி சாப்பிடுவது இதயத்திற்கு நல்லது என்று ஆயுர்வேத மருத்துவத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. உடைந்த எலும்புகளைக் கூடச் சரி செய்யும் சக்தியும் அதற்கு உள்ளதாம்.

வெண் குஷ்டம், குடல் வாயு, சர்க்கரை வியாதி, மூலம், வாத நோய்களுக்கு பூண்டு சரியான மருந்தாகும்.

பூண்டின் மகத்துவத்துவம் அறிந்து அதை தினசரி உட்கொள்வது உடல் நலத்துக்கு மிகவும் பயனுள்ளதாகும்.
(மூலம் - வெப்துனியா)

அம்மா என்பது தமிழ் வார்த்தை



அம்மா என்பது தமிழ் வார்த்தை
அதுதான் குழந்தையின் முதல் வார்த்தை
அம்மா இல்லாத குழந்தைகட்கும்
ஆண்டவன் வழங்கும் அருள் வார்த்தை
அம்மா என்பது தமிழ் வார்த்தை
அதுதான் குழந்தையின் முதல் வார்த்தை

கவலையில் வருவதும் அம்மா அம்மா
கருணையில் வருவதும் அம்மா அம்மா
தவறு செய்தாலும் மன்னிப்புக்காக
தருமத்தை அழைப்பதும் அம்மா அம்மா
அம்மா என்பது தமிழ் வார்த்தை
அதுதான் குழந்தையின் தமிழ் வார்த்தை

பூமியின் பெயரும் அம்மா அம்மா
புண்ணிய நதியும் அம்மா அம்மா
தாரணி அழைப்பதும் அம்மா அம்மா
அம்மா என்பது தமிழ் வார்த்தை
அதுதான் குழந்தையின் முதல் வார்த்தை
அம்மா இல்லாத குழந்தைகட்கும்
ஆண்டவன் வழங்கும் அருள் வார்த்தை
அம்மா என்பது தமிழ் வார்த்தை
அதுதான் குழந்தையின் முதல் வார்த்தை
---------------------------------------------------------

> கவியரசு கண்ணதாசன்
http://www.tamilnation.org/literature/kannadasan/ammaenbathuthamizh.htm

இலை - வைரமுத்து கவிதை

நிறைந்த வாழ்வு என் வாழ்வு

நான் குளித்த மிச்சத்தில்
பூமி குளித்தது

சூரியக்கீற்று
என்னைத் தொட்ட பிறகுதான்
மண்ணைத் தொட்டது

பகலில் நான் விட்ட மூச்சில்
பாழ்பட்ட காற்று
பத்தினியானது

இந்த மரத்தில் நான்
எடுத்தது பகுதி
கொடுத்தது மிகுதி

என் வாழ்விலும்
சாயம் போகாத சம்பவங்கள்
இரண்டுண்டு

அடையாளம் தெரியாத புயலொன்று
தளிர்களையும் தலைவாங்கிப் போனதே
அந்த ராட்சச ராத்திரியும் -
பூவில் வண்டு
கலந்த காட்சி கண்டு
பக்கத்து இலை கொண்டு
முகம் மூடிக்கொண்டேனே
அந்த மன்மதப் பகலும்.

ஒருநாள்
ஒண்டவந்த ஒரு பறவை
கிண்டியது என்னை

"மலராய் ஜனிக்காமல்
கனியாய்ப் பிறக்காமல்
இவ்வடிவு கொண்டதெண்ணி
என்றேனும் அழுதாயோ
ஏழை இலையே!"

காற்றின் துணையோடு
கலகலவென்று சிரித்தேன்

"நல்லவேளை
நான் மலரில்லை

தேனீக்கள் என்கற்பைத்
திருடுகின்ற தொல்லையில்லை

நல்ல வேளை
நான் கனியில்லை

கிளிக்கூட்டம் என் தேகம்
கிழிக்கின்ற துன்பமில்லை

இயல்பே இன்பம்
ஏக்கம் நரகம்"

அதோ அதோ
வாயு வடிவில்
வருகுதென் மரணம்

இதோ இதோ
பூமியை நோக்கி
விழுகுதென் சடலம்

வழிவிடு வழிவிடு
வண்ணத்துப் பூச்சியே

விலகிடு விலகிடு
விட்டில் கூட்டமே

நன்றி மரணமே
நன்றி

வாழ்வுதராத வரமொன்றை
வழங்க வந்தாய் எனக்கு

பிறந்த நாள் முதல்
பிரிந்திருந்த தாய்மண்ணை
முதன்முதல் முதன்முதல்
முத்தமிடப் போகிறேன்

வந்துவிட்டேன் தாயே
வந்துவிட்டேன்

தழுவிக்கொள் என்னைத்
தழுவிக்கொள்

ஆகா
சுகம்
அத்வைதம்

வருந்தாதே விருட்சமே

இது முடிவில்லை
இன்னொரு தொடக்கம்

வாழ்வு ஒரு சக்கரம்
மரணம் அதன் ஆரம்
சக்கரம் சுற்றும்

கிளைக்கு மறுபடியும்
வேறு வடிவில் உன்
வேர்வழி வருவேன்

எங்கே
எனக்காக ஒருமுறை
எல்லா இலைகளையும்
கைதட்டச் சொல்
--------------------------------
நன்றி;
http://cartoonworld.mywebdunia.com/2009/04/01/1238598180000.html

அறிவுப் புதிர்கள் (1-10)

1)அரைச்சாண் ராணி,அவளுக்குள்ளே,ஆயிரம் முத்துக்கள்--அது என்ன ?

2)இத்தணூன்டு சிட்டுக்குருவிக்கு,ஆழு முழம் சித்தாடை.-அது என்ன?

3)எட்டுக்கால் ஏகாம்பரம்,வலை பின்னுவதில் கெட்டிக்காரன்.-அவன் யார்?

4)எண்ணைய் வேண்டா விளக்கு,எரியும் போதே உருகும்-விளக்கு,-அது என்ன?

5)ஓடியாடி உழைத்தும், மூலைதான் இவன் இருப்பிடம்,-அது என்ன?

6)பூக்காமல் பூத்திருப்பாள்,தெரியாமல் மறைந்திருப்பாள்-அவள் யார் ?

7)மரத்துக்கு மரம் தாவியோடும்,முத்தம்மா மகனுக்கு முதுகிலே மூன்றுகோடு, -அது என்ன ?

8)விரித்தால் நாம் தூங்கலாம், சுருட்டினால் அது தூங்கும்-அது என்ன ?

9)ஒரு மழை பெய்தாலே பல குடை வந்துவிடும்.-அது என்ன ?

10)குண்டுச் சட்டியில் கெண்டை மீன், -அது என்ன ?

--------------------------------------------------------------
விடைகள்;1.வெண்டைகாய்

2..வெங்காயம்

3.எட்டுகால் பூச்சி/ சிலந்தி

4.மெழுகுவர்த்தி

5.துடைப்பம்

6.அத்திப்பூ

7.அணில்

8.பாய்

9.காளான்

10.கண்

-----------------------------------
நன்றி; (தொகுத்தவர் ; சி.இலிங்கசாமி)

பக்தி.....

தினமும் கோவிலுக்கு
தரிசிக்க அல்ல
பிச்சைக்காரன்......

------

பாவம்
காத்திருந்த காக்கை
வீட்டில் விரதம்.........

மழைக்கூ கவிதைகள்

மழைத்துளிகள்
மண்ணை அடையவில்லை
ரங்கநாதன் தெரு !!! ..

----

வான் பெய்தும்
வான் பார்க்கிறோம்
உணவுப் பொட்டலத்திற்காக !!! ...

----
Posted by சாமி

மழையும் மழலையும் ஒன்று !

பெய்யெனில் பெய்யாது
நில்லெனில் நில்லாது
தவழ்ந்தபடி பொழிதலால்
தனிமொழி பேசுதலால்

சிரித்தபடியிருந்து
அடுத்தபடி அழுதலால்
எதையும் யாரையும்
பகுத்துப் பாராமல்

முத்தமிடுதலால்
உடை நனைத்தலால்
மழலையும் மழையும் ஒன்று.

- உதயா.
Thanks: http://udhaya.rediffblogs.com/

அமுதும் தேனும் எதற்கு

அமுதும் தேனும் எதற்கு - நீ
அருகினில் இருக்கையிலே - எனக்கு (அமுதும்)

அருவி தரும் குளிர்நீர் அன்பே இனிமேல்
அதுவும் சுடுநீராகும் நமக்கு (அமுதும்)

நிலவின் நிழலோ உன் வதனம் - புது
நிலைக்கண்ணாடியோ மின்னும் கன்னம்
மலையில் பிறவா மாமணியே - நான்
கொய்யும் கொய்யாக் கனியே - வான் (அமுதும்)

விழியாலே காதல் கதைபேசு - மலர்க்
கையாலே சந்தனம் பூசு - தமிழ்
மொழி போல சுவையூட்டும் செந்தேனே
உடல் நான், உயிர் நீ தானே - வான் (அமுதும்)

பாட்டி வடை சுட்ட கதை

ஒரு ஊரில் பாட்டி ஒருத்தி வடை சுட்டு விற்று வந்தாள். ஒரு நாள் அவ்வழியாக பறந்து வந்த காக்கா ஒன்று ஒரு வடையை தூக்கிக்கொண்டு பறந்து போய் மரக்கிளை ஒன்றில் உட்கார்ந்து கொண்டது. அந்த வழியாக வந்த நரி, வடையோடு காக்காவை பார்த்துவிட்டது; வடையைத் தான் எடுத்துக்கொள்ள ஒரு தந்திரம் செய்தது.

காக்காவைப் பார்த்து காக்கா, நீ மிகவும் அழகாக இருக்கிறாய். உனக்கு குரலும் கூட அழகாக இருக்கக்கூடும், ஒரு பாட்டுப் பாடு என்றது. காக்கா தன் வாயைத் திறந்து "கா.. கா..." என்று பாட்டுப் பாடவே வாயிலிருந்த வடை கீழே விழுந்துவிட்டது. நரி வடையை கவ்வி எடுத்துக்கொண்டு போனது
**********************************************
கதையின் மாறுபட்ட வடிவங்கள்

இக்கதையின் முடிவு பின்னாட்களில் வெவ்வேறு விதமாக மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. காக்கா தன் கால்களின் இடுக்கில் வடையை வைத்துக் கொண்டு பாடிக்காட்டி நரியை ஏமாற்றியதாக கதை முடியும் இதில் பிரபலமான வடிவமாகும். இவ்வாறான இன்னுமொரு வடிவம் பின்வருமாறு அமைகின்றது:

“ வடையைக் காலில் வைத்தபடி பாட்டுப் பாடியது ...காகம் ஏமாறவில்லை.!

நரி கேட்டது...அழகாகப் பாட்டுப்பாடினாய் இனி ஒரு நடனம் ஆடு என்று..காகம் மீண்டும் வடையை வாயில் வைத்துக் கொண்டு நடனம் ஆடியது. நரி மீண்டும் ஏமாந்தது.

நரி யோசித்துவிட்டு....பாட்டும் பாடினாய்..ஆடியும் காட்டினாய், அற்புதம்...இனி ஆடலுடன் பாடலும் பாடி...ஒரு நாடகம் நடி பார்க்கலாம் என்று கேட்டது.

காகம் மீண்டும் வடையைக் காலில் வைத்துக் கொண்டு,,நான் பாடினேன் ஆடினேன்...நாடகம் நடிப்பதற்கு சக்தி வேண்டும் இந்த வடையை சாப்பிட்ட பின்னர் நடித்துக் காட்டுகிறேன் நண்பனே என்றது. நரி மீண்டும் ஏமாறியது.


source http://ta.wikipedia.org/wiki/

ATTITUDE

ATTITUDE is every thing!

Be care ful of your thoughts, for your thoughts become your words.

Be careful of your words, for your words become your actions.

Be careful of your actions for your actions become your habits.

Be careful of your habits, for your habits become your character

Be careful of your character, for your character becomes your destiny.

ஜோக்ஸ்

நண்பன்1: உங்க மனைவிக்கும் உங்க அம்மாவுக்கும் சண்டை
வந்தா நீங்க யார் பக்கம் நிப்பீங்க ?

நண்பன்2: எங்க வீட்டு பீரோக்கு பின்னாடி நிப்பேன்

********************************************************


நிருபர்: நீங்க சோப் போட்டு குளிப்பீங்களா? அல்லது ஷாம்பூ
போட்டு குளிப்பீங்களா ?

நடிகை: நான் கதவை தாப்பா போட்டுக் குளிப்பேன்

Jokes !

* Wife: Why are you home so early?
Husband: My boss told me to go to Hell.
*"Honey, when we get married, I'll be there to share all your troubles and sorrows.";
"But I don't have any, my love." "I said, when we get married"

* American: In our country, marriage even takes place with e-mails.
Santa: In India, it is only with females.

* When I was young I used to pray for a bike, then I realized that God doesn't work that way, so I stole a bike and prayed for forgiveness.

* On the first day of marriage, the husband is treated like god... after that the letters reversed ( dog )

* The 3 fastest means of communication: Telephone, Television, Tell-a-woman.

* A man, upon his engagement, went to his father and said, "I've found a woman just like mother!"
His father replied, "So what do you want from me, sympathy?"

20 Old Age Benefits

1. Kidnappers are not very interested in you.

2. In a hostage situation you are likely to be released first.

3. No one expects you to run into a burning building.

4. People call at 9 p.m. and ask, "Did I wake you?"

5. People no longer view you as a hypochondriac.

6. There's nothing left to learn the hard way.

7. Things you buy now won't wear out.

8. You can eat dinner at 4 p.m.

9. You can live without sex (but not without glasses).

10. You enjoy hearing about other people's operations.

11. You get into a heated argument about pension plans.

12. You have a party and the neighbours don't even realize it.

13. You no longer think of speed limits as a challenge.

14. You quit trying to hold your stomach in, no matter who walks into the room.

15. You sing along with the elevator music.

16. Your eyes won't get much worse.

17. Your investment in health insurance is finally beginning to pay off.

18. Your joints are more accurate meteorologists than the National Weather Service.

19. Your secrets are safe with your friends because they can't remember them either.

20. Your supply of brain cells is finally down to a manageable size.

source: internet

முருகன் பாடல்

இப்பாடலைப் பாடியவர் : திரு சீர்காழி கோவிந்தராஜன்.

நீயல்லால் தெய்வமில்லை
எனது நெஞ்சே நீவாழும் எல்லை
முருகா (நீயல்லால்)

தாயாகி அன்புப் பாலூட்டி வளர்த்தாய்
தந்தையாய் நின்றே சிந்தை கவர்ந்தாய்
குருவாகி எனக்கு நல்லிசை தந்தாய்
திருவே நீயென்றும் என் உள்ளம் நிறைந்தாய்
நாயேனை நாளும் நல்லவனாக்க
ஒயாமல் ஒளியானே உன்னருள் தந்தாய்
(நீயல்லால்)

நன்றி;http://pithatralgal.blogspot.com

வாயாரப் பாடி மனமார நினைந்து
வணங்கிடலே எந்தன் வாழ்னாளின் இன்பம்
தூயா முருகா மாயோன் மருகா
உன்னைத் தொழுதிடலே
இங்கு யான் பெற்ற இன்பம்
(நீயல்லால்)

முருகன் பாடல்கள்

டி.எம்.சௌந்தர்ராஜன் அவர்கள் பாடிய பாடல்கள்

பாடல் 1
--------
கந்தன் திருநீரணிந்தால்
கண்டபிணி ஓடிவிடும்
குந்தகங்கள் மாறி இன்பம்
குடும்பத்தை நாடி வரும்
(கந்தன்)
சுந்தரவேல் அபிஷேக
சுத்தத் திருநீரணிந்தால்
வந்தமர்ந்த மூத்தவளும்
வழிபார்த்துப் போய்விடுவாள்

அந்த நேரம் பார்த்திருந்து
அன்னைசெல்வம் ஓடிவந்து
சிந்தையைக் குளிரவைத்து
சொந்தம் கொண்டாடிடுவாள்
(கந்தன்)
மணம் மிகுந்த சாம்பலிலே
மகிமை இருக்குதடா
மனமுடன் அணிவோர்க்கு
மகிழ்ச்சியைப் பெருக்குதடா

தினம்தினம் நெற்றியிலே
திருநீரு அணிந்திடடா
தீர்ந்திடும் துன்பம் எல்லாம்
தெய்வம் துணை தாருமடா
(கந்தன்)
*******************************************


பாடல் 2
--------
உள்ளம் உருகுதய்யா முருகா
உன்னடி காண்கையிலே
அள்ளி அணைதிடவே
எனக்குள் ஆசை பெருகுதய்யா முருகா
(உள்ளம்)

பாடிப் பரவசமாய் உனையே
பார்த்திடத் தோணுதய்யா
ஆடும் மயிலேறி முருகா
ஓடி வருவாயப்பா
(உள்ளம்)
பாசம் அகன்றதய்யா
என் நெஞ்சில் நேசம் வளர்ந்ததய்யா
ஈசன் திருமகனே
எந்தன் ஈனம் மறைந்ததய்யா
(உள்ளம்)
ஆறு திருமுகமும்
உன்னருளை வாரி வழங்குதய்யா
வீரமிகு தோளும்
கடம்பும் வெற்றி முழக்குதப்பா
(உள்ளம்)
கண்கண்ட தெய்வமய்யா
நீயிந்தக் கலியுக வரதனய்யா
பாவியென்றிகழாமல்
எனக்குன் பதமலர் தருவாயப்பா
(உள்ளம்)
*********************************************


பாடல் 3
--------

கற்பனை என்றாலும்
கற்சிலை என்றாலும்
கந்தனே உனை மறவேன் - நீ
(கற்பனை)

அற்புதமாகிய அருட்பெரும் சுடரே
அருமறை தேடிடும் கருணையக் கடலே - நீ
(கற்பனை)

நிற்பதும் நடப்பதும் நின் செயலாலே
நினைப்பதும் நிகழ்வதும் நின் செயலாலே
கற்பதெல்லாம் உந்தன் கனிமொழியாலே
காண்பதெல்லாம் உந்தன் கண்விழியாலே
(கற்பனை)

***************************************************
நன்றி;http://pithatralgal.blogspot.com/2006/09/135.html

காமப் புரவி

கண்ணில் உருத்துகிறது
சிறு துரும்பு

உடலை வருத்தலாம்
சக்திமிகு இயற்கை

செயற்கைகள் பற்றி
சொல்ல வேண்டியதில்லை

உள்ளுறுப்புகள் வலிகொள
காரணங்கள் பல

புற உடல் காயம்பட
சந்தர்ப்பங்கள் பலப்பல

நகராமல் இருந்தாலும்
வலிக்கத்தான் செய்கிறது.

விணை புரிதல்களால்
விளைவுகள் எக்கச்சக்கம்

விணை புரிதல்களால்
வலிகள் மிச்ச சொச்சம்

தரிகெட்டோடுகிறது
காமப் புரவி

எழுதியவர்: மதியழகன் சுப்பையா
நன்றி;http://madhiyalagan.blogspot.com/2007/04/blog-post_20.html

மெளனமே பார்வையால். . .

> மெளனமே பார்வையால் ஒரு பாட்டு பாட வேண்டும்
> நாணமே ஜாடையால் ஒரு வார்த்தை பேச வேண்டும்


> வேண்டும் வேண்டும் உந்தன் உறவு
> வெண் பனி தென்றல் உள்ளவரையில்
> வெண்பனி தென்றல் உள்ளவரையில்.


> தோண்றும் இளமை தொடர்ந்திட வேண்டும்
> தொடரும் மாலை வளர்ந்திட வேண்டும்
> நான்கு இதழ் கலந்திட வேண்டும்
> நாளை என்பதை மறந்திட வேண்டும்
> வேண்டும் உந்தன் அழகு வெண்பனி
> தென்றல் உள்ளவரையில்




> நெஞ்சில் நீயே நிறைந்திட வேண்டும்
> நீண்ட இரவுகள் நான் பெற வேண்டும்
> கொஞ்சும் மொழிகள் நீ சொல்ல வேண்டும்
> கோடை மழையில் நான் நனைந்திட வேண்டும்
> வேண்டும் வேண்டும் உந்தன் அழகு
> வெண்பனி தெண்றல் உள்ள வரையில்
> உலகம் உன்னை புகழ்ந்திட வேண்டும்
> உங்கள் காலடி தெடர்ந்திட வேண்டும்
> உனை நினைத்தே நான் வாழ்ந்திட வேண்டும்
> ஒவ்வொரு பிறப்பிலும் தொடர்ந்திட வேண்டும்
> வேண்டும் வேண்டும் உங்கள் உறவு.

படம்: காதலிக்க நேரமில்லை

பங்குனி உத்திரம்

பங்குனி உத்திரம்

குரு வீடான மீனராசியில் சூரி யனும், கன்யா ராசியில் சந்திரனும் சம மாகப் பார்த்துக் கொள்ளும் திருநாளே பங்குனி உத்திரம். ஸ்ரீசுப்பிரமணியர் வள்ளியையும், ஸ்ரீராமர், சீதையையும், உமாதேவி சிவபெருமானையும் திருமணம் செய்து கொண்ட திருநாள் இது. ஸ்ரீரங்கநாச்சியார், ஸ்ரீஐயப்பன் பிறந்த திருநாள். குடந்தை ஸ்ரீஆதி கும்பேஸ்வரர் மகாமகக்குளத்தில் தெப்பத்தில் வலம் வரும் வைபோக தினம் இதுவே. சென்னை, மயிலை ஸ்ரீகற்பகாம்பாள்ஸ்ரீகபாலீஸ்வரர் திருமணமும் ஆண்டு தோறும் இன்றுதான் நடக்கும். ஸ்ரீமகாலக்ஷ்மி இன்று விரதம் இருந்து திருமாலின் மார்பில் இடம் பெற்றாள். இதே விரதத்தால் இந்திரன் இந்திராணி யையும், ஸ்ரீபிரம்மா சரஸ்வதியையும் அடைந்தனர். ரதியின் பிரார்த்த னைக்கு செவி சாய்த்து மன்மதனை
மகேஸ்வரன் உயிர் பெறச் செய்த திரு நாள் இது. வடநாட்டில் இதை ஹோலி என்று வண்ணப்பொடிகளை வாரியி றைத்துக் கொண்டாடுகின்றனர்.

இத்தினத்தில் தான் வில்வீரன் அர்ஜுனன் பிறந்தான். காஞ்சி ஸ்ரீவரதர், மதுரை ஸ்ரீகூடலழகர், திருமோகூர், ஸ்ரீவில்லிப்புத்தூர்,அழகர் கோயிலில் திருக்கல்யாண வைபவத்தை இன்று தரிசிக்கலாம். காஞ்சி, திருவாரூர் போன்ற ஸ்தலங்களில் ருத்ரபாத தீர்த்தமும் பெறலாம். திருநாவலூர் ஸ்ரீதண்டபாணி ஸ்வாமிக்கு பக்தர்கள் 1008 காவடி எடுத்து வந்து சமர்ப்பிக்கிறார்கள்.
**********************************
நன்றி; http://rp-padaippu.blogspot.com/2005/04/2005

தமிழ் பழமொழிகள்

அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை.

அகல உழுகிறதை விட ஆழ உழு.

அகல் வட்டம் பகல் மழை.

அச்சமில்லாதவன் அம்பலம் ஏறுவான்.

அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது.

அசைந்து தின்கிறது யானை, அசையாமல் தின்கிறது வீடு.

அஞ்சிலே வளையாதது ஐம்பதிலே வளையுமா?

அறிந்தறிந்து செய்கிற பாவத்தை அழுதழுது தொலைக்கவேண்டும்.

அறிய அறியக் கெடுவார் உண்டா?

அறிவில்லார் சிநேகம் அதிக உத்தமம்.

அறிவீன இடத்தில் புத்தி கேளாதே.

அறிவீனர் தமக்கு ஆயிரம் உரைக்கினும் அவம்.

அறிவு இல்லார் தமக்கு ஆண்மையுமில்லை.

அறிவுடையாரை அரசனும் விரும்புவான்.

அறுபத்து நாலடிக் கம்பத்திலேறி ஆடினாலும், அடியில் இறங்கி தான் தியாகம் வாங்கவேண்டும்.

அறுப்புக் காலத்தில் எலிக்கு ஐந்து பெண்சாதி.

அன்பு இருந்தால் ஆகாததும் ஆகும்.

அன்று எழுதிவன் அழித்து எழுதுவானா?

அன்று குடிக்கத் தண்ணீர் இல்லை ஆனைமேல் அம்பாரி வேணுமாம்.

அன்னம் இட்டவர் வீட்டில் கன்னம் இடலாமா?

அன்னைக்கு உதவாதவன் யாருக்கும் ஆகான்.

ஆய்ந்து பாராதான் காரியந் தான் சாந்துயரந் தரும்.

ஆரால் கேடு, வாயால் கேடு.

ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு.

ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும்[ நாலடியார்] இரண்டும்[குறள்] சொல்லுக்குறுதி.

ஆலை இல்லாத ஊரிலே இலுப்பைப் பூச்சக்கரை.

ஆவும் தென்னையும் ஐந்து வருடத்தில் பலம் தரும்.

ஆழமறியாமல் காலை இடாதே.

ஆள் கொஞ்சமானாலும் ஆயுதம் மிடுக்கு.

ஆளனில்லாத மங்கைக்கு அழகு பாழ்.

ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு.

ஆறிலுஞ் சாவு நூறிலுஞ் சாவு.

ஆறின கஞ்சி பழங் கஞ்சி.

ஆறு கடக்கிறவரையில் அண்ணன் தம்பி, ஆறு கடந்தால் நீ யார் நான் யார்?

ஆறு போவதே போக்கு அரசன் சொல்வதே தீர்ப்பு.

ஆறுகெட நாணல் இடு, ஊரு கெட நூலை விடு.

ஆனை கறுத்தால் ஆயிரம் பொன்.

ஆனை படுத்தால் ஆள் மட்டம்.

ஆனை வரும் பின்னே. மணி ஓசை வரும் முன்னே.

ஆனைக்கு ஒரு காலம் பூனைக்கு ஒரு காலம்.

ஆனைக்கும் அடிசறுக்கும்.

அடக்கம் உடையார் அறிஞர், அடங்காதவர் கல்லார்.

அடக்கமே பெண்ணுக்கு அழகு.

அடாது செய்தவன் படாது படுவான்.

அடி நாக்கிலே நஞ்சும் நுனி நாக்கில் அமுதமும்.

அடுத்த வீட்டுக்காரனுக்கு அதிகாரம் வந்தால் அண்டை வீட்டுக்காரனுக்கு இரைச்சல் இலாபம்.

அணில் கொம்பிலும், ஆமை கிணற்றிலும்.

அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வாராது.

அத்திப் பழத்தைப் பிட்டுப்பார்த்தால் அத்தனையும் புழு.

அந்தி மழை அழுதாலும் விடாது.

அப்பன் அருமை மாண்டால் தெரியும்.

அப்பியாச வித்தைக்கு அழிவில்லை.

அயலூரானுக்கு ஆற்றோரம் பயம், உள்ளூரானுக்கு மரத்திடியில் பயம்.

அரசன் இல்லாத நாடு அச்சில்லாத தேர்.

அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்.

அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது.

அழிந்த கொல்லையில் குதிரை மேய்ந்தாலென்ன, கழுதை மேய்ந்தாலென்ன?

அழுகிற ஆணையும், சிரிக்கிற பெண்ணையும் நம்பக்கூடாது.

அழுத பிள்ளை பால் குடிக்கும்.

அழுதாலும் பிள்ளை அவளே பெற வேண்டும்.

அளக்கிற நாழி அகவிலை அறியுமா?

அள்ளிக் கொடுத்தால் சும்மா, அளந்து கொடுத்தால் கடன்.

அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்க பாயில்லை.

அறச் செட்டு முழு நட்டம்.

அற்ப அறிவு அல்லற் கிடம்.

அறப்படித்தவன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான் கொள்ளவும் மாட்டான்.

அறமுறுக்கினால் அற்றும் போகும்.
**************************************************************
Thanks: http://www.isaitamil.net/forums/archive/index.php/t-11071.html
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது