முத்தம் கொடுத்தாள் !

'' அம்மா...உனக்கு பேத்தி பிறந்திருக்காம்மா...''
மகன் ராகவ் தகவல் சொன்னதும் மகிழ்ந்தாள் தாய்
காயத்ரி.
''டேய்..குழந்தையைப் பார்க்கணும் போல இருக்குடா...''
''ம்...அஞ்சு நிமிஷம் பொறுத்துக்கோ...''

ஐந்து நிமிட இடைவெளிக்குப் பின்...
''அம்மா...குழந்தை போட்டோவை மெயில்ல
அனுப்பியிருக்கேன்...நெட்டை ஓப்பன் பண்ணிப்பாரு...''
நியூ ஜெர்சியில் வசிக்கும் ராகவ், கும்பகோணத்திலுள்ள
அம்மாவுக்கு அனுப்பிய போட்டோவை கம்ப்யூட்டரில்
பார்த்து முத்த மழை பொழிந்தாள் காயத்ரி !

(கே.கே.புதூர்.எம்.பி.தினேஷ்)

நன்றி ; குங்குமம் (28-2-2002)

0 comments:

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது