ஹைக்கூ

உச்சி வெயில்
மரத்தடியில் ஒதுங்கியது
நிழல்.

மழையில் நனைந்தும்
சளி பிடிக்கவில்லை
குடை.

கடை திறந்ததும்
வந்து நின்றான் பிச்சைக்காரன்
முதல் போணி.

ஊர்களை இணைத்து
பிரிந்து கிடக்கிறது
தண்டவாளம்.

இதுவும் கூட உதவிதானே
கஷ்ட காலத்தில் விலகிப்போகும்
நண்பன்.

தகுதி இல்லாதவர்க்கும்
அரியாசனம்
அறியா சனம்.

நன்றி; குங்குமம் (4.3.05)

0 comments:

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது