பொன்மொழிகள்

"நாம்என்றுகூறும்போதுதான்உதடுகள்கூடசேரும்"
********************************

"உணவக்குத்தேவைஅறுசுவை;வாழ்க்கைக்குத்தேவைநகைச்சுவை;"
********************************


நல்லவனுக்குநலம்நடக்கும்
எனமட்டும்நம்பாது
வல்லவனாயும்வாழ்ந்துவிடுபாப்பா
-பாரதியார்

*********************************************
தரையோடு தரையாக நசுக்கப்பட்டாலும் சத்தியம் மறுபடியும் எழுந்து நின்றுவிடும். ஆண்டவனுடைய முடிவில்லாத நாட்கள் அதற்கும் உண்டு.
- பிரையண்ட

**********************************************
எரிக்கவும்குண்டுவீசி அழிக்கவும்தீயவர்கள்கட்டுகோப்பாக ஒன்றுசேர்ந்திருக்கும்போது; மக்களைஇணைத்துசேர்க்கவும்அமைதியை நிலைநாட்டவும்நல்லவர்கள்குறைந்தபட்சம் ஓர்அணியிலாவதுசேரவேண்டாமா?

(when bad people are united to burn and bomb; why can`t good people atleast join together to build and end?)- மார்ட்டின்லூதர்கிங்

**********************************************

Women marry men with the hope they will change.
Men marry women with the hope they will never change.
Invaribly
they are both disappointed. (Albert Einstein

************************************************
"Love is the delightful interval between meeting a beautiful girl
and discovering that she looks like a haddock."
John Barrymore (1882 - 1942)

புலவர் புலமைப்பித்தன்

" எனது வீடு எனது வாழ்வு, என்று வாழ்வது வாழ்க்கையா? இருக்கும் நாலு சுவருக்குள்ளே
வாழ நீ ஒரு கைதியா? " சாதி மல்லிப் பூச்சரமே

''ஐ.ஏ.எஸ். படித்து விட்டு பியூன் வேலைக்கு வந்ததற்குச் சமமான ஒரு விபத்து'' என்று, தான் பாடல் எழுதவந்தது பற்றி வர்ணிக்கிறார் புலவர் புலமைப்பித்தன்.

எம்.ஜி.ஆர்., சிவாஜி காலத்தில் தொடங்கி இன்று அஜீத், விஜய் வரைக்கும் தன்னை நீட்டித்துக் கொண்டிருக்கிற கவிஞர்.

எந்தச் சூழ்நிலைக்கும் இலக்கியத் தரமாகவே பாடல்கள் எழுதுவதில் முன்னோடி என்று இவரைச் சொல்லலாம்.

''பிறவி கம்யூனிஸ்ட் நான். ஏற்றத் தாழ்வுகளை ஒழிக்கப் போராடும் யுத்தக்காரன். சமூக அநீதி கண்டு பொங்கும் போராளி. பாரதி, பாரதிதாசன் வழியில் வந்த தொடர்ச்சி. பொது உடைமையும் சம உரிமையும் விரும்புபவன். சினிமாவில் பாட்டெழுதுவது என் லட்சியம் அல்ல. பாடலாசிரியன் என்பது மட்டுமே என் முகவரி அல்ல.. என் முகங்களில் ஒன்று'' என்று சிரிக்கிறார்.

உடுத்துகிற சட்டை-வேட்டி, முறுக்கேறிய மீசை, வெடித்துக் கிளம்புகிற சிரிப்பு என அத்தனையும் பளிச் வெள்ளை!

''பஞ்சாலைக் கூலித் தொழிலாளி நான். புலவர் படிப்பு படித்துவிட்டு கோவையில் தமிழாசிரியராக வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். 1966-ம் வருடம் இயக்குநர் கே. சங்கர் என்னை சென்னைக்கு அழைத்தார். திடீரென வந்தது திரைப்பாடல் எழுதுகிற வாய்ப்பு. யார் யாரோ எழுதி சரி வராமல் போக, கடைசியில் என்னை எழுதச் சொன்னதாக நினைவு. மாம்பலம் பவர்ஹவுஸ் அருகில் ஒரு பெட்டிக்கடை வாசலில் நின்றுகொண்டே 'குடியிருந்த கோயில்' படத்துக்காக நான் எழுதிய பாடல்தான் -

நான் யார்? நான் யார்? நீ யார்?
நாலும் தெரிந்தவர் யார்- யார்?
தாய் யார்? மகன் யார்? தெரியார்;
தந்தை என்பார் அவர் யார்- யார்?
உறவார்? பகை யார்?
உண்மையை உணரார்;
உனக்கே நீ யாரோ?
வருவார்; இருப்பார்;
போவார்; நிலையாய்
வாழ்வார் யார் யாரோ?

'ஒரு பைத்தியக்காரன் பாடுவது போல் எழுதுங்கள்!' என்று சொன்னதும் எனக்குத் தோன்றியது 'நான் யார்?' என்கிற கேள்விதான். எல்லோரும் தன்னைப் பார்த்துக் கேட்கவேண்டிய கேள்வி இது. பட்டினத்தான் கேட்டாலும் இதைத்தான் கேட்பான். பட்டினத்தானும் பைத்தியக்காரனும் ஒன்றுதானே...

இந்தப் பாடலுக்குக் கிடைத்த பெரும் வெற்றியால் நான் தொடர்ந்து பாடல்கள் எழுதலானேன். எந்தச் சூழல் தரப்பட்டாலும் அதற்குப் பொருந்துகிற மாதிரி என் முற்போக்கான கருத்துகளை, புரட்சிகர எண்ணங்களை எழுதிக்கொடுக்க ஆரம்பித்தேன். எம்.ஜி.ஆர். என்கிற சக்திவாய்ந்த கருவியைப் பயன்படுத்தி வீரமான இளைஞர்களுக்கு நான் விடுத்த அறைகூவல்தான் 'உழைக்கும் கரங்கள்' படத்தில் இடம்பெற்ற -

நாளை உலகை ஆள வேண்டும்
உழைக்கும் கரங்களே - இந்த
நாடு முழுதும் மலர வேண்டும்
புரட்சி மலர்களே
கடமை செய்வோம் கலங்காமலே
உரிமை கேட்போம் தயங்காமலே
வாருங்கள் தோழர்களே - ஒன்றாய்
சேருங்கள் தோழர்களே!

என்கிற பாடல். இன்றைக்கும் கேட்ட விநாடி சிலிர்ப்பூட்டுகிற ஒரு பாடல் அது.

பஞ்சபூதங்களில் மண் மட்டும் தான் மனிதர்களால் பிரித்து வைக்கப்பட்டிருக்கிறது. இந்த அவலத்தைத் தான்-

காற்றும் நீரும் வானும் நெருப்பும்
பொதுவில் இருக்குது - மனிதன்
காலில் பட்ட பூமி மட்டும்
பிரிந்து கிடக்குது..
பிரித்து வைத்துப் பார்ப்பதெல்லாம்
மனித இதயமே - உலகில்
பிரிவு மாறி ஒருமை வந்தால்
அமைதி நிலவுமே...
என்று 'இதயக்கனி' படத்தில் எழுதினேன். இன்று மண்ணை மட்டுமல்ல.. நீரையும் பிரித்து விட்டார்கள் என்பது பெரும் வேதனை.

என் பாடல்களின் மீது புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்கு மயக்கமே உண்டு.

எந்தக் குழந்தையும் நல்ல
குழந்தைதான்
மண்ணில் பிறக்கையிலே - அவர்
நல்லவராவதும் தீயவராவதும்
அன்னை வளர்ப்பதிலே...
என்கிற, 'நீதிக்குத் தலைவணங்கு' பாட்டு வரிகளை குடும்பநலத் துறை சார்பாக மாநிலம் முழுக்க எழுதி வைக்கச் செய்தார். ஒரு திரைப்படப் பாடலுக்கு அரசாங்கம் தந்த உச்சகட்ட அங்கீகாரம் இதுவாகத்தான் இருக்கும் என்று கருதுகிறேன்.

எம்.ஜி.ஆருக்கு நான் எழுதிய இளமை கொப்பளிக்கும் காதல் வரிகள் இன்றைக்கும் வாழ்பவை. சாகாவரம் பெற்றவை. 'அடிமைப் பெண்' படத்தின் 'ஆயிரம் நிலவே வா' பாடலில் வரும் -

பொய்கையெனும்
நீர்மகளும்
பூவாடை போர்த்து
நின்றாள்
தென்றலெனும்
காதலனின்
கைவிலக்க வேர்த்து
நின்றாள்
என்ன துடிப்போ
அவள் நிலை
நீயுணர மாட்டாயோ
அந்த நிலையில் தந்த சுகத்தை
நான் உணரக் காட்டாயோ?
என்கிற வரிகள் விரகத்தின் தவிப்பை விளக்கினால், ஆண் - பெண் உறவை இலக்கியத்தரமாகச் சித்திரித்தது -

சந்தன மேனிகளின்
சங்கம வேளையிலே
சிந்திய முத்துகளைச்
சேர்த்திடும் காலமிது
தேன்கனிக் கோட்டையிலே
சிற்றிடை வாசலிலே
தோரண மேகலையில்
தோன்றிய கோலமிது

என்கிற வரிகள். காதலோடு நிறுத்திக்கொண்டுவிட முடியாதபடி என் சமூகச்சிந்தனை என்னைத் தூண்டிக்கொண்டே இருக்கும்.. அதுதான் என்னை இயக்குவது.

புண்ணிய பூமி என்று இந்தியாவைச் சொல்கிறோம். இங்கு இல்லை என்பதே இல்லை. இந்தத் திருநாட்டில் கங்கை உண்டு. ஆனால் தண்ணீர் இல்லை. வயல் எங்கும் உண்டு. உண்ணச் சோறு இல்லை. இந்த தேசத்தைத் துன்பங்கள் ஆள்கின்றன. வெறும் தேர்தல்களே இங்கு வாழ்கின்றன. இதுதான் புண்ணிய பூமியா? இந்த ஆதங்கத்தில்தான் -

புஞ்சை உண்டு நஞ்சை உண்டு
பொங்கிவரும் கங்கை உண்டு
பஞ்சம் மட்டும் இன்னும் இங்கு
மாறவில்லை - நம்
பாரதத்தின் சோத்துச் சண்டை தீரவில்லை.
இது நாடா, இல்லை வெறும் காடா? - இதைக்
கேட்க யாரும் இல்லை தோழா...
என்று 'உன்னால் முடியும் தம்பி' படத்தில் எழுதினேன்.

வயித்துக்காக மனுஷன் இங்கே
கயித்தில் ஆடுறான் பாரு;
ஆடி முடிச்சு இறங்கி வந்தா
அப்புறம்தாண்டா சோறு
என்று 'நல்லநேரம்' படத்துக்கு நான் எழுதிய பாட்டு திரையரங்குக்கு வெளியே கேட்டாலும் கண்ணீரை வரவழைப்பதற்கு என் சமூக அக்கறைதான் காரணம்.

இரும்பாக இறுகுகிற நான்தான் மெழுகாகக் குழையவும் முடியும். எரிமலை வரிகளை எழுதிவிட்டு,

பாடும்போது நான் தென்றல்காற்று

என்றும் எழுதமுடிகிறது.

தனிப்பட்ட முறையில் எந்த உணர்வு மனதை ஆட்கொண்டிருந்தாலும் பாடல் எழுதுவதற்கான சூழல் சொல்லப்பட்டவுடன் கதாபாத்திரமாக மாறித்தான் எழுதுவேன். பள்ளிப்பக்கமே எட்டிப் பார்த்திராத ஒருவன், தனக்குத் தெரிந்த மொழியில் தன் சோகத்தைச் சொல்ல வேண்டிய சூழலில்,

வட்டுக் கருப்பட்டியை வாசமுள்ள
ரோசாவை
கட்டெறும்பு மொச்சுதுன்னு
சொன்னாங்க
கட்டுக்கதை அத்தனையும்
கட்டுக்கதை -
அதைச் சத்தியமா நம்ப மனம்
ஒத்துக்கல்லே...
என்று 'ரோசாப்பூ ரவிக்கைக்காரி'க்காக எழுதினேன். தன் மனைவி பற்றி ஊருக்குள் ஏதேதோ பேசுவதை நம்ப முடியாமல் தன் நெஞ்சை அறுக்கிற சோகத்தை கண்ணீர் வழியக் கதாநாயகன் பாடுவதைப் பார்க்கும் போதே நமக்கும் நெஞ்சு விம்மிப் போகும்.

'அழகன்' படத்தில் தனக்குப் மிகவும் பிடித்த பாடல் என்று இயக்குனர் கே. பாலசந்தர் குறிப்பிடும் 'சாதி மல்லிப் பூச்சரமே..'

பாட்டின் சரணத்தில்,

எனது வீடு எனது வாழ்வு
என்று வாழ்வது வாழ்க்கையா?
இருக்கும் நாலு
சுவருக்குள்ளே
வாழ நீ ஒரு கைதியா?

என்று எழுதியிருப்பேன்.

அதே படத்தில் மொழி விளையாட்டாக,

தத்தித்தோம் வித்தைகள்
கற்றிடும்
தத்தைகள் சொன்னது
தத்தித்தோம்
தித்தித்தோம் தத்தைகள்
சொன்னது
முத்தமிழ் என்றுளம்
தித்தித்தோம்
கண்ணில் பேசும் சங்கேத
மொழியிது
கண்ணன் அறிய
ஒண்ணாததா?
உன்னைத் தேடும் ஏக்கத்தில்
இரவினில்
கண்ணுக்கிமைகள்
முள்ளாவதா?
என்றும் எழுதியிருப்பேன்.

என்னை வெகுவாக ரசிக்கும் இசைஞானி இளையராஜா ஒருமுறை என்னை அழைத்துவிட்டிருந்தார். பாரதியின் வழித்தோன்றலாக என்னைக் கருதிக்கொண்டிருக்கிறேன். அதே பாரதி, தனக்குப் பிடித்த, வே`றாருவர் எழுதிய பாடலைப் பாடுவதுபோலக் காட்சிஅமைப்பு. அதற்கு என்னை எழுதச்சொன்னார். என் முப்பாட்டனையே கவர்ந்த பாடலை எழுதுகிற உற்சாகத்தில் நான் எழுதினேன்,

வரிப்புலி அதள் தரித்தவன் எழில்
கண்டேன்
பிறப்பெனும் பிணி அறுப்பவன்
துணை கொண்டேன்
தமிழ்க்கவி தரும் எனக்கொரு வரம்
தரத் திருவுளம் வேண்டும்
சகத்தினுக்கெனை தரத்தகும் நெறி
வகுத்திடத் துணை வேண்டும்

என்று நாத்திகனான நான், ஆத்திகம் பேசும் ஒரு பாடலை எழுதினேன். 'பாரதி' படத்தில் இடம்பெற்ற 'எங்கும் எதிலும் இருப்பான் அவன் யாரோ?' என்கிற பாடல் பெற்ற வரவேற்பைப் பற்றி உங்களுக்கே தெரியும்.

எனக்குள் ஒரு அழல் இருக்கிறது. எப்போதும் இருந்துகொண்டே இருக்கிறது. சிலபொழுது எரிந்து கொண்டும் சிலபொழுது கனிந்து கொண்டும்.

அதனால்தான் இருபத்தொன்பது வயதில் தத்துவப்பாடலும், அறுபத்திரண்டு வயதில்,

உன்னைப் படைத்த பிரம்மனே
உன்னைப் பார்த்து ஏங்கினான்
காதல் பிச்சை வாங்கினான்

என்றும் எழுத முடிகிறது. அந்த நெருப்பு இருக்கும்வரை என் பாட்டுகளும் வந்துகொண்டுதான் இருக்கும்!''

சந்திப்பு: ரமேஷ் வைத்யா

உலக நீதி-- ஆசிரியர்: உலகநாதர்

உலக நீதி
ஆசிரியர்: உலகநாதர்

#1

ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம்
வஞ்சனைகள் செய்வாரோடு இணங்க வேண்டாம்
போகாத இடந்தனிலே போக வேண்டாம்
போகவிட்டுப் புறம் சொல்லித் திரிய வேண்டாம்
வாகாரும் குறவருடை வள்ளிபங்கன்
மயிலேறும் பெருமானை வாழ்த்தாய் நெஞ்சே

#2

நெஞ்சாரப் பொய் தன்னைச் சொல்ல வேண்டாம்
நிலையில்லாக் காரியத்தை நிறுத்த வேண்டாம்
நஞ்சுடனே ஒருநாளும் பழக வேண்டாம்
நல் இணக்கம் இல்லாரோடு இணங்க வேண்டாம்
அஞ்சாமல் தனிவழியே போக வேண்டாம்
அடுத்தவரை ஒரு நாளும் கெடுக்க வேண்டாம்
மஞ்சாரும் குறவருடை வள்ளிபங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே

#3

மனம்போன போக்கு எல்லாம் போக வேண்டாம்
மாற்றானை உறவு என்று நம்ப வேண்டாம்
தனம் தேடி உண்ணாமல் புதைக்க வேண்டாம்
தருமத்தை ஒருநாளும் கெடுக்க வேண்டாம்
சினம் தேடி அல்லலையும் தேட வேண்டாம்
சினந்து இருந்தார் வாசல் வழிச் சேர வேண்டாம்
வனம் தேடும் குறவருடை வள்ளிபங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே

#4

குற்றம் ஒன்றும் பாராட்டித் திரிய வேண்டாம்
கொலை களவு செய்வரோடு இணங்க வேண்டாம்
கற்றவரை ஒருநாளும் பழிக்க வேண்டாம்
கற்புடைய மங்கையரைக் கருத வேண்டாம்
கொற்றவனோடு எதிர்மாறு பேச வேண்டாம்
கோயில் இல்லா ஊரில் குடி இருக்க வேண்டாம்
மற்று நிகர் இல்லாத வள்ளிபங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே


#5

வாழாமல் பெண்ணை வைத்துத் திரிய வேண்டாம்
மனையாளை குற்றம் ஒன்றும் சொல்ல வேண்டாம்
வீழாத படுகுழியில் வீழ வேண்டாம்
வெஞ்சமரில் புறம் கொடுத்து மீள வேண்டாம்
தாழ்வான குலத்துடனே சேர வேண்டாம்
தாழந்தவரைப் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
வாழ்வாரும் குறவருடைய வள்ளி பங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே

#6

வார்த்தை சொல்வார் வாய் பார்த்துத் திரிய வேண்டாம்
மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டாம்
மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்
முன்கோபக் காரரோடு இணங்க வேண்டாம்
வாத்தியார் கூலியை வைத்திருக்க வேண்டாம்
வழிபறித்துத் திரிவாரோடு இணங்க வேண்டாம்
சேர்ந்த புகழாளன் ஒரு வள்ளி பங்கன்
திருக்கை வேலாயுதனைச் செப்பாய் நெஞ்சே

#7

கருதாமல் கருமங்கள் முடிக்க வேண்டாம்
கணக்கு அழிவை ஒருநாளும் பேச வேண்டாம்
பொருவார் தம் போர்க்களத்தில் போக வேண்டாம்
பொது நிலத்தில் ஒருநாளும் இருக்க வேண்டாம்
இருதாரம் ஒருநாளும் தேட வேண்டாம்
எளியோரை எதிரிட்டுக் கொள்ள வேண்டாம்
குருகாரும் புனம் காக்கும் ஏழை பங்கன்
குமரவேள் பாதத்தைக் கூறாய் நெஞ்சே

#8

சேராத இடம் தனிலே சேர வேண்டாம்
செய்த நன்றி ஒருநாளும் மறக்க வேண்டாம்
ஊரோடும் குண்டுணியாய்த் திரிய வேண்டாம்
உற்றாரை உதாசினங்கள் சொல்ல வேண்டாம்
பேரான காரியத்தைத் தவிர்க்க வேண்டாம்
பிணைபட்டுத் துணை போகித் திரிய வேண்டாம்
வாராரும் குறவருடை வள்ளி பங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே

#9

மண் நின்று மண் ஓரம் சொல்ல வேண்டாம்
மனம் சலித்து சிலிக்கிட்டுத் திரிய வேண்டாம்
கண் அழிவு செய்து துயர் காட்ட வேண்டாம்
காணாத வார்த்தையை கட்டுரைக்க வேண்டாம்
புண்படவே வார்த்தைகளைச் சொல்ல வேண்டாம்
புறம் சொல்லித் திரிவாரோடு இணங்க வேண்டாம்
மண் அளந்தான் தங்கை உமை மைந்தன் எங்கோன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே

#10

மறம் பேசித் திரிவாரோடு இணங்க வேண்டாம்
வாதாடி வழக்கு அழிவு சொல்லை வேண்டாம்
திறம் பேசிக் கலகமிட்டுத் திரிய வேண்டாம்
தெய்வத்தை ஒருநாளும் மறக்க வேண்டாம்
இறந்தாலும் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்
ஏசலிட்ட உற்றாரை நத்த வேண்டாம்
குறம் பேசி வாழ்கின்ற வள்ளி பங்கன்
குமரவேள் நாமத்தை கூறாய் நெஞ்சே

#11

அஞ்சு பேர் கூலியைக் கைக்கொள்ள வேண்டாம்
அது ஏது இங்கு என்னில் சொல்லக் கேளாய்
தஞ்சமுடன் வண்ணான் நாவிதன் தன் கூலி
சகல கலை ஓதுவித்த வாத்தியார் கூலி
வஞ்சமற நஞ்சு அறுத்த மருத்துவச்சி கூலி
மகா நோவுதனைத் தீர்த்த மருத்துவன் கூலி
இன்சொல்லுடன் இவர் கூலி கொடாத பேரை
ஏதெது செய்வானோ ஏமன்றானே

#12

கூறாக்கி ஒரு குடியைக் கெடுக்க வேண்டாம்
கொண்டைமேல் பூத்தேடி முடிக்க வேண்டாம்
தூறாக்கித் தலையிட்டுத் திரிய வேண்டாம்
துர்ச்சனராய் திரிவாரோடு இணங்க வேண்டாம்
வீறான தெய்வத்தை இகழ வேண்டாம்
வெற்றியுள்ள பெரியாரை வெறுக்க வேண்டாம்
மாறான குறவருடை வள்ளி பங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே

#13

ஆதரித்துப் பலவகையால் பொருள்கள் தேடி
அருந்தமிழால் அறுமுகனைப் பாட வேண்டி
ஓதுவித்த வாசகத்தால் உலகநாதன்
உண்மையாய்ப் பாடிவைத்த உலக நீதி
காதலித்துக் கற்றோரும் கேட்ட பேரும்
கருத்துடனே நாள்தோறும் களிப்பினோடு
போதமுற்று மிக வாழ்ந்து புகழும் தேடிப்
பூலோகம் உள்ள அளவும் வாழ்வார் தாமே

முற்றும்.
source:http://www.tamil.net/projectmadurai


http://bharani.dli.ernet.in/pmadurai/mp022.html

Romantic Love Quotes

Romantic Love Quotes

Spread love everywhere you go: first of all in your own home.
Give love to your children, to a wife or husband, to a next-door neighbor.
Mother Teresa

Love is composed of single soul inhabiting two bodies.
Aristotle

True love never dies for it is lust that fades away. Love bonds for a lifetime but lust just pushes away.
Alicia Barnhart

Sympathy constitutes friendship; but in love there is a sort of antipathy, or opposing passion. Each strives to be the other, and both together make up one whole.
Samuel Taylor Coleridge

A kiss is a lovely trick designed by nature to stop speech when words become superfluous.
Ingrid Bergman

Love is not love that alters when it alteration finds.
Shakespeare

விண்மீன்கள்- [சிறுவர் பாடல்)

அம்மா போட்ட புள்ளிக்கோலம்
போன்ற அழகு விண்மீன்கள் !
இம்மாம் பெரிய உலகத்திலே
யார் இறைத்தார் வைரங்கள் !

மட்டிப் பூவின் கொத்தைப் போல்
மின்மின்கள் கூட்டம்போல்,
எட்டி நின்று கண் சிமிட்டி
யாரை அங்கே அழைத்திடும் !

மேகமூட்டப் புகை மறைத்தும்
மெள்ள எட்டிப் பார்த்திடும் !
பாகு போன்ற இன்பந் தன்னைப்
பிறக்களித்து மகிழ்ந்திடும்.
**************************

கவிஞர் முல்லைவாணண்
நால்; ஊஞ்சல்;

நன்றி; டாக்டர் ஏ ஆர்ஏ சிவமுராரன்-

''சிங்கப்பூர்த் தமிழ்க் குழந்தை இலக்கியம்(திறனாய்வு)'' நூலிலிருந்து

Quotes-George Bernard Shaw

A gentleman is one who puts more into the world than
he takes out.


A little learning is a dangerous thing,
but we must take that risk because a little
is as much as our biggest heads can hold.


Animals are my friends... and I don't eat my friends.


Better keep yourself clean and bright;
you are the window through which you must see the world.


Beware of the man who does not return your blow:
he neither forgives you nor allows you to forgive yourself.


Do not do unto others as you expect they should do unto you.
Their tastes may not be the same.


First love is only a little foolishness and a lot of curiosity.


I have to live for others and not for myself:
that's middle-class morality.


If you and I have an apple each and exchange them,
we would still have one apple.
But if you and I have an idea and exchange them
we would then have two ideas.
*******************************************************************

George Bernard Shaw

The 2 wolves

The 2 wolves

One evening an old man told his grandson about a
battle that goes on inside people. He said, "My son, the battle is between 2
"wolves" inside us all.
One is Evil. It is anger, envy, jealousy, sorrow, regret,
greed, arrogance, self-pity, guilt, resentment, inferiority, lies, false
pride, superiority, and ego.
The other is Good. It is joy, peace, love, hope, serenity, humility,
kindness, benevolence, empathy, generosity, truth, compassion and faith."
The grandson thought about it for a minute and then asked his grandfather:
"Which wolf wins?"
scroll down....





















The old man simply replied, "The one you feed."
***********************************
Thanks: http://ramishere.blogspot.com/2006/02/2-wolves.html

சந்தோஷ் கவிதைகள்

உன் நினைவு !

இறந்தும் உயிரோடு
இருப்பது போல
நடிக்கிறேன்
நான் !
உயிருடன் கொல்லுவதாய்
எண்ணி
என் சவமெரிக்கிறது
உன் நினைவு !

****************************************

எப்படித் தெரியும் ?

'நவகிரகங்களை ஒன்பது
முறை சுற்றினாலே
பெரிய பலன் உண்டு,
ஏன் பதினெட்டு முறை சுத்தற ?'
குருக்கள் கேட்டபொழுது
வழிந்தேன் !
அவருக்கு எப்படி தெரியும்
நீ இன்னும் வராதது !


*****************************
மு.ரா.சந்தோஷ்

நன்றி ; தினமலர்-வாரமலர் 10-2-08
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது