தம்பியின் நாட்குறிப்பிலிருந்து ஒரு ஞாயிற்றுக்கிழமை

. . . அண்ணன் படித்து முடித்து
அட்டை கிழிந்த புத்ததகம்
நேருவின் முகத்தில் மீசை
காந்தியின் நெற்றியில் நாமம்
மெளண்ட்பேட்டன் பிரபு ?
என்பதை அடித்து
மெளண்பேட்டன் அடிமை
என்று எழுதியிருக்கிறான் அண்ணன்.

தன் கற்பனைக்கு இடமில்லாததால்
புத்தகத்தை தூக்கி சுவற்றில் எறிந்து,
நிமிர்ந்து பார்க்கும் நாயை
எட்டி உதைக்கறான் தம்பி !

''தம்பியாய் இருப்பதன் கஷ்டம்
தம்பிக்குத்தான் தெரியும்''
என்று தனக்குள் சொல்லியபடி
வாலாட்டுகிறது நாய்''

நன்றி; நா.முத்துக்குமார் (குமுதம் 25.10.04))

0 comments:

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது