உணர்வுகள் மட்டும் பேசட்டும்

கதிரவனும் தாமரையும்;-

காதலன் உன்னை முத்தமிட்டால்
சுடும் என்பதால்
உன்னை நீரில் படைத்தானோ !

இதயம் ;-

பாவி ! நம்பிக்கை துரோகி !
இருப்பது என்னுள்
ஆனால்
விசுவாசம் மட்டும் அவளுக்கு !

பைத்தியம்;-

ஒரு ஆடை கிழிந்த பைத்தியம்
அழகாக கவிதை பாடுகிறது என்று
ஊர் சொல்லக் கேள்விப்பட்டுக்
காணச்சென்றேன் ! ஆச்சரியம் !
சொல்வது உண்மைதான் . . .
எப்படி என்றேன் ?
காதலித்தேன் என்றான் . . .

தவறு'-
தவறுகளை தினமும் புரிவேன் !
உன்னிடம் திட்டு வாங்குவதற்கு !

நன்றி; கார்த்திகேயன் (உணர்வுகள் மட்டும் பேசட்டும்)
- அருணை வெளியீடு.

0 comments:

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது