ஹைக்கூ

தொங்கும் வீடுகள்
வெளவாலைப் பார்த்ததுவோ
தூக்கணாங்குருவி.

வெட்டியவன் போய்விட்டானா ?
எட்டிப் பார்த்தது
வாழைக்குருத்து.

பசியோடு காவல்
கதிரைத் தின்றதில்லை
சோளக்கொல்லை பொம்மை.

வெட்டியவனையே
தூக்கிச் சென்றது
பச்சை மூங்கில்.

நன்றி; இரா.சுப்பராயலு .(மூவடியார்-கவிதை நூல்)

0 comments:

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது