இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு

ஆந்திரப்பிரதேசம்-ஆருத்ரா கவிதைகள்.
பக்கத்து வீட்டில்;

பக்கத்து வீட்டுப் பசு
மேய்கிறது எங்கள் தோட்டத்தில்
பக்கத்து வீட்டுக் கோழி கூவுகிறது
எங்கள் வீட்டுச்சுவரேறி என
நினைத்துக் கொள்கிறோம் நாங்கள்.. . .

பக்கத்து வீட்டு நாய்
துரத்துகிறது எங்கள் பசுவை
பக்கத்து வீட்டுப் பூனை
தின்று விடுகிறது எங்கள் கோழியை
நினைத்துக் கொள்கிறார்கள்
அவர்கள் !

நன்றி; சிவசங்கரி (இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு)

0 comments:

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது