Cheapest Bike for Rs.5000 (like nano)..... !!!!!!!

Bajaj ' s new Cheapest Bike for Rs.5000 (like nano)..... !!!!!!!

It has been a major hit in the market and is largely responsible for changing the 'Two wheeler maket'


It will be introduced in Indian market in 1 st JUNE 2009 ...

I hope everyone wil come to office by bike in few days..

Facilities are..

Available in following option

a) Kick Start
b) Electric Start

1. 250 CC Speed
2. Air Conditoner System
3. break System as like Disc break in Pulsar
4. Without doubt it's going to win "Best Bike Of the Year 2009 "

Engine Specification
Engine
Air Cooled
Speed 50km /h
Front Brakes
No Need
Rear Brakes
130mm Drum
Front Tyre
2.75 X 18
Rear Tyre
100/90 X 18
Wheelbase
1265mm
Ground Clearance
155mm
Dry Weight
50 Kg
Tank Capacity
No Need
Colours
Brown



It has a admire look..


.


cid:image003.png@01C8633C.EA93EE10

மின் அஞ்சலில் பெறப்பட்டது

பாரிஜாதம்!


விண்ணிருந்து மண் வந்த மலரெனவே
மராட்டி மண்ணிருந்து இங்கு வந்த
மங்கையவள் பெயர் பாரிஜாதமாம்
பக்கத்து வீட்டின் புது வரவு


அவர் வீட்டில் பேசினால் என் வீட்டில் கேட்கும்
பல ஊர் சுற்றி வந்த எனக்கோ
பத்து மொழியில் தெரியும் ஐந்து சொற்கள்


அன்றொரு நாள் சிதறிய முத்துக்கள் எனத்
தரையதனில் தான் கிடந்த
பாரிஜாத மலரதனைப் பொறுக்கச்
சென்றேன் தோட்டத்துள் நான்


வேலியின் இரு புறமும் கண்டேன் பாரிஜாதம்
ஒரு புறம் செடி மறுபுறம் கொடி


பெயர் போன்றே வெள்ளை முகம்
சோகை பிடித்த வெள்ளை அல்ல அது
ரோஜா வண்ணம் சிறிதே கலந்த வெள்ளை
சுண்டினால் பால் தெறிக்கும் என்பது போல்


ஒரு கணம் மயங்கி நின்றேன் மங்கையவள் அழகினிலே
இரு ஜோடிக் கரு விழிகள் கூடிடவே மலர்ந்தன
மாதுளம் மொட்டென விருந்த அவள் செவ்விதழ்கள்
மலரவள் முகமதிலோர் புன் சிரிப்பு


மறு கணமோர் சிம்மக் குரல் உள்ளிருந்தே
பாரீ என்ன செய்கிறாய் பார் நீ
பனியினிலே நின்றால் சளி பிடிக்கும் உனக்கு
படுத்திடுவாய் பத்து நாள், வா உள்ளே என்றே

மானெனத் துள்ளியே பாய்ந்தது உள்ளே
பாரிஜாதமெனும் அப் பச்சிளம் குழந்தையுந்தான்
-------------------------------------------------------------
posted by நடராஜன் கல்பட்டு
Thanks: http://www.mazhalaigal.com/tamil/poems/poems-001/0904nkn_flower.php


நகைச்சுவை-(ஆனந்த விகடன்)

பி.ச.குப்புசாமி கவிதைகள்:

பி.ச.குப்புசாமி கவிதைகள்

சந்திரிகை:

இந்த முகம் அன்றொருநாள்
......என்னருகே வந்தமுகம்
மந்தநகை யோடென்றன்
......மார்பினில்பு தைந்தமுகம் !

இந்த முகம் நான்சொன்ன
......இன்மொழிகள் கேட்டமுகம்
சிந்தனைகள் பிறிதின்றிச்
......சிரித்தருகி ருந்தமுகம் !

இந்தமுகம் காதலெனும்
.....எழில் வானம் கண்டமுகம்
நொந்தமனம் அன்றாடம்
......நூறுதரம் எண்ணும்முகம் !

இந்தமுகம் பேரன்பின்
......இன்பங்கள் கொண்டமுகம்
முந்தியரு நாளென்னை
......முத்தங்கள் இட்டமுகம் !

இந்தமுகம் பிரிவாகி
......எனைவிட்டுச் சென்றமுகம்
விந்தைமுகம் காலத்தை
......வென்றுதினம் நின்றமுகம் !

* * *
வான்விளிம்பில் சந்திரிகை
......வந்தொளிசெய் கின்றாள்
நான்விரும்பும் முகமொன்றை
......நனவிற்கொணர்கின்றாள்

*****************************
காலடிகள்:

காலமெனும் பெரும்பரப்பில்
......காதல்மகள் நடக்கின்றாள்
கோலமெலாம் தனதாகக்
......கொண்டமகள் நடக்கின்றாள்!

ஞாலமெனும் பெரும்பரப்பில்
......ஞானமகள் நடக்கின்றாள்
மூலமெனும் பொருளறிய
......முனைந்தமகள் நடக்கின்றாள்!

அளவில்லாப் பெரும்பரப்பில்
......ஆசைமகள் நடக்கின்றாள்
வளர்கின்ற துன்பமெலாம்
......மறந்தமகள் நடக்கின்றாள்!

உள்ளமெனும் பெரும்பரப்பில்
......உணர்வுமகள் நடக்கின்றாள்
வெள்ளமெனப் பிரவாகம்
......விந்தைமகள் நடக்கின்றாள்!

விதியென்னும் பெரும்பரப்பில்
......விட்டமகள் நடக்கின்றாள்
எதிர்காலம் குறிக்கோளாய்
......இந்தமகள் நடக்கின்றாள்!

* * *
நடந்துசெல்லும் மகளிர்தம்
......நடையழகே என்வாழ்க்கை
கடந்து செலும் அவர்தமது
.....காலடிகள் என்கவிதை!

***************************
பொய்...பொய்...பொய்:

நின்றதுபொய் பார்த்ததுபொய் நெஞ்சைமெலத் தொட்டுவிட்டுச்
சென்றதுபொய் ஆனால் செகமும்பொய் - இன்றுமுதல்
தெய்வமும் பொய்யாம் தெரிந்துகொண் டேனெல்லாம்
பொய்யிலும் பொய்யாகும் போ!

சொன்னவை பொய்உன் சுடர்விழி வீசிய
மின்னலும் பொய்உன்றன் மென்னடை - இன்முகம்
கன்னிகை நாணம் கருத்தை அறிவித்த
புன்னகை யாவுமே பொய்!

வாழ்வுபொய் நீயதில் வந்ததுபொய் நம்பிய
ஊழ்வினைப் புண்ணியம் ஓர்பொய்யே - ஏழேழ்
பிறவிக்கும் பற்றாகும் பேரன் பெனும்சொல்
வெறும்பொய்யே அன்றிவேறு என் ?

---------------------------------------------------------

நன்றி: பல பத்து ஆண்டுகளுக்கு முன் பத்திரிகைகளில் பிரசுரமான இக்கவிதைகளைப் பத்திரமாய் வைத்திருந்து தந்துதவிய சபா என்கிற வே.சபாநாயகம் அவர்களுக்கு.

Thanks: http://tamil-lit.blogdrive.com

வ.ஐ.ச.ஜெயபாலன் கவிதைகள்

வ.ஐ.ச.ஜெயபாலன் கவிதைகள்:

இருமை:

நான் சிறுசாய் இருக்கையில்
உலகம் தட்டையாய் இருந்தது.
எங்க பாட்டிக்குத் தெரிந்த ஓர் அரக்கன்
ஒருமுறை உலகைப் பாயாய்ச் சுருட்டி
ஒளித்து விட்டானாம்.
அப்போதெல்லாம்
பகல்தொறும் பகல்தொறும்
ஏழு வண்ணக் குதிரைத் தேரில்
சூரியன் வருகிற வழி பார்த்திருந்து
பாட்டி தொழுவாள் நானும் தொடர்வேன்.

ஒரு நாள் வகுப்பறையில்
என் அழகான ஆசிரியை
உலகை உருண்டையாய் வனைந்து
பிரபஞ்சத்தில் பம்பரம் விட்டாள்.
சூரியனை தேரினால் இறக்கி
பிரபஞ்சத்தின் அச்சாய் நிறுத்தினாள்.
பின்னர் கல்லூரியிலோ
ஆசிரியர்கள் பிரபஞ்சத்துள்
கோடிகோடி சூரியன் வைத்தார்.

இப்படியாக என்
பாட்டியின் மானச உலகில்
வாழ்வு மனசிலாகியது.
கற்ற உலகிலோ எனது அறிவு
கவசம் பூண்டு ஆயுதம் தரித்தது.
இந்த இருவேறு உலகும்
என் இருப்பு நதியின்
எதிர் புதிர்க் கரைகள்.

நதியின் அக் கரையோ
முன்பொரு காலத்தில்
அங்கு உண்மை பேசியதால்
ஏழை விறகு வெட்டிக்கு
பொற்கோடரியும் தருகிறாள்
வனதேவதை.
இக் கரையோ எதிர்காலத்தில்,
அங்கு மனிதனையே
பிரதிமை செய்கிறார்கள் விஞ்ஞானியர்கள்.

காற்றரனாய்
தீபத்தில் கூப்பிய கரம்போல்,
அலைப்புறும் என்மீது
நம்பிக்கைகளும் விஞ்ஞானங்களூம்.

*******************************
வாழ்வின் கவிதை:

நீர்க்கரையின் கோரையிடை பாம்பின் கண்கள்.
புல்பூத்த தட்டானில் மயங்கும் தவளை.
துருதுருத்து மோந்தபடி கீரிப்பிள்ளை.
பசுமை இனிக்க மான் கிழை
வரும் தடத்தில் விரிகிறது மனிதன் கண்ணி.
அச்சத்தில் சாகாதவை வாழ்கிறது
இக்கணம்.
என்றும்போல் மருதமரம் செழிக்க ஊட்டியும்
வேர் அறுத்தும் நகர்கிறது பாலி ஆறு.

டைட்டானிக் கனவு மனிதா
உன் விஞ்ஞான வரைபடத்தில்
ஏது மிதக்கும் பனிப்பாறை.
எனினும் உன்னால் இயலுமே
முழ்கையிலும் வயலின் மீட்டி
சாவையும் வாழ்தல்.
ஞான் அறியும்
நஞ்சு பருக விதித்த பின்னும்
வாழ்ந்த ஒரு கிரேக்கத்து மனிதன் காதை.

இலக்கமில்லா வாகனம் ஊரும்
எதிரிகளின் துப்பாக்கி சுட்டும் போதும்
நண்பரது கொலைக்கரத்தால் விலங்கு பூண்டு
நாள் நேரம் காத்திருந்த வேளையிலும்
வாழும் ஆசை புதுவெள்ளமாய் பெருக
ஜீவநதியாய் இருந்தேன் என்பதன்றி
பெருங்கவிதை
என் வாழ்வில் வேறு ஏது.

கையில் கறையாக
பெண்கள் சிலரது கண்ணீர் மட்டுமே
மனிதம் இழிந்து ஆண்மையாவதில்
பெருமைப்பட்ட
என் கவிதை சாயம்போன
அந்த நாட்களை வெறுக்கிறேன்.
ஆணை/பெண்ணை தாண்டி
மனிதம் அடைதலே விடுதலை.
கைகொடுக்கிற தோழி/தோழரால்
மீட்கப்படுகிறதே பாக்கியம்.

மோசமான கவிதைகள் எழுதியுள்ளேன்
ஆனால் எப்போதும் வாழ்ந்தேன்
நல்ல கவிதையாய்.
போர்க்களம் என்மீது இறங்கியபோதும்
சிங்களத்து தோழரை தோழியரை
முஸ்லிம் சகோதரரை சகோதரியைக் கேளுங்கள்.
எப்பொழுதும் மனிதனாகவே முயன்றேன்
அதுவே நான் எழுதிய நல்ல கவிதை.

தலை பணியாது
வாழும் ஆசையை இறுகப் பற்றுதலே
எனது கவிதை.

*********************************
இல்லறம்:

ஆற்றங்கரையில்
இன்னமும் தோற்றுப் போகாத மரம் நன்.

இன்று தெளிந்து போய்
புல்லும் சிலம்பாமல் நடக்கிறது காட்டாறு.
விடியலில் இருந்தே ஒளியைக் கசக்கி
ஹோலிப் பண்டிகைக் குறும்போடு
வண்ணங்கள் வீசி
தொட்டு தொட்டுச் செல்கிறது அது
நேற்று வெறி கொண்டாடியது தானல்ல என்பதுபோல.

எனது கன்றுகள்
முளைத்தெழுகிற நாள்வரையேனும்
கைவிட்டகலும் வேர்மண் பற்றி
பிழைத்திருக்கிற போராட்டத்தில்
நேற்று அடைந்த விரக்தியை மறந்தேன்
அது நானல்ல என்பது போல.

நேற்றைய துன்பமும் உண்மை.
நாளைய பயமோ அதனினும் உண்மை
எனினும் இன்றில் மொட்டவிழ்கிறதே வாழ்வு
சிறகசைக்கிறதே வண்ணத்துப் பூச்சிகள்
துள்ளி மகிழுதே பொன்மீன்கள்

நமது அன்றாட மறதிக்குப் பரிசுதானே
இந்த நட்பும் வாழ்வும்.

நன்றி: வ.ஐ.ச.ஜெயபாலன் கவிதைகள் (பெருந்தொகை) - வ.ஐ.ச.ஜெயபாலன் - ஸ்நேகா வெளியீடு, சென்னை - 14 - விலை ரூபாய் 150.

Thanks: http://tamil-lit.blogdrive.com


'திருமண' பாடல்கள்

1. 'Aanandham aanandham aanandhamE' :
Usually sung immediately ater 'ketti mELam' ! ( after the knot is tied)

ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே

ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே
பரமானந்தம் ஆனந்தம் ஆனந்தமே

ஸ்ரீ ராமனும் மணமகன் ஆனாரே
நம்ம ஜானகி மணமகள் ஆனாளே
வந்தவர்க்கும் பார்த்தவர்க்கும் ஆனந்தம்
சீதைக்கும் ராமனுக்கும் ஆனந்தம்
நாம் செய்த பூஜா பலமும்
இன்று பலித்ததம்மா - ஆனந்தம்

2. 'Gowri kalyaana vaibOgamE' :
Generic all-purpose song, usually sung at the time of 'aarathi'.

கெளரி கல்யாண வைபோகமே


விருத்தம்
-----------
க்ஷேமங்கள் கோரி வினாயகனைத் துதித்து
ஷங்கரனையும் கெளரியையும் வர்ணித்து
ஸ்ரீராமனையும் ஜானகியையும் வர்ணித்து

பல்லவி
--------
கெளரி கல்யாண வைபோகமே
லக்ஷ்மி கல்யாண வைபோகமே (2)

சரணம்
--------
வசுதேவ தவ பாலா
அசுர குல காலா
சசிவதன ரூபிணி
சத்யபாம லோலா - கெளரி கல்யாண

கொத்தோட வாழை மரம்
கொண்டு வந்து நிறுத்தி
கோப்புடைய பந்தலுக்கு
மேல் கட்டு கட்டி - கெளரி கல்யாண

3. 'Maalai saarthinaaL' :
On the day of the marriage, the bride and the groom sit on the shoulders of their uncles and exchange garlands. This song is appropriate for that time (but there will be so much excitement and commotion at that time, nobody would listen to you even if you sing :-) This event brings out the best laughter out of all events of marriage.

மாலை சார்த்தினாள்

மாலை சார்த்தினாள் கோதை
மாலை மாற்றினாள்
மாலடைந்து மதிலரங்கன்
மாலை அவர்தன் மார்பிலே

மையலாய் தையலாள்
மாமலர் கரத்தினால் - மாலை சார்த்தினாள்

ரங்கராஜனை அன்பர் தங்கள் நேசனை
ஆசை கூறி பூசுரர்கள்
பேசி மிக்க வாழ்த்திட
அன்புடன் இன்பமாய்
ஆண்டாள் கரத்தினால்

மாலை சார்த்தினாள் கோதை
மாலை மாற்றினாள், பூ - மாலை சார்த்தினாள்

4. Here are a set of 'oonjal' (swing) songs.

4.1 'kannoonjal'
கன்னூஞ்சல்

கன்னூஞ்சல் ஆடி இருந்தாள்
மனமகிழ்ந்தாள்
கன்னூஞ்சல் ஆடி இருந்தாள்
காஞ்சன மாலை மனமகிழ்ந்தாள்
கன்னூஞ்சல் ஆடி இருந்தாள்

பொன்னூஞ்சலில் பூரித்து பூஷனங்கள் தரித்து
ஈஸ்வரனாரிடத்தில் ஆசைகள் ரொம்ப வைத்து
கன்னூஞ்சல் ஆடி இருந்தாள் ...

உத்த பெற்ற குமாரி நித்ய சர்வாலங்காரி
பக்தர்கள் பாப சமாரி பத்ம முக ஒய்யாரி
கன்னூஞ்சல் ஆடி இருந்தாள் ...

அசைந்து சங்கிலியாடி உசந்து ஊர்வசி பாட
இசைந்து தாளங்கள் போட மீனாக்ஷி பரியாள் கொண்டாட

கன்னூஞ்சல் ஆடி இருந்தாள்
காஞ்சன மாலை மனமகிழ்ந்தாள் - கன்னூஞ்சல்

4.2 'ratha oonjal' - another oonjal song

ரத்ன ஊஞ்சல்

ரத்ன ஊஞ்சலில் ஆடினாள் பத்மாசுதனை பாடினாள்
முத்து சரங்கள் குலுங்கிட ரத்ன மாலை அசைந்திட
சுற்றிலும் சகிகள் விளங்கிட மெத்தவும் மதுராம்பிகே - ரத்ன

மதிமுகம் மந்தகாசமாய் மன்னனிடத்தில் நேசமாய்
பாஸ்கரன் புகழ் ப்ரகாசமாய் பரதேவதை உல்லாசமாய் - ரத்ன

4.3 'Aadir oonjal' - another oonjal song
ஆடிர் ஊஞ்சல்


விந்தை நிறை செம்பவள கால்கள் நாட்டி
விளங்கும் உயர் மரகதத்தால் கொடுங்கைப் பூட்டி
அந்தமுள்ள நவரத்ன ஊஞ்சல் மீதே
அபிமனுடன் வத்சலையும் ஆடிர் ஊஞ்சல்
ஆடிர் ஊஞ்சல்

இந்திரையும் சசியும் ஒரு வடம் தொட்டாட்ட
சந்த்ரசேகரனும் உமையும் ஒருவடம் தொட்டாட்ட
தும்புரு நாரதரும் வீணை மீட்ட
ஸ்ரீரங்க நாதருடன் ஆடிர் ஊஞ்சல்
ஆடிர் ஊஞ்சல்

4.4 'laali' - another oonjal song

லாலி


தந்தி முகனுக்கிளைய கந்தனுக்கும் லாலி
சதுர் மறை மூலனுக்கும் மேயனுக்கும் லாலி

ஆடிபூர துதித்த ஆண்டாள் நம் கோதை
அணியரங்கருடன் ஊஞ்சல் ஆடினாள் இப்போதே
லாலி...

பாலாலே கால் அலம்பி பட்டாலே துடைத்து
மணி தேங்காய் கையில் கொடுத்து
மஞ்சள் நீர் சுழற்று
லாலி...



--------------------------------------------------------------------------------

--------------------------------------------------------------------------------

5. Here are some 'nalangu' songs...
5.1 nalangkita vaarum raajaa
நலங்கிட வாரும் ராஜா

நலங்கிட வாரும் ராஜா நாணயம் உள்ள துரையே
முத்திழைத்த பந்தலிலே ரத்ன கோபமாட்டிருக்கு
வந்த ஜனம் காத்திருக்க வாரும் அய்யா நலங்கிடவே - நலங்கிட

பட்டு ஜாம காளமெத்தை பந்தலிலே விரித்திருக்கு
நாலு விதவாத்யங்களும் நாகரிகமாய் ஒலிக்க - நலங்கிட

எந்த ஊரு எந்த தேசம் எங்கிருந்து இங்கு வந்தீர்
மோகன புரம் தனிலே மோகினியைக் காண வந்தேன் - நலங்கிட

5.2 'nalangidugiraaL meenalocahni' - another nalangu song !

நலங்கிடுகிறாள் மீனலோசனி

நலங்கிடுகிறாள் மீனலோசனி
நாதருடன் கூடி
நலங்கிடுகிறாள் மீனலோசனி

நாரதரும் வந்து கானங்களை பாட
நானாவித தாளங்கள் போட - நலங்கிடுகிறாள்

சொர்ண தாம்பாளத்தை ஜோதியால் எடுத்து
சுந்தரேசர் கையில் கொடுத்து
பூபதி பாதத்தில் விழுந்து
புஷ்ப மாலைகளை அன்புடன் சார்த்தி - நலங்கிடுகிறாள்

சொர்ண பன்னீர் சொம்பை ஜோதியால் எடுத்தாள்
சுந்தரேசர் மேலே தெளித்தாள்
வாசனை கந்தம் பரிமளம் பூசினாள்
வணங்கி சாமரம் வீசினாள் - நலங்கிடுகிறாள்

6. This one is a 'kalyaana samayal saadham' kind of paattu.
'bOjanam seyya vaarungO' :

போஜனம் செய்ய வாருங்கோ

போஜனம் செய்ய வாருங்கோ ராஜ
போஜனம் செய்ய வாருங்கோ

மீனாக்ஷி சுந்த்ரேச கல்யாண மண்டபத்தில்
போஜனம் செய்ய வாருங்கோ

சித்ரமான நவ சித்ரமான்
கல்யாண மண்டபத்தில்
வித விதமாகவே வாழைகள் கட்டி
வெட்டி வேர் கொழுந்து தோரணங்களும்
மாட்டிய கூடமும் பவள ஸ்தம்பமும்
பச்சை மரகதங்கள் தளகதி செய்களும்
முத்து முத்தாகவே நுனி வாழைகளும்
பசும்பொன்னால் செய்த பஞ்ச பாத்ரங்களும்
பன்னீர் ஜலத்துடன் உத்திரணியுமே
முத்து முத்தாகவே முன்னே தெளிக்க - போஜனம்

மும்மூர்த்தி சகல தேவர்களும் கூட
அன்னம்பார்வதி ஆதிபராசக்தி
அருந்ததி இந்த்ராணி அகல்யா கெளசல்யா
த்ரெளபதி சீதா தாரா மண்டோதரி
இந்திரதேவி ரம்பை திலோத்தமை
கந்தர்வ பத்தினி கின்னர தேவி
அஷ்டதிக் பாலர்கள் பார்யாளுடனே
சத்வ மஹாமுனி ரிஷிபத்னிகளும்
பந்தடித்தாற் போல் பட்டுகள் கட்டி
கெஜ்ஜை மெட்டுகள் கல்லு கல்லுவென
பசும்பொன் தட்டிலே பாயசங்கள் எடுத்து
பரிந்து பரிந்து பரிமாரிட வந்தார் - போஜனம்

7. Here are two general purpose songs...
7.1 'Sri raamaa jeya jeya'

ஸ்ரீராமா ஜெய ஜெய


ஸ்ரீராமா ஜெய ஜெய
சீதம்மா மனோகர
காருண்ய ஜலதே
கருணாநிதே ஜெய ஜெய

தில்லையில் வனம் தனிலே
ராமர் வந்த நாளையிலே
ராமரோட சேனையெல்லாம்
ராமரை கொண்டாட

சங்கு சக்ரம் தரித்து கொண்டு
தனுசைக் கையில் பிடித்துக் கொண்டு
கோதண்டம் தனைப் பிடித்து ராமர்
கோலாகலமாய் இருந்தார்

ஜனகரோட மனையில் வந்து
சீதையுடைய வில்லை முறித்து
ஜானகியை மாலையிட்டார்
ஜனகர் அரண்மனைதனிலே

ஸ்ரீராமா ஜெய ஜெய
சீதம்மா மனோகர
காருண்ய ஜலதே
கருணாநிதே ஜெய ஜெய

7.2 'manmadhanukku maalai ittaayE'
மன்மதனுக்கு மாலையிட்டாயே

மன்மதனுக்கு மாலையிட்டாயே
மாதே மன்மதனுக்கு மாலையிட்டாயே
அடி மாதே மன்மதனுக்கு மாலையிட்டாயே
ஜன்மம் அதில் சுகித்து நீராடி - மன்மதனுக்கு

மன்மதனுக்கு மாலையிட்டு
மாலைதனை கைபிடித்து
கனகநோன்பு நோற்றதுபோல்
கிடைத்தது பாக்யமடி - மன்மதனுக்கு

செந்தாழை ஓடையிலே
மந்தாரை பூத்ததுபோல்
இந்திரனோ சந்திரனோ
சுந்தரனோ இவர்தானடி - மன்மதனுக்கு
----------------------------------------------------
நன்றி;
http://sapthaswaras.blogspot.com

கடல் அலைகள் - புகைப்படங்கள்

From Fwd mail
_________________________________

These incredible images of waves were taken by the number 1 photographer of surf: Clark Little. He has dedicated his life to photographing the waves and has published a selection of the best images of his career. He captures magical moments inside the "tube", as surfers say.



cid:image001.jpg@01C9C59D.122790D0


Sun ... glints off wave
Clark Little/SWNS





cid:image002.jpg@01C9C59D.122790D0


Sand ... in surf
Clark Little/SWNS





cid:image003.jpg@01C9C59D.122790D0


Tubular ... shining
Clark Little/SWNS





cid:image004.jpg@01C9C59D.122790D0


Beach ... surf crashes down
Clark Little/SWNS





cid:image005.jpg@01C9C59D.122790D0


Molten ... liquid gold
Clark Little/SWNS





cid:image006.jpg@01C9C59D.122790D0


White ... tumultuous water





cid:image007.jpg@01C9C59D.122790D0


Splash ... stunning shot
Clark Little/SWNS





cid:image008.jpg@01C9C59D.122790D0


Red ... mysterious shot
Clark Little/SWNS





cid:image009.jpg@01C9C59D.122790D0


Break ... wave crashes down
Clark Little/SWNS





cid:image010.jpg@01C9C59D.122790D0







கிருஷ்ணர் கோவில் ஹம்பி

alt


alt

சொந்த மண்ணில் சிங்கமாக. . .


நன்றி; குங்குமம்
படத்தைப் பெரிதாக்கி பார்க்க அதன் மிது கிளிக் செய்யவும்

வாசலில் ஸ்டிக்கர் கோலம் ஒட்டலாமா?

வாசலில் ஸ்டிக்கர் கோலம் ஒட்டலாமா? - பதில் சொல்கிறார் சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

சக்தி விகடன் மே 09,2009,
_______________________________________
திருவிளக்கில் மீதமாகும் எண்ணெயை, மீண்டும் விளக்கேற்ற பயன்படுத்தலாமா? - பி.இந்திராணி, சென்னை.


இயற்கை அளித்த பொருட்களை வீணாக்குவது தவறு. இவற்றை உரிய முறையில் பயன்படுத்துவதே சரி! எண்ணெய்க்கு பர்யுஷாதம் (பயன்படுத்திய மாசு) கிடையாது. எனவே, அதை திரும்பவும் பயன்படுத்தலாம். முதல் நாள் எண்ணெயில் பொரித்த வளுவல்களை மறுநாள் பயன்படுத்துவது உண்டு. இழந்திருந்தால் மாற்றி விட வேண்டும்.


அபார்ட்மென்ட்களில் வசிக்கும் சிலர், வீட்டு வாசலில் ஸ்டிக்கர் கோலம் ஒட்டியுள்ளனரே, இது சரியா? - மீனா ரெங்கநாதன், சென்னை-33.


பழைய ஒண்டிக்குடித்தனமே தற்போது அபார்ட்மென்ட் கலாசாரமாகியிருக்கிறது. ஒண்டிக்குடித்தனத்தில் மெய்ன்டனன்ஸ் பணம் கட்ட வேண்டாம். அபார்ட்மென்ட் வாசிகளை பொறுத்த வரையில் சுவர்கள் கூட அவர்களுக்கு சொந்தம் கிடையாது. அறைகளில் இருக்கும் இடைவெளி (ஆகாசம்) மட்டுமே சொந்தம்.


பண்பு, பழைமை, பெருமை ஆகியவற்றின் அடையாளமான தனி வீட்டில் வசிக்கும் வாய்ப்பை இழந்த பிறகு, வாசலில் உள்ள கோலத்தை மட்டும் பிடித்து கொண்டிருப்பதில் அர்த்தம் இல்லை. தாராளமாக ஸ்டிக்கர் கோலத்தை பயன்படுத்தலாம். நெற்றிக்குஸ்டிக்கர் பொட்டை பயன்படுத்தும் நமக்கு, ஸ்டிக்கர் கோலத்தை பயன்படுத்துவதில் மன நெருடல் ஏன்? தேடையே இல்லை. இதெல்லாம் சாஸ்திரத்துக்கு உட்படாத விஷயம் தான். எனினும் தன்னிச்சையாக செயல்படலாம்.


நோய்களும், துன்பங்களும் விலக மந்திரம் ஜபிப்பதும், ஹோமங்கள் செய்வதும் வழக்கம். ஆனால், இவற்றை கடைப்பிடிக்க இயலாதவர்கள் என்ன செய்வது? - ஜி.ஜெயராமன், கூந்தலூர்


முற்பிறவியின் கர்மவினைகள், இந்த பிறவியில் நோயாக மாறி துயரம் தர வாய்ப்பு உண்டு. இந்த துன்பம் நீங்குவதற்கு மருந்து, கொடை, ஜபம், ஹோமம் மற்றும் அர்ச்சனை ஆகிய உதவும் என்கிறது கர்ம விபாகம் எனும் நூல். மருந்துக்கு கட்டுப்படாத சில பிணிகளுக்கு முன்ஜன்ம வினைகளே காரணம் என்கிறது ஆயுர்வேதம் (பாபம் கர்மசகுர்வதாம்...) முற்பிறவி வினைகள், நோயாக உடலில் பற்றி கொள்ளும் என்கிறது வேதம் (அங்கே அங்கே வை புருஷஸ்ய..)


வழிபாடுகள் செய்ய முடியாத அளவுக்கு உடலில் நலிவுற்று இருந்தால், இறைவன் நாமத்தை மற்றொருவர் மந்திரம் சொல்லலாம். அதே நேரம்... பொருளாதார சூழலை காரணம் காட்டி வழிபாடுகளை தவிர்ப்பது சரியல்ல.


எண்ணெய் தேய்த்து குளிக்கும் நாளில், அகத்தி கீரை சாப்பிடக்கூடாது என்றும், சமைப்பதற்கு முதல் நாளே இந்த கீரையை வாங்கி வைக்க கூடாது என்றும் கூறுகிறார் என் பாட்டி. இது குறித்து சாஸ்திரம் என்ன கூறுகிறது?


- பி.இந்திராணி, சென்னை.


செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பெண்களும் புதன் மற்றும் சனிக்கிழமைகளில் ஆண்களும் எண்ணெய் தேய்த்து குளிப்பார்கள். இந்த நாட்களில் உடல் உறுப்புகள் சற்று அசதியை சந்திக்கும். அப்போது, அகத்தி கீரை முதலானவை உடல் நலனுக்கு ஏற்புடையதாக இருக்காது. எனவே இது போன்ற நாட்களில் அகத்தி கீரையை தவிர்க்க சொல்கிறது ஆயுர்வேதம்.


தவிர... கிழமைகள், கிரகங்களின் பெயரில் அமைந்திருக்கின்றன. அந்தந்த கிழமைகளில் அந்தந்த கிரகங்களின் தன்மை புலப்படும். ஆராயாமல் எதிர்ப்பது செவ்வாயின் இயல்பு. உறங்கி கிடக்கும் ஆசையை தூண்டுவது வெள்ளியின் இயல்பு. சுணக்கமுறுவது சனியின் தன்மை. உணவுகளின் மூலம் இவற்றின் தன்மைகள் மேலும் தூண்டப்படாலம். இதை தவிர்க்க குறிப்பிட்ட நாட்களில் கீரையை தவிர்க்கலாம். இது ஜோதிடத்தின் அறிவுரை. உங்கள் பாட்டி சொல்வதிலும் பொருள் இருக்கிறது.



என் கணவர் இறந்து விட்டார். குழந்தை இல்லாததால், என் சகோதரரின் மகனே இறுதி காரியங்கள் செய்ததுடன், திதியும்� காடுத்து வருகிறான். ஒரு வேளை... திதி கொடுப்பதை அவன் நிறுத்தி விட்டால், நான் என்ன செய்வது? (என் கணவர் உயிருடன் இருக்குமு“போதேகயை சென்று ஆத்ம பிண்டம் போட்டுள்ளார்)

-எம்.சரோஜா, திருப்பாலை.


உங்கள் சகோதரரின் மகன் திதி கொடுப்பதை நிறுத்திவிட்டால்,தாங்களே திதி கொடுக்கலாம். இறுதி சடங்கை சகோதரரின் மகன் செய்திருந்தாலும், வருடம் தோறும் கணவரின் நினைவு நாளின் நீங்கள் திதி கொடுப்பது சிறப்பு. அவர் தொடருவானா? நிறுத்தி விடுவானா என்ற சிந்தனை தேவையற்றது. அதேபோல், உங்கள் கணவர் கயையில் தனக்காக ஆத்ம பிண்டம் போட்டு கொண்டு விட்டார் என்பதை ஆராய்வதும் வீண். திதி கொடுப்பதுடன் அன்று அன்னதானமும் செய்யுங்கள். குழந்தை இல்லாத நிலையில் தாங்கள் உங்கள் கணவரது நினைவு நாளின் அன்னதானம் செய்வது சிறப்பு.



உறவினர்கள் இறந்து விட்டால் ஒரு வருடத்துக்கு மலைக்கோயில் மற்றும் கொடிமரம் உள்ள கோயிலுக்கு செல்லக்கூடாது. குலத்தெய்வம் கோயிலுக்கு செல்லலாம் என்கிறார்கள். ஏன் இப்படி?


ஈமச்சடங்கில் நேரடித் தொடர்பு கொண்டவர்கள் ஒரு வருடம் வரை கோயிலுக்கு செல்வதில்லை. இறந்த பெற்றோர்களின் நினைவு மற்ற அலுவல்களால் தடைப்பட்டு விடும்என்பதால் இதனை தவிர்த்தனர். பெற்றோர்அல்லாத உறவுகள் இறந்தால், கோயிலுக்கு செல்ல தடையேதும் இல்லை. வழிபடுவதற்காக கோயிலுக்கு செல்லலாம். அதே நேரம் நேர்த்திக்கடன் மற்றும் சிறப்பு பூஜை ஆகியவற்றுக்காக கோயிலுக்கு செல்வது சரியில்லை. �க்ஷத்ராடம் மற்றும் விசேஷ பூஜைகளை ஓராண்டு நிறைவுற்றதும் செய்யலாம். துக்கத்துடன் செய்ய வேண்டிய கட்டாயமில்லையே...? இறந்தவரது துக்கம் ஒரு வருட காலம் இருப்பதால் அந்த வருஷத்தில் நீங்கள் கோயிலுக்கு சென்றதாகவே எடுத்துக்கொள்கிறது சாஸ்திரம்.


அரசியல் தலைவர்கள், மறைந்ததும் ஏறு நாட்கள் வரை அலுவல்களை தள்ளி ��படுகிறோம். இறந்த நாளுக்கு விடுமுறை அளிப்பதும் உண்டு. ஆக எந்த சம்பந்தமும் இல்லாதவர்கள் இறந்து போனதற்காக துக்கம் கொண்டாடுகிற போது, நம் பிறப்புக்கு ஆதாரமான பெற்றோர் இறந்து விட. ஒரு வருடத்துக்கு துக்கம் மேற்கொள்வதில் தவறில்லையே? பெற்றோரின் நினைவில் மூழ்கிய மனம், பிற விஷயங்களில் அக்கறையுடன் ஈடுபடாது. ஆகவே கோயில் ஆராதனையைஅந்த ஆண்டு தவிர்ப்பதே மரபு.


இறந்தவரின் இறுதிச்சடங்கினை ஓராண்டுபூர்த்தியாகும் நாளில் தான் செய்ய வேண்டும். ஆண்டின் முடிவில் வருகிற சிராத்தம் தான் இறுதிசடங்கு (ஆனால் 12ம் நாளிலேயே பலகாரங்களை வைத்து இறுதிச்சடங்கு செய்வதற்கு பரிந்துரைத்தது தர்மசாஸ்திரம்) எனவே ஓராண்டு வரை தீ�க்ஷ வேண்டும் என்பர்.


அம்மன் கோயில்களில் பெண்கள் சிலர் திடீரென சாமி வந்து ஆடுகின்றனரே ஏன்?


- தி.க.வேல்முருகன், திட்டக்குடி.


பாட்டு, அத்துடன் இணைந்த பக்கவாத்திய ஒலி ஆகியவை காதில் விழும்போது மனம் சற்று நிலை தடுமாறும். ரயில்வண்டி எழுப்பும் ஒலி, அருகில் இருக்கும் பொருட்களில் அதிர்வை ஏற்படுத்துவது போல, வாத்தியங்களின் ஓசை மனதை பாதிப்பது உண்டு. இதை மனதின் பலவீனமாக கருதுகிறது ஆயுர்வேதம். மனோதிடம் இருப்பவரிடம் எந்த பாதிப்பும் இருக்காது.



அன்னபூரணி வைத்து வழிபடுவதற்கு பயன்படுத்திய அரிசியை என்ன செய்வது? -எஸ்.சுந்தர், திருநெல்வேலி.


அன்னபூரணி வழிப்பாட்டில் தினம் தினம் புது அரிசியை பயன்படுத்தவேண்டும். முதல் நாள் உபயோகித்த அரிசியை மறுநாள் உணவுக்கு பயன்படுத்தலாம். அன்னபூரணியைகுடியிருத்திய அரிசி என்பதால் அதற்கு தனிச்சிறப்பு உண்டு. இதை உணவாக உட்கொள்ளும்போது மன நிறைவு ஏற்படும். அன்னமே ஆண்டவன் என்கிறது வேதம் (அன்னம் பிரம்மேதி...) பசியாற்றுகிற அரிசியை அலட்சியப்படுத்த கூடாது.


ஸ்ரீருத்ரம் முதலானவேத ஸ்லோகங்கள் அடங்கிய சி.டி.க்களை எல்லா நாளிலும் வீட்டில் ஒலிக்க விட்டு கேட்கலாமா? அல்லது விசேஷ நாளில் மட்டுமே கேட்க வேண்டுமா?


-என்.காயத்ரி


சி.டி.க்கள் மூலம் வேத ஸ்லோகங்களை ஒலிக்க செய்வதிலும் கேட்பதிலும் தர்மசாஸ்திரத்துக்கு உடன்பாடு இல்லை. புனிதமான ஸ்லோகங்கள், நம் வாய்மொழியாக.... வேத கோஷமாக வெளி வர வேண்டும். தேசிய கீதம் இசைக்கப்படும் போது... எந்த வேலையில் ஈடுபட்டிருந்தாலும் அதிலிருந்து விடுபட்டு நம் மனம் தேசிய கீததத்தில் ஒன்றிவிடும். காரணம், உயிரினும் மேலாக தேசிய கீதத்தை நாம் மதிக்கிறோம். அதுபால, எழுதாக கிளவியாகிய வேதத்தின் ஸ்லோகங்களை உச்சரிக்கும்போது எத்தனை எழுத்துக்கள் வெளிபடுகின்றனவோ, அத்தனை முறை பரம்பொருளின் திருநாமத்தை (ஹரி நாமத்தை) சொன்ன பலன் கிடைக்கும் என்கிறது தர்ம சாஸ்திரம்.

சங்கீத கச்சேரி, கால�க்ஷபம் மற்றும் திரைப்பாடல்கள் முதலானவற்றை டேப் ரெக்கார்டர் அல்லது சி.டி. பிளேயரில் ஒலிக்க விட்டு, அவற்றை கேட்டுக்கொண்டே வேலையில் ஈடுபடுவது உண்டு. ஆனால், வேத ஸ்லோகங்களை கேட்பதில் இந்த அணுகுமுறை கூடாது. வேதம் கற்பதற்கும், வேத ஸ்லோகங்களை உச்சரிப்பதற்கும் கடும் கட்டுப்பாடுகளை வேதமே விதித்திருக்கிறது. இதை கடை சரக்காக மாற்றுவதில் தர்மசாஸ்திரத்துக்கு உடன்பாடில்லை.


அதே நேரம்.... தங்களின் ஆதங்கமும் புரிகிறது. வேதம் கற்க இயலவில்லை. வேதம் ஓதுவோரை அழைத்து வேதம் ஓடச் செய்து கேட்கலாம் எனில்... அதற்கு பொருளாதார சூழல் இடம் தரவில்லை. ஆகவே, ஸ்லோகங்களை சி.டி.க்கள் மூலம் கேட்க ஆசைப்படுகிறீர்கள். உங்களின் ஆர்வம். விஞ்ஞானத்தின்உதவியால் வேதம் கேட்கும் வாய்ப்பை பயன்படுத்துவதில் தவறில்லை என்பதாக எண்ணி இப்படி செய்லபடவைக்கிறது. தங்களின் ஆர்வத்தை பொருட்டு, இறைவனின் திருநாமங்கள் அடங்கிய சி.டி.க்களை பயன்படுத்துங்கள். பயன் உண்டு.






தூக்கம் வராதது ஏன்? - உ.அறவாழி

சில சமயங்களில் சிலரின் உயிரியல் கடிகாரம் சரிவர இயங்க முடியாமல் பழுதடைந்து விடுகிறது. அதுபோன்ற சந்தர்ப்பங்களில், அவர்கள் என்னதான் அசதியுடன் படுத்தாலும் உறங்க முடியாமல் போய்விடுகிறது. அப்போது அவர்கள் மனதில் நினைவலைகள் மீண்டும் மீண்டும் எழுந்து அவர்களின் மனக்கண் முன் உலவிக் கொண்டு இருக்கும். அப்படியே அவர்கள் உறங்கினாலும் சீக்கிரமே எழுந்து விடுவார்கள். அல்லது இரவில் ஆழ்ந்த உறக்கமின்றி இடையிடையே நிறையத் தடவைகள் விழித்தெழுந்து படுக்கையில் புரண்டு கொண்டிருப்பார்கள். இதனால் காலையில் எழும்போது மனச்சோர்வுடனும் அசதியுடனும், தூக்கக் கலக்கத்துடனும் காணப்படுவார்கள். இந்நிலையைப் "போதிய உறக்கம் அற்ற நிலை' என்பார்கள்.


பகலில் ஏற்படும் மனஅழுத்தமும், மனக்குழப்பமும், மனக்கலக்கமும் இரவில் உறக்கத்தில் அச்சம் கலந்த கனவுகளாக வெளிப்படும். இவர்களின் இந்த திகில் கனவுகளில் யாரோ துரத்துவது போலவும், தப்பிக்க வழியின்றித் தலைதெறிக்க ஓடுவது போலவும், விபத்து ஏற்படுவது போலவும், மோசமான சிக்கலில் சிக்கி கொள்வது போலவும் காட்சிகள் விரியும். உடல் வியர்வையில் குளித்து, திகிலில் உறைந்து நடுநடுங்கி விழிப்பார்கள்.

பணியிடத்திலோ அல்லது இல்லத்திலோ அதிக மன வேதனையில் மூழ்கியதால், அதிகமாக சிகரெட் குடித்தல், அதிகமாக காப்பி, டீ அருந்துதல், மது மற்றும் போதைப் பொருட்கள் எடுத்துக் கொள்ளுதல் மற்றும் நெடுநேரம் தொலைக்காட்சி பார்த்தல் போன்றவை தூக்கத்தில் பிரச்சனைகளை ஏற்படுத்தும். மேலும் அதிக எடை, தூக்கத்தில் வலிப்பு, பலமான குறட்டை, தூக்கத்தில் விட்டு விட்டு மூச்சுவிடுதல் போன்றவைகளும் உறக்கத்தை கெடுத்துவிடும்.

தூக்கம் வருவது எப்படி?

நாம் படுத்த உடன், உடனே ஆழ்ந்த தூக்கத்திற்குப் போய் விடுவதில்லை. கண்களை மூடியதும், தூக்கம் நம்மை கொஞ்சம் கொஞ்சமாய் தழுவுகிறது. கண்கள் செருகி, தூங்கத் துவங்கியதும், வெளிவிஷயங்கள் தெரிவதில்லை, இதுதான் நமது தூக்கத்தின் முதல்நிலை. இந்நிலையில், மூளையில் "பீட்டா' மின்னலைகள் தோன்றுகின்றன. இதன் வேகம் விநாடிக்கு 14 சைக்கிள்கள்.

மூளை இயங்கும்போது அதிலிருந்து பல்வேறு மின்னலைகள் தோன்றுகின்றன. இதை E.E.G என்ற கருவியின் மூலம் அளக்க முடியும். இக்கருவி மூளையின் செயல் பாட்டை ஒரு விநாடிக்கு இத்தனை சைக்கிள் வேகத்தில் இயங்குகிறது என்று காண்பிக்கும்.


பின்பு, சிறிது நேரத்தில் நாம் சலனமின்றி, ஆழ்ந்த உறக்கத்திற்குப் போய்விடுவோம். இந்நிலையில், கண்ணிமைகள் மூடி இருந்தாலும் நம் விழிகள் பக்கவாட்டில் உருளும்.இவ்வகை உறக்கத்தில்தான் மூளையில் "ஆல்ஃபா' என்ற மின்னலைகள் தோன்றுகின்றன. இதன் வேகம் விநாடிக்கு 7லிருந்த 14 சைக்கிள்கள். இம்மின்னலைகள் நமது உடலின் களைப்பை போக்க உதவுகிறது; உள்ளம் புத்துணர்ச்சி பெற பயன்படுகிறது. ஒருவனை "அறிதுயிலில்' (Hypnotism) ஆழ்த்தும் போது அவன் மூளையில் "ஆல்ஃபா' மின்னலைகள் உற்பத்தியாகின்றன.

அதேபோல் ஒருவன் தியானத்தில் ஈடுபடும் பொழுது அவனது மூளையில் "ஆல்ஃபா' மின்னலைகள் உற்பத்தியாகின்றன. இந்த இரண்டாம் நிலைத் தூக்கத்தில்தான் கனவுகள் ஏற்படுகின்றன.பின் நாம் தூக்கத்தின் மூன்றாம் நிலைக்குச் செல்கிறோம். இந்த மூன்றாம் நிலைத் தூக்கத்திலும் கூட நமது விழிகள் இலேசாக உருளும். இவ்வகை உறக்கத்தின்போது மூளையில் "தீட்டா' மின்னலைகள் தோன்றுகின்றன. இதன் வேகம் விநாடிக்கு 4 முதல் 7 சைக்கிள்கள் வரை. இந்நிலையில் நீங்கள் சற்று ஆழ்ந்து உறங்குவீர்கள்.

இந்த மூன்று நிலைகளைக் கடந்த பின், உறக்கம் மிக மிக ஆழமாக ஏற்படுகிறது. இந்த மிக ஆழ்நிலை உறக்கத்தில்தான் மூளையில் "டெல்ட்டா' என்ற மின்னலைகள் தோன்றுகின்றன. இம்மின்னலையின் வேகம் விநாடிக்கு 1 முதல் 4 சைக்கிள்கள் வரை ஆகும். இம்மின் அலைதான் நமது மூளையை என்றும் இளமையாகச் செயல்பட வைக்கிறது. இந்நிலையைத் தவிர, நமது மூளை உணர்வற்றுவிடுகிற, " உணர்வற்ற நிலை' (COMA) என்ற நிலையும் உள்ளது. இந்நிலையில், நமது மூளையில் எவ்வித மின் அலையும் தோன்று வதில்லை. இந்நிலையில் மூளையின் செயல்பாடு வெறும் சைபர் (Zero) தான்!
நன்றி; மஞ்சரி இதழ் 4-1-09

நீ மட்டும் எப்படி! (சிறுகதை)

splarticles image

பழுத்த அந்த கொய்யா மரத்தை அன்பு அணிலுக்கு
ரொம்ப பிடிக்கும். பழுத்து, தித்திக்கும் அந்த கொய்யா
பழ மரத்தில் அணில் மரக் கிளைகளில் தாவி விளையாடிக்
கொண்டிருந்தது. மிகவும் மகிழ்ச்சியுடன் இருந்தது.

அணில் மரங்களில் கனிந்துள்ள பழங்களைச் சாப்பிட்டது.
பிறகு கிளைகளில் தாவி விளையாடியது. மரத்தினடியில்
நிழலுக்காக ஓநாய் ஒன்று படுத்திருந்தது. அது மேலே
அணிலின் விளையாட்டினை பார்த்துக் கொண்டு இருந்தது.

திடீரென அணில், கிளைக்குத் தாவும் பொழுது, நழுவி
கீழே விழுந்துவிட்டது. ஓநாய் மடியில் விழுந்தது அணில்.
உடனே ஓநாய் அதை பிடித்துக் கொண்டது.
தம்மை விடும்படி அணில் மன்றாடிக் கெஞ்சியது.

ஓநாயும், ""சரி உன்னை விட்டு விடுகிறேன். என்
கேள்விக்கு நீ சரியான பதில் தர வேண்டும்,'' என்றது.

""சரி கேளுங்கள். தெரிந்ததைக் கூறுகிறேன்.''

""உன்னை விட நான் பெரிய ஆள், பலசாலிதானே!''

""ஆமாம் அது தான் உண்மை.''

""இப்படிப்பட்ட பலசாலியிடம் இல்லாத மகிழ்ச்சி, உன்னிடமும்,
உன் இனத்தாரிடம் மட்டுமே காணப்படுகிறதே...

""இதற்கான பதிலை என்னால் கூற முடியும். ஆனால், முதலில்
என்னை விட்டு விடுங்கள். அப்பொழுதுதான் கூறுவேன்,''
என்றதும் அணிலை, விட்டு விட்டது ஓநாய்.

அணில் தப்பித்தோம், பிழைத்தோம் என எண்ணி மரத்தில்
ஏறி ஒரு கிளையில் அமர்ந்து கொண்டு சிரித்தது.

""சரி இப்பொழுது சொல்,'' என்றது ஓநாய்.


""நீங்கள் எப்பொழுதும் யாரை கொல்லலாம் என்ற
எண்ணத்துடனே இருக்கிறீர்கள். இதனால் உங்கள்
எண்ணங்களே உங்களை வதைக்கிறது. அது உங்களை
மகிழ்ச்சியாக இருக்க விடாது.''

""நாங்கள் அப்படி அல்ல, நல்ல சிந்தனையுடன் வாழ்கிறோம்.
அதனால் எப்பொழுதும் மகிழ்ச்சியுடன் இருக்கிறோம்.
இதுதான் மறுக்க முடியாத உண்மை ஆகும்,'' என
அணில் கூறி மகிழ்ச்சியுடன் தாவிக் குதித்து ஓடியது.


நீதி : எப்பொழுதும் நல்லதையே நினைப்பவர்கள்
ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியுடனும் வாழ்கின்றனர்.
பிறருக்குத் தீங்கு செய்யும் புத்திக் கொண்டவர்கள்
மகிழ்ச்சியாக வாழ முடியாது குட்டீஸ்.
**********************************************************
நன்றி; தினமலர்(சிறுவர்மலர்)

நீ மட்டும் எப்படி! (சிறுகதை)

splarticles image

ஆறு அழகிகள் ! - Kannabiran Ravi Shankar

என்னைக் கவர்ந்த ஆறு அழகிகள் (அழகுகள்) இதோ!
இவர்கள் அறுவரும் தமிழ் அழகிகள்,
அல்லது தமிழ் சார்ந்த அழகிகள் என்பது கூடுதல் சிறப்பு!!

1.
சில பேருக்கு இளமையில் அழகு! சில பேருக்கு வயசானா அழகு! அதுவும் வயசு ஆக ஆக, இன்னும் அழகு ஜொலிக்கும்!
அழகுடன், முகத்தில் ஒரு ஐசுவரியம் மின்னும்!
அந்த அழகுடன் பணிவும் சேர்ந்து கொண்டால்?
தமிழிசையை வளர்க்க்கும் ஆவலும் முயற்சியும் சேர்ந்து கொண்டால்?
படோபடம் இல்லாமல், அலட்டல் இல்லாமல், நகைக் கடையே மேனியில் மின்னாமல்,
“விநயம்” என்ற ஒற்றைச் சொல் இவர்களுக்கு அழகு சேர்க்கிறது என்று சொல்லலாம் அல்லவா?
MS AMMA
பணிவே அழகு! – எம்.எஸ்.சுப்புலட்சுமி

2. நாட்டியம் அழகு தான், எப்போதும்!
நடை அலங்காரமும் அழகு சிங்காரமும் கண்டு ஆடாத மனமும் உண்டோ?
ஆனால் அந்த நடனத்தை வளர்க்க, அதுவும் நடனக் கலைஞர்களை மரியாதையுடன் சமூகம் நடத்த ஒருவர் வழி வகுத்தார் என்றால்?
சென்னையில் கலா ஷேத்ரா என்ற அமைப்பு நிறுவி, மெய்யாலுமே கலைப்பணி செய்வது அழகு தானே!
போதாது என்று சுதந்திரப் போரில், அவர் கணவருக்கும் உதவியாய் இருப்பதும் அழகு தானே!
நாட்டின் குடியரசுத் தலைவர் ஆகுங்களேன் என்று பிரதமர் மொரார்ஜி கேட்க, அதை அவர் மறுத்து விட்டாரே! – அம்மா, இது உங்களுக்கே அழகா? :-)
ARUNDALE
நடனம் அழகு! – ருக்மிணி தேவி அருண்டேல்

3.
உலகில் ஒரு தமிழ்ப் பெண்மணி, ஹில்லாரி கிளண்டனை விடச் சக்தி வாய்ந்தவர் என்று பட்டியல் இடப்பட்டால்?
உலகிலேயே சக்தி வாய்ந்த பெண்மணிகளில் நாலாவது இடம் தரப்பட்டால்?
அமெரிக்க அரசைப் பற்றி இவர் பேசிய பேச்சு நடுவிரல் சர்ச்சை (Middle finger Controversy) என்று ஆனது. தேசத்தை வெள்ளையர்கள் ஆண்ட காலம் போய், பல வெள்ளையர்களை ஒரு தேசிப் பெண்மணி ஆளுகிறார் என்பது மிடுக்கு அல்லவா?
சென்னையில் பிறந்த 57 வயது அழகு என்று சொல்லலாமா?
NOOYI
மிடுக்கு அழகு! – இந்திரா நூயி

4.
ராமோன் மேக்சாசே விருது ஒரு தமிழ்ப் பெண்மணிக்கு – அதுவும் நற்பணிக்கு!
சென்னையில் பிறந்து, IAS-இல் கொடி கட்டிப் பறந்து, பின்னர் சமூகப் பணிக்காக அதை ராஜினாமா செய்தால், அது அழகாகுமா?
Social Work and Research Center என்ற நிறுவனத்தில் அவர் கணவருடன் சேர்ந்து,
இந்தியக் கிராமங்களில், குறிப்பாக பெண்ணடிமை அதிகம் காணப்பட்ட ராஜஸ்தான் மாநிலத்துக்குக் குடி பெயர்ந்து, பணிகள் செய்வதற்கு என்ன பெயர்?

காதல் ஒருவனைக் கைப்பிடித்து, அவன் காரியம் யாவினும் கைகொடுத்தது பெண்ணுரிமைக்கு அழகா?
அண்மையில் வந்த தகவல் அறியும் உரிமை (Right to information) சட்டம், இவர் மூலமாக ராஜஸ்தானத்தில் வெற்றி பெற்று, பின்னரே தேசிய அளவில் பரவியது அல்லவா?
Aruna Roy
நற்பணி அழகு! – அருணா ராய்

5.
பால் வடியும் பால முகம் என்பார்கள்; ஆனால் ஒரு பாலனுக்குச் சொன்னதை, தாய்க்கும் சொல்ல முடியுமா? சொல்ல முடியும்!
முகம் பொழி கருணை போற்றி என்று முருகனைப் பற்றி வரும்.
அது அன்னை வேளாங்கண்ணிக்கும் மிகவும் பொருந்தும்! புன்னகை சற்றே தான் இழையோடும்!
மோனாலிசா புன்னகை பற்றிச் சொல்பவர்கள், இந்தப் புன்னகையைப் பார்க்கவில்லையோ என்று கூட சில சமயம் எண்ணுவேன்!
நோய்கள் தீர்க்கும் தாயின் கருணையும் ஒரு அழகு தானே!
VELANKANNI
கருணையே அழகு! – அன்னை வேளாங்கண்ணி

6.
Last but not the least என்பார்கள். தமிழில் எப்படிச் சொல்லலாம்?
ஆங்…இறுதியாக,ஆனால் உறுதியாகச் சொல்வது, யாரை என்றால்….
செந்தமிழ்ச் செல்வி, நம்ம தீஞ்சுவைக் கோதை.
தமிழைத் தான் மட்டும் பாடியது அன்றி, ஊரையே பாட வைத்தது அழகு தானே!

இவள் சூடிக் களைந்ததைத் தான் இறைவனே விரும்புகிறான் என்றால், – இவள் அக அழகு தான் என்ன!!
எல்லோரையும் மயக்குபவன் மால் என்றால், அந்த மாலையே மயக்கும் கோதை – இவள் புற அழகு தான் என்ன!!

தொங்கல் மாலை, முத்து மகுடம், பச்சைக் கிளி, இச்சை மொழி எல்லாமே அழகு தானே!
படத்தைப் பார்க்காமல், கண்களை இறுக்க மூடிக் கொள்ளுங்கள்!
ஆண்டாள் என்று வாய்விட்டுச் சொல்லிப் பாருங்கள்!
அப்போதும் அந்த அழகு தெரியும்! அழகுத் தமிழ் புரியும்!!

ANDAL AZHAGU
ஆண்டாள் – தமிழை ஆண்டாள்!
அழகே அழகு! – ஆண்டாள் அழகு!!

source:

http://madhavipanthal.wordpress.com/2007/04/15/

மொரீசியஸ் அர்த்தநாரீஸ்வரர் கோயில். . .

மதுரை:
மொரீசியஸ் நாட்டில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் கோயிலில்
சுவாமிமலை ஸ்தபதிகளால் உருவாக்கப் பட்ட ஐம்பொன்
சுவாமி சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படவுள்ளன.

மதுரை சத்யசாய் நகரில் உள்ள சாய்பாபா கோயில் நிர்வாகி
ஸ்ரீனிவாசன் நமது நிருபரிடம் கூறிய தாவது: மொரீசியஸ்
அர்த்தநாரீஸ்வரர் கோயில் சாய் பாபா பக்தர்களால்
உருவாக்கப்பட்டது.

இக்கோயிலில் ஐம்பொன் சுவாமி சிலைகள் பிரதிஷ்டை
செய்யப்படவுள்ளன. இதற்காக கும்பகோணம் சுவாமிமலை
ஸ்தபதி ராஜேந்திரன் குழுவினரால் ஐம்பொன்னால்
உருவாக்கப்பட்ட விநாயகர், வள்ளி தெய்வாணை முருகன்,
அர்த்தநாரீஸ் வரர், ராமன் லட்சுமணன் சீதாதேவி அனுமன்,
ராதா கிருஷ்ணன், விஷ்ணு துர்கா, அனுமன் சுவாமி சிலைகள்
மொரீசியஸ் கொண்டு செல்லப்படவுள்ளது.

இச்சிலைகளுக்கு சத்யசாய் நகரில் உள்ள சாய்பாபா கோயிலில்
இன்னும் இரண்டு நாட்களுக்கு (மே 11 மற்றும் 12) பூஜைகள்
நடக்கும்.ஐம்பொன் சிலைகள் தவிர கற்சிலைகள்,
துஜஸ்தம்பம் (கொடிக் கம்பம்) சுவாமிமலை ஸ்தபதிகளால்
உருவாக்கப்பட்டு வருகிறது.

அவைகள் விரைவில் மொரீசியஸ் அனுப்பி வைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

source:

http://www.dinamalar.com/tnsplnewsdetail.asp?News_id=3948

Nice "Towel"-work

Thanks: http://www.tripntale.com/pic/277/70678
Nice "Towel"-work

மலரும் வான் நிலவும். . .

படம்; மகாகவி காளிதாஸ்
பாடியவர்கள்; டி.எம்.செளந்தர்ராஜன்
பி.சுசிலா
இசை; கே.வி.மகாதேவன்
*********************************

மலரும் வான் நிலவும் சிந்தும்
அழகெல்லாம் உன் எழில் வண்ணமே
குழலும் யாழ் இசையும்
கொஞ்சும் ஒலியெல்லாம் உன் குரல் வண்ணமே

மழை இல்லாமல் வளமில்லை
ஒரு விதையில்லாமல் பயிரில்லை
உழைப்பில்லாமல் உலகில்லை
உன் உறவில்லாமல் நானில்லை

மலரும் வான் நிலவும் சிந்தும்
அழகெல்லாம் உன் எழில் வண்ணமே
குழலும் யாழ் இசையும்
கொஞ்சும் ஒலியெல்லாம் உன் குரல் வண்ணமே

கனவில் தோன்றி சிரிக்கினாய் நான்
காணும் இடமெங்கும் இருக்கின்றாய்
கனியில் ரசமாய் இனிக்கின்றாய் என்
கையில் கிடைக்காமல் மறைகின்றாய்

மலரும் வான் நிலவும் சிந்தும்
அழகெல்லாம் உன் எழில் வண்ணமே
குழலும் யாழ் இசையும்
கொஞ்சும் ஒலியெல்லாம் உன் குரல் வண்ணமே

மயில்



மயில் இந்தியாவின் தேசியப்பறவை ஆகும்.

ஆண்மயில் பெண்ணைக் கவர்வதற்காக தோகையை விரித்து ஆடும்.
ஆண் மயில்கள் அழகிய, பளபளப்பான, நீலம் கலந்த பச்சை நிறமுடையவை.
தோகையில் வரிசையாகக் 'கண்' வடிவங்கள் உள்ளன.

தோகையை விரிக்கும்
போது இவை மிகவும் அழகாகத் தோற்றமளிக்கின்றன.
பெண் மயில்களின் உடல் மங்கலான பச்சையும், பளபளப்புக் கொண்ட நீலமும்,
பச்சை கலந்த சாம்பல் நிறமும் கலந்தது. நீண்ட தோகை பெண் மயில்களுக்குக் கிடையாது.

பால் கொண்டு வா!

முன்னொரு காலத்தில் பேரரசன் ஒருவன் குறுநில மன்னன் ஒருவனின் நாட்டிற்கு வருகை தந்தான்.

பேரரசனுக்கு அந்நாட்டில் பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது. இரு நாட்டு அரசர்களும் மகிழ்ச்சியாகப் பேசிக் கொண்டிருந்தனர். அப்பொழுது பேரரசன், ""உங்கள் நாட்டு அமைச்சன் அறிவுக் கூர்மையில் சிறந்தவன் என்று சொல்கிறார்களே... அது உண்மையா?'' என்று கேட்டான்.

""உண்மைதான் பேரரசே!''
""அப்படியானால் அந்த அமைச்சனை அழைத்து நம் இருவர்க்கும் குடிப்பதற்குப் பால் கொண்டு வரச் சொல்லுங்கள்.

அவன் உண்மையில் அறிவுள்ளவனா என்பதைக் கண்டுபிடித்து விடுகிறேன்,'' என்று சொன்னான் பேரரசன்.
அதன்படி அமைச்சனை அழைத்த குறுநில மன்னன், ""எங்கள் இருவருக்கும் பால் கொண்டு வா,'' என்றான்.

அமைச்சனும் அழகான தட்டில் இரண்டு கிண்ணங்களில் பால் வைத்து அங்கே கொண்டு வந்தான்.

அப்பொழுதுதான் அவனுக்கு யாரிடம் தட்டை முதலில் நீட்டுவது என்ற குழப்பம் ஏற்பட்டது.
"நம் அரசரிடம் முதலில் தந்தால் தன்னை அவமானப்படுத்தி விட்டதாகப் பேரரசன் கோபம் கொள்வான்.
மாறாகப் பேரரசனிடம் தந்தால் நம் அரசன் கோபம் கொள்வான்... என்ன செய்வது?' என்று சிந்தித்தபடி தயங்கி நின்றான்.

குறுநில மன்னனுக்கு அமைச்சனின் சிக்கல் நன்கு தெரிந்தது. "அவன் என்னதான் செய்கிறான் பார்ப்போம்' என்ற எண்ணத்தில் அமைதியாக இருந்தான். ஆனால், அறிவுள்ள அந்த அமைச்சனோ தட்டைத் தன் அரசனிடம் நீட்டி, ""அரசே! தங்கள் விருந்தினரான பேரரசருக்கு என் கையால் பால் தருவது தகுதி ஆகாது. அதைத் தாங்களும் விரும்பமாட்டீர்கள். தங்கள் திருக்கரங்களாகலேயே தந்து விருந்தினரைப் பெருமைப் படுத்துங்கள்,'' என்றான்.


தன்னையும் விருந்தினரையும் ஒரே சமயத்தில் பெருமைப் படுத்திய அமைச்சனின் அறிவுக் கூர்மையைக் கண்டு வியந்தான் அரசன். அவனுக்குப் பல பரிசுகளைக் கொடுத்து சிறப்பித்தான்.
அறிவுள்ளவர்களுக்கு சென்ற இடம் எல்லாம் சிறப்பு.

**************************************
நன்றி; தினமலர்(சிறுவர்மலர்)










நீராடும் அழகெல்லாம். . .

நீராடும் அழகெல்லாம் நீ மட்டும் பார்க்கலாம்
நீர் தொட்ட மேனியை நீ தொட்டுப் பார்க்க வா வா
தேன் மொட்டு மீதிலே பூ முத்தம் பதிக்க வா
பூ முத்தம் பதித்த பின் புதுப் பாடம் படிக்க வா
புதுப் பாடம் படிக்க வா

தனியறை ரகசியம் யார் அறிவார்
நான் தருவதை உனையன்றி யார் பெறுவார்
தனியறை ரகசியம் யார் அறிவார்
நான் தருவதை உனையன்றி யார் பெறுவார்
சுவருக்கும் பார்த்திட விழி ஏது
இங்கு எவருக்கும் நடப்பது தெரியாது

நீராடும் அழகெல்லாம் நீ மட்டும் பார்க்கலாம்
நீர் தொட்ட மேனியை நீ தொட்டுப் பார்க்க வா வா

மணி விழி மயங்கட்டும் உறவினிலே
குளிர் பனி மழை பொழியட்டும் இரவினிலே
சுவை தரும் கனியுண்டு கொடியினிலே
அது கனிந்ததும் விழுவது மடியினிலே

நீராடும் அழகெல்லாம் நீ மட்டும் பார்க்கலாம்
நீர் தொட்ட மேனியை நீ தொட்டு பார்க்க வா வா

************
நன்றி; http://www.sukravathanee.org/forum/viewtopic.php?t=8684

தென்றல் வந்து தீண்டும் போது. . .

பாடியவர்கள் - இளையராஜா, ஜானகி
இசை - இளையராஜா
படம் - அவதாரம்

தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசிலை
திங்கள் வந்து காயும் போது
என்ன வண்ணமோ நினைப்பிலை

வந்து வந்து போகுதம்மா
எண்ணமெல்லாம் வண்ணமம்மா
எண்ணங்களுக்கேற்றபடி
வண்ணமெல்லாம் மாறுமம்மா
உண்மையம்மா உள்ளதை நானும் சொன்னேன்
பொன்னம்மா சின்னக் கண்ணம்மா

தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசிலை
திங்கள் வந்து காயும் போது
என்ன வண்ணமோ நினைப்பிலை

விவரம் இல்லாமலே
பூக்களும் வாசம் வீசுது
உறவும் இல்லாமலே
இருமனம் ஏதோ பேசுது
எவரும் சொல்லாமலே
குயிலெல்லாம் தேனா பாடுது
எதுவும் இல்லாமலே
மனசெல்லாம் இனிப்பாய் இனிக்குது

ஓடை நீரோடை
இந்த உலகம் அது போலை
ஓடும் அது ஓடும்
இந்தக் காலம் அது போலை

நிலையா நில்லாது
நினைவில் வரும் நிறங்களே

தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசிலை
திங்கள் வந்து காயும் போது
என்ன வண்ணமோ நினைப்பிலை

ஈரம் விழுந்தாலே
நிலத்திலே எல்லாம் துளிர்க்குது
நேசம் பிறந்தாலே
உடம்பெல்லாம் ஏதோ சிலிர்க்குது
ஆலம் விழுதாக
ஆசைகள் ஊஞ்சல் ஆடுது
அலையும் மனம் போலே
அழகெல்லாம் கோலம் போடுது

குயிலே குயிலினமே
அந்த இசையால் கூவுதம்மா
கிளியே கிளியினமே
அதைக் கதையாப் பேசுதம்மா
கதையாய் விடுகதையாய்
ஆவதில்லையே அன்புதான்

தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசிலை
திங்கள் வந்து காயும் போது
என்ன வண்ணமோ நினைப்பிலை

வந்து வந்து போகுதம்மா
எண்ணமெல்லாம் வண்ணமம்மா
எண்ணங்களுக்கேற்றபடி
வண்ணமெல்லாம் மாறுமம்மா
உண்மையிலே உள்ளது என்ன என்ன?
வண்ணங்கள் என்ன என்ன?

தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசிலை
திங்கள் வந்து காயும் போது
என்ன வண்ணமோ நினைப்பிலை
*************************************
நன்றி;

http://rvijayakumar.page.tl/
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது