உழைப்பைக் கொஞ்சம் அதிகரித்தால். . .

உழைப்பு
முதல் தேதியைச் சொல்லிச் சொல்லி
முப்பது நாளையும் தள்ளாதே
உழைப்பைக் கொஞ்சம் அதிகரித்தால்
முப்பது நாளும் முதல் தேதி !

உறவு
ஆற்று மணலே !
சிமெண்டுடன் கூடிக் கலந்து
சீக்கிரம் கலவையாகிக் கட்டிடமாய் நிற்கின்றாய்
உன்னைக் கட்டி எழுப்பிய
மனிதனுக்கு உனைப் போல்
ஒட்டி வாழத் தெரியவில்லையே
இந்த உண்மை ஏனோ புரியவில்லையே !

கொடை!
கடையேழு வள்ளல்கள்
கண் மூடாது இருந்திருந்தால்
நன் கொடை ரசீதுகள் கண்டே
ஓட்டாண்டிகளாகி இருப்பார்கள் !

நன்றி ; கவிஞர் தரணி (தண்ணீரின் தாகம்)

0 comments:

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது