வெண்டக்காய் தலையில் மகுடம்!

சாப்பிட்டுக கொண்டிருந்த அரசர் வெண்டக்காய்
பிரமாதமாக இருக்கிறதே என சொன்னார்.உடனே
முல்லா,''அரசே,அதனால்தான் இறைவன் அதன்
தலையில் மகுடம் வைத்து அனுப்பியிருக்கிறார்''
என்றார்.

சமையற்காரன் தினசரி வெண்டக்காயை சமைக்க,
அரசர்,அந்த மோசமான காயை விட்டால் வேறு காயே
இல்லையா என எரிந்து விழுந்தார்.முல்லாவும்
ஒத்துப் பாடினார்.

முன்னுக்குப் பின் முரணாக ஏன் பேசுகிறீர் என கேட்க
முல்லா சொன்னார்''அரசே,எனக்கு வெண்டக்காயா
சம்பளம் தருகிறது? நீங்கள்தானே தருகிறீர்கள்?!

0 comments:

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது