கனவுகள் இல்லாமல்...

நான் காயங்களைத் தொகுத்து வைத்தேன்
பார்த்தவர்கள்
காவியம் என்றனர்
------------------------------------------

இராமன் ஆண்டால் என்ன்?
இராவணன் ஆண்டால் என்ன்?
அதிகாரிகள் அப்படியேதான்!
------------------------------------------

கனவுகள் இல்லாமல்
வாழ்வதைவிட
கனவுகளோடு மடிவது மதிப்பிற்கு உரியது.
------------------------------------------

யார் உடைத்தாலும்
யாழ் உடைந்து விடும்!
ஆனால் யார் மீட்டாலும் யாழ் இசை தருமா?
--------------------------------------------

நான் போராடி இருக்கிறேன்
என்பதை என் வெற்றிகளைப் போலவே
என் தோல்விகளும் சொல்லும்!
-----------------------------------------

ஒரு சிறகைத் தலையில் சூடி
அரசரானார்கள் நம் முன்னோர்கள்
நாமோ தங்கத்தை மகுடமாய்ச் சூடி
அதற்கு அடிமை ஆனோம்.
----------------------------------------
(இவை,படித்ததில் எனக்கு பிடித்த கவிதைகள்)

0 comments:

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது