மின்னலாய் ஒரு

அவள் விழிகளோடு என் விழிகள் கலந்து
வார்த்தைகளோடு வார்த்தைகள் கலந்து
இன்னும் இன்னும் நெருங்கி
எனக்குள் அவளையும்
அவளுக்குள் என்னையும்
தேட முற்பட்டு
இருவருமே தோல்வியைத் தழுவி
விவாகரத்துக்காய் காத்திருக்கிறோம்.

இடையில்
ஏதோ மின்னலாய் ஒரு வாழ்க்கை
ஊரறிய மேளதாளம்
வீடு வீடாய் போசனம்
புதுத்தம்பதியை அயல் பார்த்து
மெலிதான புன்னகை சிந்தி
சுமைகளே இல்லாமல் வாழ்க்கையை
வாழ்ந்து பார்த்தோம்

சடங்கையும் மறந்து கொண்டு.
எல்லாம் மறந்து போகட்டும்
மீண்டும் அவளைக் காதலிக்க வேண்டும்
''கல்யாணம் என்ற வார்த்தையையும்

--------------------------------------------------------------
நன்றி; நிர்வாணி(http://paraparapu.com)

0 comments:

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது