ஆயிரம் பூக்கள் மலர

ஆயிரம் விளக்குகள் எரிய
ஒரு தீக்குச்சி போதும்
ஆயிரம் பூக்கள் மலர
ஒரு விதை போதும்

தியாகத்தின் முடிவில்தான்
திசைகளே தெரிகின்றன.

கடமையில். . .
தீக்குச்சியாய் தன்னை எரித்துக் கொண்டால்
விதையாய்த் தன்னைப் புதைத்துக் கொண்டால்
ஓர் ஆசிரியர் போதும் ஒவ்வொரு பள்ளியிலும்
ஆயிரம் மாணவர்கள் பிரகாசிப்பார்கள்.
----------------------------------------------

படித்ததில் பிடித்த கவிதை
கவிதையாக்கம்; ஆரூர்.சேகர்(கல்கி-27-5-90

0 comments:

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது