சுவடுகள்

போன வருஷ சாரலுக்கு
குற்றாலம் போய்
கை(ப்)பேனா மறந்து

கால் செருப்புத் தொலைத்து
வரும் வழியில் கண்டெடுத்த
கல் வெள்ளிக் கொலுசு ஒண்ணு

கற்பனையில் வரைந்த
பொற்பாத சித்திரத்தை
கலைக்க முடியவில்லை இன்னும்!

நன்றி; கவிஞர் விக்ரமாதித்யன் (கவிமூலம்)

0 comments:

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது