நானொரு சிந்து காவடிச்சிந்து!

நானொரு சிந்து காவடிச்சிந்து
ராகம் புரியவில்ல உள்ள சோகம் தெரியவில்ல
தந்தையிருந்தும் தாயுமிருந்தும்
சொந்தமெதுவுமில்ல அட சொல்லத்தெரியவில்ல

(நானொரு சிந்து)

இல்லாத உறவுக்கு என்னென்ன பேரோ
நாடொடிப் பாட்டுக்குத் தாய்தந்தை யாரோ
விதியோட நான் இன்னும் வெளையாடப் போறேன்
வெளையாத பாட்டுக்கு வெதபோட்டதாறேன்
தலையெழுத்தென்ன என் மொதலெழுத்தென்ன
சொல்லுங்களேன்

(நானொரு சிந்து)

பசு கன்றுப் பால் தேடிப் போகின்ற வேளை
அம்மான்னு சொல்லவும் அதிகாரமில்லை
என் விதி அப்போதே முடிஞ்சிருந்தாலே
கர்ப்பத்தில் நானே கலைந்திருப்பேனே
தலையெழுத்தென்ன என் மொதலெழுத்தென்ன
கண்டுபிடி

கவிப்பேரரசு வைரமுத்து
courtesy:www.tamilnation.org

0 comments:

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது