கால மாற்றம் !

எழுத்தாளர் சிவசங்கரி ,இலக்கியவாதிகளைப்
பேட்டி கண்டும் ,அவர்களது கவிதைகளைத்
தொகுத்தும் 'இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு'
என்ற நால்களை வெளியிட்டுள்ளார்.அதன் முதல்
பாகம் படித்தேன்.

அதில் முனிசிபல் கமிஷனராக இருந்து ஓய்வு
பெற்ற சேஷேந்திர வர்மா என்பவர் பேட்டியின்போது
சொன்னது;

''கங்கை-முன்னொரு காலத்தில் கடவுள்,
பின்னர்,

கங்கை-படகுகள் சென்று வந்த ஒரு பாதை,
பின்னர்,

கங்கை-நமது வயல்களுக்கு நீர் கொடுக்கும் ஓடை

பாருங்கள்-கடவுள் கூடக் காலகட்டத்தில்
மாற்றம் பெற்று விடுகிறாரே!

0 comments:

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது