இளைஞன் கேட்ட வரம் !

இளைஞன் கேட்ட வரம்

இளைஞன் ஒருவன் கடவுளை சந்தித்து வரம் ஒன்றை கேட்க தவமிருந்தான். கடவுளும் அவன் முன் தோன்றி என்ன வரம் வேண்டும் கேள் என்றார். பேராசை பிடித்த அந்த இளைஞன், எனக்கு ஒரு வேலை வேண்டும். எப்போதும் என் கையில் இருக்கும் பையில் நிறைய பணம் இருக்க வேண்டும் என்று இழுத்தான்.
.
உடனே கடவுள் இதுபோதுமா என்று கேட்டார். உடனே அவன் இல்லை இல்லை இன்னும் ஒரு வரம் வேண்டும் என்றான். என்ன அது என்று கடவுள் கேட்டார். அதற்கு அவன் என் வண்டியில் எப்போதும் பெண்கள் இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்றான்.
நீ கேட்ட அனைத்தும் தந்தேன் என்றார் கடவுள். இளைஞனும் மகிழ்ச்சி அடைந்தான். மறுநாள் அவனுக்கு போக்குவரத்து கழகத்தில் இருந்து மகளிர் பேருந்தின் கண்டக்டர் வேலை கிடைத்தது.

0 comments:

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது