பழநிபாரதி கவிதைகள்

( 1)பூஜையறை;

பிளாஸ்டிக் மாவிலைத் தோரணங்கள்
ஸ்டிக்கர் கோலங்கள்

'டப்பர் வேர்' டப்பாவிலிருந்து
ஊற்றுகிறார்கள்
விளக்குக்கு எண்ணெய்!

கடவுள் ஏன் கல்லானான்?
கேட்டான் கண்ணதாசன்...
கடவுளை ஏன் பிளாஸ்டிக்கானான்?
பார்த்துக்கொண்டிருக்கிறான் பழநிபாரதி.

(2) குளியலறை;

கைம்பெண் ஒருத்தியின்
குளியலறையில்
சுவரில் உள்ளது
ஸ்டிக்கர் பொட்டு.

(3) சமையலறை;

தீ
சமைக்கிறதா
எரிக்கிறதா?

தெரியாமலேயா...
தாளிக்கிறாள் அவள் காற்றில் கலந்து வெளியேறுகிறது
அவளது
பெருங்காய வாசம்.

0 comments:

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது