மேடையெங்கும் வாய்ச்சொற்கள்!

விழாமுடிந்து விட்டது
மறக்காமல் மடித்து
எடுத்துக்கொள்ளப்பட்டு விட்டன
சால்வைகள்.

கைவிடப்பட்ட பூச்செண்டுகள்
அநாதைகளாய்
அந்தந்த நாற்களிகளில்.

பளிங்கு போல்
கண்ணாடி குவளைகளில்
அசையாமல் இருந்தது
பருகப்படாத தண்ணீர்.

மிதிபட்டுக் கிடந்தன
மேடயெங்கும்
வாய்ச் சொற்கள்.

-------------------------------
நான் படித்து ரஸித்த கவீதைகளில் இதுவும் ஒன்று-
கவிதையாக்கம்; கவிஞர் கல்யாண்ஜி
(உறக்கமற்ற மழைத்துளி-கவிதை தொகுதி)

0 comments:

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது