புத்தரைப்போல. . .

புத்தரைப்போல
நின்று பார்த்தேன்
கூடவில்லை

புத்தரைப்போல
அமர்ந்து பார்த்தேன்
இயலவில்லை

சுலபம்தான் என்று
புத்தரைப்போலச்
சிரிக்க முயன்றேன்

புத்தர்தான் சிரித்துக்
கொண்டிருந்தார்
என்னைப் பார்த்து
இப்போதும்!

நன்றி; கவிஞர் கல்யாண்ஜி (உறக்கமற்ற இரவுகள்)

1 comments:

Anonymous said...

atharkkaga mattumae piravi eduthavan..

naaam etharkkaga..?

but unaalum mudiyum...

keep trying

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது