கொள்ளை அழகு !

கொள்ளை அழகு என
யாரும் அள்ளிக்கொள்ளவுமில்லை
நசுங்கி விடக் கூடாதென
யாரும் அப்புறப்படுத்தவுமில்லை
ஓரத்தில் உதிர்ந்து குவிந்திருந்தன
மஞ்சள் பூக்கள்,

பாதையில் இறந்துகிடந்தது
செம்மண் நிறப் பூனை
மலர்ச்சி மனதோடு
வருடல் விரலோடு.

இதையும் மீறி
எல்லோர்க்கும்
அவரவர்பாடு!
-----------------------------------------------------------
படித்து ரஸித்த கவிதைகளில் ஒன்று-
கவிதையாக்கம் ;கல்யாண்ஜி
(உறக்கமற்ற மழைத்துளி-கவிதைத் தொகுதி)

0 comments:

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது