நிலவு

நிலவு என்ற வார்த்தையை வைத்து எழுதப்பட்ட ஆக்கங்களை தமிழ் தேடு தளத்தில் தேடிய போது கிடைத்த வலைத்தளம் http://thailu.blogspot.com/2008/08/blog-post_7847.html. தமிழ் கவிதைகளை நேசிக்கும் ஓரு வாசகன்.. என தன்னைப்பற்றி அறிமுகம்செய்து கொள்கிறார்.அவரது கவிதைகளை நானும் நேசித்ததால் அவரதுஒரு சில கவிதைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்
*************************************************************************
நிலவு

அமாவாசையில்
நிலவு...
எதிர் வீட்டுச் சன்னலில்
*************************************
மனித நேயம்

கல்லறைகள்
பெருகிவிட்டன
உடல்களுக்கு அல்ல-
மனித இதயங்களுக்கு...!
***************************************

முத்தம்....!
அவளின்உதட்டு ஈரம்
அச்சானது -
என் இதழில் அல்ல
என் இதயத்தில்....!
******************************************

சிலந்திகள்....!
நெசவுத்தொழில்செய்தும்
நிர்வாணமாய்-
சிலந்திகள்.......!
*********************************************

விதவை....!
பெண்ணே!நீ!
சுமங்கலியாகஇருக்க
என்னைவிதவையாக்கிவிட்டாய்! -
பூச்செடி..!
************************************************

கடவுள்
உள்ளேவைத்துக்கொண்டு
உலகமெல்லாம்...
தேடுகின்றான்மனிதன்...!
************************************************

தானம்...!

யாரவதுவாங்கிக்கொள்ளுங்கள் -
இந்தஓரு சாண் வயிற்றை-
பசி பொறுக்கமுடியவில்லை..!
*************************************************

பசி
வெளிச்சமில்லாமல்
எரிகின்றது...
ஏழையின் வயிறு...!
************************************************

0 comments:

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது