துறவி

துறவி
எல்லாமும்
விட்டொழித்த துறவி
வந்திறங்கினார்
பென்ஸ் காரில்

வசந்தராஜா
***************************************************

கடவுள்
கிளிஞ்சல்கள் பொறுக்கி
அழகுபடுத்தப்பட்ட
குழந்தைகளின்
மணல் வீட்டில்
குடியிருக்க வந்திருப்பாரோ ?
கடவுள் !

பெ.பாண்டியன்
******************************************************
பொம்மை

குழந்தைகள்
பெரியவர்களாகிவிட்ட
பின்பு
உரையாடலுக்கு
ஒரு வழியுமற்று
பரணுக்குப் போய் விட்டன
மரப்பாச்சி
பொம்மைகள் !

பெ.பாண்டியன்.
***************************************************

நன்றி; வாசகர் கவிதை, குமுதம் 17-9-08

0 comments:

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது