நான் என்ன பங்குதாரரா ?

நான் என்ன பங்குதாரரா?

ஒரு வழக்கு விசாரணைக்காக இங்கிலாந்துக்கு கப்பலில் சென்றார் இந்தியாவின் முதல் ஜனாதிபதி டாக்டர் இராஜேந்திரபிரசாத். அவருக்கு அருகில் இருந்தவர் சிகரெட் ஊதி தள்ளிக் கொண்டிருந்தார். அந்தப் புகை, பிரசாத்துக்கு ஒத்துக்கொள்ளவில்லை. இருமினார்.ஆனாலும், ஊதுவதை அந்த ஆசாமி நிறுத்தவில்லை.

பிரசாத் கேட்டார்.""ஐயா, காசு கொடுத்துதானே சிகரெட் வாங்கினீர்கள்?''""
ஆமாம்!''""
நீங்கள் புகைக்க என்னிடம் காசு வாங்கினீர்களா?''
""இல்லையே!''"
"சிகரெட்டில் பங்கு இல்லாத எனக்கு, புகையில் மட்டும் ஏன் பங்கு கொடுக்கிறீர்கள்?'' என்றார் இராஜேந்திர பிரசாத்.
ஆசாமி சிகரெட்டை உடனே அணைத்தார். மன்னிப்பு கேட்டார்.

- விஜயா நாராயணன், தஞ்சாவூர்.
Thanks: http://tamil.sify.com/pennaenee/fullstory.php?id=14531064

0 comments:

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது