பிழைத்த தென்னந்தோப்பு

பிழைத்த தென்னந்தோப்பு

வயலிடையினிலே - செழுநீர் மடுக் கரையினிலே,
அய லெவருமில்லை - தனியே,
ஆறுதல் கொள்ள வந்தேன்.
காற்றடித் ததிலே - மரங்கள் கணக்கிடத் தகுமோ?
நாற்றி நைப்போல - சிதறி நாடெங்கும் வீழ்ந்தனவே,

சிறிய திட்டையிலே - உளதோர், தென்னஞ் சிறு தோப்பு
வறியவ னுடைமை - அதனை வாயு பொடிக்கவில்லை
வீழ்ந்தன சிலவாம் - மரங்கள், மீந்தனபலவாம்;


வாழ்ந்திருக்க வென்றே அதை வாயு பொறுத்துவிட்டான்
தனிமை கண்டதுண்டு- அதிலே, சார மிருக்கு தம்மா!
பனிதொலைக்கும் வெயில் - அதுதேம் பாகுமதுர மன்றோ?
இரவி நின்றதுகாண் விண்ணிலே, இன்பவொளித்திரளாய்
பரவி யெங்கணுமே - கதிர்கள், பாடிக் களித்தனவே,

நின்ற மரத்திடையே - சிறியதோர் நிழலினில் இருந்தேன்;
என்றும் கவிதையிலே - நிலையாம்,
இன்பம் அறிந்து கொண்டேன்,
வாழ்க பராசக்தி!- நினையே வாழ்த்திடுவார் வாழ்வார்;
வாழ்க பராசக்தி! - இதையென், வாக்கு மறவாத

பாரதியார்
thanks:chenthil.blogspot.com

0 comments:

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது