நினைவு

நினைவு

நீரிலிருந்து தரை வந்தும்
உயிர் வாழ்கிறது !
நதியில் தவ்வி
என் ரசிப்பில்விழுந்த
மீன் குஞ்சு !
*****************************************************

கவலை
காற்று வந்தும் வியர்க்கிறது

சுழலும் மின் விசிறியை
சுற்றும் வண்ணத்துப்பூச்சி.
*****************************************************

நினைவு
அப்பா இறந்து
பல வருடங்கள் ஆனாலும்
வீட்டை விட்டு
வெளியேறும் போதெல்லாம்
நினைவில்வருகிறார் !
கதவை சாத்தி விட்டு
போகச் சொல்லி !

************************************************
ப.உமாமகேஸ்வரி.
வாசகர் கவிதை, குமுதம்-17-9-08

0 comments:

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது