மரம் நடு விழா

மரம் நடுவிழா;
அரசு அலுவலகத்தில் மரம் நடுவிழா
ஆரவாரமின்றி கலந்து கொண்டார் மேலாளர்
ஆழ குழி தோண்டி பொறுப்புடன் நட்டார்
‘தூங்குமூஞ்சி’ மரக்கன்றினை!

சி.ரகுபதி,போளூர்

சுமைகள்;
புத்தகச் சுமை பிள்ளைகளுக்கு
பள்ளி கட்டண சுமையோ
பெற்றோர்களுக்கு !

சேகுவேரா-செரியலூர்


மீண்டும் வருமா ?
வானவில்லாய் வந்து மறைந்த சுதந்திரம்
மீண்டும் எப்போது வரும்
ஏழைகளின் வறுமையைப் போக்க..

த.பக்தவச்லம்,ஆற்காடு.!

அன்றும் இன்றும். . .
மரங்களை வைத்து மழை பொழிய வைத்த
மன்னர்கள் அன்று. . .
மரங்களை வெட்டி மழை ஒழிய வைத்த
மாமன்னர்களோ இன்று !

கம்பன், மதுரை

குடி !
எப்போதும் சந்தோஷ போதையில்
இருக்க வேண்டும் என்றால்
சிரிப்பெனும் மதுவைக்
முடித்துக்கொண்டே இரு !

வாணிராஜன்,சென்னை 117

நன்றி; தினத்தந்தி இளைஞர் மலர் 28-6-08

0 comments:

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது