மழையும் மழலையும் ஒன்று !

பெய்யெனில் பெய்யாது
நில்லெனில் நில்லாது
தவழ்ந்தபடி பொழிதலால்
தனிமொழி பேசுதலால்

சிரித்தபடியிருந்து
அடுத்தபடி அழுதலால்
எதையும் யாரையும்
பகுத்துப் பாராமல்

முத்தமிடுதலால்
உடை நனைத்தலால்
மழலையும் மழையும் ஒன்று.

- உதயா.
Thanks: http://udhaya.rediffblogs.com/

0 comments:

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது