அறிவுப் புதிர்கள் (1-10)

1)அரைச்சாண் ராணி,அவளுக்குள்ளே,ஆயிரம் முத்துக்கள்--அது என்ன ?

2)இத்தணூன்டு சிட்டுக்குருவிக்கு,ஆழு முழம் சித்தாடை.-அது என்ன?

3)எட்டுக்கால் ஏகாம்பரம்,வலை பின்னுவதில் கெட்டிக்காரன்.-அவன் யார்?

4)எண்ணைய் வேண்டா விளக்கு,எரியும் போதே உருகும்-விளக்கு,-அது என்ன?

5)ஓடியாடி உழைத்தும், மூலைதான் இவன் இருப்பிடம்,-அது என்ன?

6)பூக்காமல் பூத்திருப்பாள்,தெரியாமல் மறைந்திருப்பாள்-அவள் யார் ?

7)மரத்துக்கு மரம் தாவியோடும்,முத்தம்மா மகனுக்கு முதுகிலே மூன்றுகோடு, -அது என்ன ?

8)விரித்தால் நாம் தூங்கலாம், சுருட்டினால் அது தூங்கும்-அது என்ன ?

9)ஒரு மழை பெய்தாலே பல குடை வந்துவிடும்.-அது என்ன ?

10)குண்டுச் சட்டியில் கெண்டை மீன், -அது என்ன ?

--------------------------------------------------------------
விடைகள்;1.வெண்டைகாய்

2..வெங்காயம்

3.எட்டுகால் பூச்சி/ சிலந்தி

4.மெழுகுவர்த்தி

5.துடைப்பம்

6.அத்திப்பூ

7.அணில்

8.பாய்

9.காளான்

10.கண்

-----------------------------------
நன்றி; (தொகுத்தவர் ; சி.இலிங்கசாமி)

0 comments:

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது