முருகன் பாடல்கள்

டி.எம்.சௌந்தர்ராஜன் அவர்கள் பாடிய பாடல்கள்

பாடல் 1
--------
கந்தன் திருநீரணிந்தால்
கண்டபிணி ஓடிவிடும்
குந்தகங்கள் மாறி இன்பம்
குடும்பத்தை நாடி வரும்
(கந்தன்)
சுந்தரவேல் அபிஷேக
சுத்தத் திருநீரணிந்தால்
வந்தமர்ந்த மூத்தவளும்
வழிபார்த்துப் போய்விடுவாள்

அந்த நேரம் பார்த்திருந்து
அன்னைசெல்வம் ஓடிவந்து
சிந்தையைக் குளிரவைத்து
சொந்தம் கொண்டாடிடுவாள்
(கந்தன்)
மணம் மிகுந்த சாம்பலிலே
மகிமை இருக்குதடா
மனமுடன் அணிவோர்க்கு
மகிழ்ச்சியைப் பெருக்குதடா

தினம்தினம் நெற்றியிலே
திருநீரு அணிந்திடடா
தீர்ந்திடும் துன்பம் எல்லாம்
தெய்வம் துணை தாருமடா
(கந்தன்)
*******************************************


பாடல் 2
--------
உள்ளம் உருகுதய்யா முருகா
உன்னடி காண்கையிலே
அள்ளி அணைதிடவே
எனக்குள் ஆசை பெருகுதய்யா முருகா
(உள்ளம்)

பாடிப் பரவசமாய் உனையே
பார்த்திடத் தோணுதய்யா
ஆடும் மயிலேறி முருகா
ஓடி வருவாயப்பா
(உள்ளம்)
பாசம் அகன்றதய்யா
என் நெஞ்சில் நேசம் வளர்ந்ததய்யா
ஈசன் திருமகனே
எந்தன் ஈனம் மறைந்ததய்யா
(உள்ளம்)
ஆறு திருமுகமும்
உன்னருளை வாரி வழங்குதய்யா
வீரமிகு தோளும்
கடம்பும் வெற்றி முழக்குதப்பா
(உள்ளம்)
கண்கண்ட தெய்வமய்யா
நீயிந்தக் கலியுக வரதனய்யா
பாவியென்றிகழாமல்
எனக்குன் பதமலர் தருவாயப்பா
(உள்ளம்)
*********************************************


பாடல் 3
--------

கற்பனை என்றாலும்
கற்சிலை என்றாலும்
கந்தனே உனை மறவேன் - நீ
(கற்பனை)

அற்புதமாகிய அருட்பெரும் சுடரே
அருமறை தேடிடும் கருணையக் கடலே - நீ
(கற்பனை)

நிற்பதும் நடப்பதும் நின் செயலாலே
நினைப்பதும் நிகழ்வதும் நின் செயலாலே
கற்பதெல்லாம் உந்தன் கனிமொழியாலே
காண்பதெல்லாம் உந்தன் கண்விழியாலே
(கற்பனை)

***************************************************
நன்றி;http://pithatralgal.blogspot.com/2006/09/135.html

0 comments:

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது