நீராடும் அழகெல்லாம். . .

நீராடும் அழகெல்லாம் நீ மட்டும் பார்க்கலாம்
நீர் தொட்ட மேனியை நீ தொட்டுப் பார்க்க வா வா
தேன் மொட்டு மீதிலே பூ முத்தம் பதிக்க வா
பூ முத்தம் பதித்த பின் புதுப் பாடம் படிக்க வா
புதுப் பாடம் படிக்க வா

தனியறை ரகசியம் யார் அறிவார்
நான் தருவதை உனையன்றி யார் பெறுவார்
தனியறை ரகசியம் யார் அறிவார்
நான் தருவதை உனையன்றி யார் பெறுவார்
சுவருக்கும் பார்த்திட விழி ஏது
இங்கு எவருக்கும் நடப்பது தெரியாது

நீராடும் அழகெல்லாம் நீ மட்டும் பார்க்கலாம்
நீர் தொட்ட மேனியை நீ தொட்டுப் பார்க்க வா வா

மணி விழி மயங்கட்டும் உறவினிலே
குளிர் பனி மழை பொழியட்டும் இரவினிலே
சுவை தரும் கனியுண்டு கொடியினிலே
அது கனிந்ததும் விழுவது மடியினிலே

நீராடும் அழகெல்லாம் நீ மட்டும் பார்க்கலாம்
நீர் தொட்ட மேனியை நீ தொட்டு பார்க்க வா வா

************
நன்றி; http://www.sukravathanee.org/forum/viewtopic.php?t=8684

0 comments:

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது