ஹைகூ -பொன்.சுதா

ஓய்வெடுக்க வந்தாலும்
மறக்கவில்லை
நகரத்து வேகநடை.
************

நானும் ஆதாம் தான்
துரத்திய சொர்க்கம்
தாய் வயிறு..
**************

மின்சாரம் போனதும்
கூடுகிறது ஒளி
நடசத்திரங்களுக்கு.
************

கூட்டத்தில் எது
நேற்று முகம் மோதிய
வண்ணத்துப் பூச்சி…
****************

பெரும் மழை
இரவெல்லாம் நனைந்தேன்
பழைய மழையில்.
***************

தொலைந்து போனது
நிறைந்த கம்மாயில்
விளையாட்டு மைதானம்
*************

வயிறு கிள்ளும் பசி
கூட்டமாய் இருக்கிறது
குழாயடி.
************

துயிலெழுப்பிக் கொடுக்கிறான்
பால்காரன் தினமும்
உதயக் காட்சி
***********************************************************************************************************************
ஆக்கம்; பொன்.சுதா,
நன்றி;ponsudhaa.wordpress.com

1 comments:

said...

மின்சாரம் போனதும்
கூடுதல் ஒளி
நட்சத்திரங்களுக்கு

ரொம்ப நல்லாயிருக்கு
ராம்மலர்

பொன்சுதா நீங்கதானா

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது