உண்மைக்குப் பரிசு-புஷ்பவனம் குப்புசாமி

புஷ்பவனம் குப்புசாமியின் சிறுவர் பாடல்கள்

உண்மைக்குப் பரிசு

*************************

உண்மை பேசினால் நன்மைகளுண்டு
விறகு வெட்டி கதை கேளுங்கள் !
விறகு வெட்டியின் நேர்மைக்காகக்
கிடைத்த பரிசினைப் பாருங்கள் !

காட்டுக்குள்ளே ஆற்று ஓரமாய்
பட்ட மரமொன்று இருந்தது !
பட்ட மரத்தை வெட்டும்போது
கோடரி ஆற்றுக்குள் விழுந்தது !
கோடரி இன்றித் தவித்த ஏழையிடம்
தேவதை ஒன்று வந்துது !
தங்கக் கோடரி ஒன்றை எடுத்து
விறகு வெட்டியிடம் தந்தது !

தங்க கோடரி,வெள்ளிக் கோடரி
எதையும் மரம் வெட்டித் தொடவில்லை !
இரும்புக் கோடரி தன்னது என்று
எடுத்துக் கொண்டான் பொய்யில்லை !
விறகு வெட்டியின் நேர்மை கண்டு
தேவதை உள்ளம் மகிழ்ந்தது !
வெள்ளிக் கோடரி தங்கக் கோடரி
எல்லாம் பரிசாய்த் தந்தது.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

ஆக்கம்; புஷ்பவனம் குப்புசாமி
புஷ்பவனம் குப்புசாமியின் சிறுவர் பாடல்கள்
(மணிமேகலைப் பிரசுரம்)

0 comments:

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது