இயற்கையின் மடியில்" -சுந்தரா

மழையே...மழையே...
*****************************

உரக்க அழுகிறது வானம்
கண்ணின் நீர் துடைக்கக்
கரங்கள் அதற்கு இல்லை பாவம்...

நடுக்கமெடுக்கிறது தேகம்
பற்கள் கிடுகிடுக்க
உடலுக்குள் ஓடும் மின்சாரம்...

மோதி முழக்கமிடும் மேகம்
விழிகள் இமைமூட
மின்னல் ஒளிக்கதிரும் பாயும்...

நீரின் திவலைகளின் வேகம்
நெடுங்குளிர் சுமந்து
நெட்டிக் கதவுதள்ளி ஏறும்...

காலைக் கதிரவனோ பாவம்
செங்கதிர் சுருட்டி
மேகப்பொதிகளுக்குள் தூங்கும்.

********
சுந்தரா எழுதியது:

source:http://www.muthamilmantram.com/

0 comments:

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது