தென்கச்சி பதில்கள்

தென்கச்சி பதில்கள்

கடவுள் உங்கள் முன் தோன்றினால் என்ன வரம் கேட்பீர்கள்?- கோகிலா சா, அய்யம்பாளையம்

வரம் கேட்க வாய்ப்பில்லை! கடவுளைப் பார்த்தவுடனே அதிர்ச்சியில் மயக்கம் போட்டு விழுந்து விடுவேன்.

கேள்விகள் தீர்ந்து போனால் என்ன செய்வீர்கள்?-வீர செல்வம், பூம்புகார்

அப்பாடா...! என்று நிம்மதியாக ஒரு பெருமூச்சு விடுவேன்.

மனதிற்கேற்ற வாழ்க்கை அமைவது எப்படி?-திருவண்ணாமலை சாமி

நன்றி;மஞ்சரி - அக்டோபர் 2007
&http://www.dinamalarbiz.com/DEMO11/piraithal_manjari.asp

வாழ்க்கையை நேசிக்கக் கற்றுக் கொள்கிறவர்களுக்கு அவர்களுக்குப் பிடித்த மாதிரி வாழ்க்கை அமைந்துவிடுகிறது.

நிறைகுடம் தளும்போது என்பதற்கு ஒரு சிறு உதாரணம் சொல்ல முடியுமா?- எஸ்.மனோன்மணி, சிவலிங்கம், கோவை

ஆயிரம் ரூபாய் நோட்டும் 50 காசு நாணயமும் சந்தித்துக் கொண்டன. ஆயிரம் ரூபாய் துள்ளிக்குதித்தது. நான் கோடீஸ்வரர்களின் கையில் இருக்கிறேன்! ஐம்பது காச நாணயம் அடக்கமாகச் சொன்னது நான் கோவில் உண்டியல்களில் இருக்கிறேன்.

ஒரு குரு எப்படி இருக்க வேண்டும்? சீடன் எப்படி இருக்க வேண்டும்?-புதுவை கிருஷ்ணன்

சின்சஸ் என்று ஒரு குரு இருந்தார். அவர் ஒரு ஜென்மாஸ்டர். அவன் தனது சீடர்களுக்கு நான்கு விதமாக போதிப்பவர். சில சமயம் அவர் தன் சீடர்களைப் பற்றிப் பேசுவார். சில சமயம் தன் போதனை பற்றி விளக்கிப் பேசுவார். சில சமயம் அந்த இரண்டைப் பற்றியும் பேசுவார். முடிவில் அவர் எந்தவித அறிவுரைகளையும் கூறாமல் முடித்துவிடுவார். ஏனென்றால் ஓர் உண்மையான சீடனுக்கு எந்த வித அறிவுரையும் தேவையில்லை. காரணம் எல்லா சீடர்களிடமும் புத்தன்மை இருக்கிறது. பார்க்கப்போனால் யாருக்கும் போதனைகூட தேவையில்லை. நண்பரே! ஓஷோவின் இந்த விளக்கத்தில் உங்கள் கேள்விக்கான விடை கிடைக்கிறதா.... பாருங்கள்.

நேர்மையற்றவர்கள் பலர் வசதியாகவும், நேர்மை உள்ளவர்கள் வசதி இல்லாமலும் இருக்கிறார்களே...?-கே,எஸ்.கோவர்த்தனன், வேளச்சேரி

பொதுவாக நேர்மை என்பது வசதியைக் கொடுக்காது. ஆனால் நிம்மதியைக் கொடுக்கும். இந்த உலகத்தில் வசதியாக வாழ்வது முக்கியமில்ø. நிம்மதியாக வாழ்வதுதான் முக்கியம்.

60வது ஆண்டு சுதந்திரதின விழாவுக்கு உங்கள் செய்தி என்ன?-ம.வே.வரதராஜன், சென்னை - 35

முதல் சுதந்திர தினத்துக்கு முதல்நாள் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்கள் சொன்ன ஒரு செய்திதான் இன்றைக்கும் நமக்குத் தேவைப்படுகிறஒரு செய்தியாக இருக்கிறது. அவர் சொன்னார்.

நண்பர்களே! இன்று இரவு நமக்குச் சுதந்திரம் கிடைக்கப் போகிறது. நாளை முதல் நாம் செய்கிற தவறுகளுக்கு ஆங்கிலேயர்கள் மீது பழி போட முடியாது.

சிபிசக்கரவர்த்தி பற்றி கொஞ்சம் விளக்கவும்?-ஏரலான், மயிலாப்பூர்

உங்கள் கேள்வியைப் பார்த்தவுடன் அபிதான சிந்தாமணியைப் புரட்டினேன்.

ஆ. சிங்காரவேலு முதலியார் அவர்கள் கொடுத்திருக்கிற விளக்கம் இது. இவன் சூரியகுலத்து அரசனேயாம். இப்பெயர் கொண்ட ஒருவன் சந்திரகுலத்திலும் இருந்திருக்கின்றான். இவன் வனத்தில் இருக்கையில் தேவர் இவனது தவத்தைச் சோதிக்க இந்திரன் வேடனாகவும், அக்னி தேவன் புறாவாகவும், உருவடைந்து அரசன் காண கேவடன் புறவைத் துரத்தி அரசனுக்கு நேராக வரப்புறா அரசனிடம் அபயமடைந்தது. அரசன் வேடனை நோக்கி வேறு இறைச்சி தருகிறேன். இதை ஒழஞ்க என வேடன் உடன்பாரது இதனைத் தராது மறுக்கின. அப்புறாவின் நிறையுள்ள உன்னுடம்பின் இறைச்சி தருக என, அரசன் மகிழ்ந்து அந்தப்படி ஒரு துலையிட்டு அதில் புறாவை நிறுத்தித் தன்னுடலின் இறைச்சி முழுவதுமும் அறத்திட்டன். இடுந்தோறும் புறவு இட்ட தட்டுத் தாழ்ந்தே வர அடம்பில் வேறு மாமிசம் இல்லாமையால் அரசன்தானே துலையில் ஏறத்தேவர் இருவரும் களித்து அரசனுக்குத் தரிசனம்தந்த உடலில் தசை வளரச் செய்து கவர்க்கம் அளித்தனர்.

மக்களின் தலைவலிக்கும், அரசின் தவைலிக்கு என்ன காரணம்?-நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக் கரூப்பூர்

இன்றைய சூழ்நிலையில், மக்களின் தலைவலிக்கு அரசு காரணமாக இருக்கிறது / அரசன் தலைவலிக்கு மக்கள் காரணமாக இருக்கிறார்கள் / இருதரப்புமே சத்தியமே. என்கிற மரத்தரையைச் சாட்பிட்டால் தலைவலி குணமாகும்.

உலகம் விசித்திரமானதா?-கோ.ராமதாஸன், ஆடுதுறை

இன்றைய நிலைமை அப்படித்தான் தோன்றுகிறது. நாய்தான் தன் வாலை ஆட்ட வேண்டும்! வால் நாயை ஆட்டிக் கொண்டிருக்கிறது.

தலைக்கனம், தன்னம்பிக்கை என்ன வித்தியாசம்?-சி.எஸ்..தமிழ் செல்வன், கோவை

இது என்னால் முடியும் என்று நினைப்டுபது தலைக்கனம்.

மனிதன் வாழ்க்கையில் பூனை மட்டும் எப்படி அபசகுணம் ஆனது?-விக்கிரமாதித்தன் ஜேடர் பாளையம்.

முற்காலத்தில் யாரோ ஒருத்தர் வீட்டை விட்டுப் புறப்படும் போது பூனை ஒன்று குறுக்கே ஓடியிருக்கும். போன காரியம் நடந்திருக்காது. உடனே அதற்கும் பூனைக்கும் முடிச்சுப் போட்டிருக்கும் அவருடைய மனம் இதை அடுத்தவரிடம் சொல்லியிருப்பார். இப்படித்தான் இது போன்ற மூட நம்பிக்தகைகள் முளைவிட ஆரம்பிக்கின்றன.
இப்போது எந்த அளவுக்கு அது வளர்ந்திருக்கிறது தெரியுமா? எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் எங்காவது புறப்படும் போது வானொலி பெட்டியில் மியாவ்... மியாவ்... பூனைக்குட்டிடி என்ற சினிமாப் பாட்டு சத்தம் கேட்டால்கூட பயணத்ததை நிறுத்தி விடுவார்.

காதலன் - கணவன் ஒப்பிடுக?- கவிச்சுடர் இளங்கதிரவன், கோவை

காதலன் கேட்டதை எல்லாம் வாங்கிக் கொடுப்பான்.

கணவன் கேட்டால் எரிந்து விடுவான்.

உயிரையே கொடுப்பேன் என்பான் காதலன்.

உயிரை வாங்குறியே ? என்பான் கணவன்!

உண்மையான கணவன் காதலன் மாதிரி நடந்து கொள்ள வேண்டும். அதுவே உன்னதமான இல்வாழ்க்கை!

0 comments:

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது